உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.திருச்சியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: இலங்கை மொத்த கடற்பரப்பையும் தன்னுடையது போல் நினைத்துக் கொண்டு தொடர்ச்சியாக கைது செய்கிறது.தமிழர்கள் எங்களுடைய மீனை திருடிக் கொண்டு போகிறார்கள் என்று இலங்கை சொல்கிறது.இதுபோல் ஒரு நடிகரை பார்க்க மக்கள் கூடுவது தவறு அதைத்தான் நடிகர் அஜித் சொல்கிறார். அமெரிக்கா போல் அனைத்து தலைவர்களுக்கும் பேச ஒரு இடம் நேரம் கொடுத்து அதை உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i903vu1y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் நிகழ்வு போல், பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது. ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. கடுமையான தண்டனைச் சட்டம் மூலம்தான் இதனை தடுக்க முடியும். நிறைந்த மது போதையே இது போன்ற குற்றங்கள் தொடர்வதற்கு காரணம்.ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காத திமுக, அதிமுக சமூகநீதி, சமத்துவம் , துரோகம் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள். ஜெயலலிதா காலில் விழுந்ததோடு கார் டயரிலும் விழுந்தவர்கள்தானே அதிமுகவினர். அவர்கள் யாராவது நிமிர்ந்து நின்றதை பார்த்திருக்கிறீர்களா . இது விமர்சனம் அல்ல உண்மை . தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடப் பங்கீட்டில் இருந்து அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்கிற பெயரில் எடுத்துக் கொடுத்ததோடு மீதம் இருக்கும் இடத்திலும் அருந்ததியர்களுக்கு முன்னுரிமை என்று கையெழுத்து போட்டதுதான் சமூக நீதியா? 2026ல் கட்சிகளுக்கு போட்டிகள் கிடையாது. கருத்தியலுக்கு தான் போட்டி.இலவசத்தை ஆதரிப்பவர்களுக்கும் இலவசத்தை எதிர்ப்பவர்களுக்கும் தான் போட்டி. நாங்கள் திராவிடர்கள் என்று நினைப்பவர்களுக்கும் இல்லை. நாங்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த இனமான தமிழர்கள் என்று நினைப்பவர்களுக்கும் தான் போட்டி. இந்தியர்களுக்கு மும்மொழி கொள்கை திராவிடர்களுக்கு இரு மொழி கொள்கை எங்களுக்கு கொள்கை மொழி ஒரே மொழி அது எங்கள் தாய்மொழியான தமிழ் மொழி. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Kasimani Baskaran
நவ 05, 2025 04:06

சட்டம் போடலாம். இதே கோர்ட் மூலம் ஒருவனையும் தண்டிக்க முடியாது. அப்படியே முடிந்தாலும் பல மாமாங்கமாகும். பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தால் இது போன்ற பிரச்சினை வராது. நல்லவர்களுக்கு ஓட்டுப்போட்டால் நிர்வாகமும் சரியாக இருக்கும். சார்களை வைத்து ஆட்சி நடத்தும் தீம்க்காவால் ஒரு பொழுதும் நல்லாட்சியை கொடுக்க முடியாது.


ngopalsami
நவ 05, 2025 03:07

அண்ணன் சீமான் அவர்களே, பொது மக்களும் குறிப்பாக பெண்கள் தம் பாதுகாப்பை மனதில் கொண்டு முன் பின் தெரியாத ஆண்களிடம் உறவு, பாதுகாப்பற்ற இடங்களுக்கு இரவு நேரங்களில் செல்வது இவற்றை எல்லாம் தெவிர்க்க வேண்டும். தங்களின் பாதுகாப்பை அவரவர் மனதில் கொண்டு வாழ்ந்தால் மிகவும் நலமே.


ஜெகதீசன்
நவ 04, 2025 22:03

சமயத்துல சரியாக தான் பேசுகிறார்


தாமரை மலர்கிறது
நவ 04, 2025 20:30

சீமான் தமிழக அதிபர் ஆனவுடன், பாலியியல் குற்றவாளிகளுக்கு ரெண்டு நாளில் தூக்கு தண்டனை என்று தீர்ப்பு கொடுத்து விடுவார். கவலை வேண்டாம். அரைவேக்காட்டு தமிழ் குஞ்சுகளுக்கு ஒரே சந்தோசம் தான்.


சூர்யா
நவ 04, 2025 19:07

மு.க. முத்து இறப்பு குறித்து விசாரிக்க சென்றதாக கூறி என்றைக்கு ஸ்டாலின் இல்லத்திற்கு அண்ணன் சீமான் சென்றாரோ அங்கு அவரது பாச மழையிலோ இல்லை வேறு மழையியோ நனைந்து அன்று முதல் ஸ்டாலினின் உடன் பிறவா உடன்பிறப்பாகவே அண்ணன் சீமான் மாறிவிட்டார்.


Sun
நவ 04, 2025 19:01

அதே போல் ஆசை வார்த்தைகள் கூறி பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு குறிப்பாக பிற மாநிலங்களில் வாழும் பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு நடு ரோட்டில் வைத்து கசையடி கொடுப்பது மாதிரியான சட்டங்களை கொண்டு வர வேண்டும்.


திகழ்ஓவியன்
நவ 04, 2025 19:00

திராவிடம் எங்களுக்கு படிப்பறிவு கொடுத்தது , சமூக அந்தஸ்து கொடுத்தது , கடவுளை வணங்க கோயில் உள் சென்று வழிபட உதவியது . பட்ட தாரிகளுக்கு , பட்டா தாரிகளுக்கு தான் வோட்டு என்று இருந்ததை எல்லோருக்கும் என்று ஆக்கியது எல்லாம் திராவிடம் , தமிழ்த்தேசியம் செய்தது என்ன சொல்லுங்கள்


ems
நவ 04, 2025 23:06

திராவிடம் எங்களுக்கு படிப்பறிவு கொடுத்தது = டாஸ்மாக் /டாஸ்மாக் என்று படிக்க கற்று கொடுத்துள்ளது. சமூக அந்தஸ்து கொடுத்தது=ஜாதி கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. கடவுளை வணங்க கோயில் உள் சென்று வழிபட உதவியது = கடவுளே இல்லை என்று கோயில் வாசலில் எழுதி வைத்தது பட்ட தாரிகளுக்கு , பட்டா தாரிகளுக்கு தான் வோட்டு என்று இருந்ததை எல்லோருக்கும் என்று ஆக்கியது = கள்ள ஓட்டு போட்டு ஊழலை வளர்த்தது தமிழ்த்தேசியம் செய்தது என்ன = உங்களை நம்பி தமிழகத்தை தந்தது


D Natarajan
நவ 04, 2025 18:45

கடும் சட்டங்கள் மட்டும் போதாது , கேடுகெட்ட வக்கீல்கள் , நீதித்துறை சரியாக செயல் படவேண்டும். பணம் இருந்தால் bail , அதோடு வழக்கு முடிந்தது. எத்தனை குற்றவாளிகள் பெயிலில் சுற்றி திரிகிறார்கள் , கேஸ் முடியும் வரை யாருக்கும் பெயில் கொடுக்கக் கூடாது . இந்தியாவில், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது மிகவும் அரிது . உதாரணம் ப சி வழக்கு.


திகழ் ஓவியன்
நவ 04, 2025 18:35

பாத்து... பல்லு படாமல் திட்டணும் Mr.சீமான்...


V Venkatachalam, Chennai-87
நவ 04, 2025 18:28

டாஸ்மாக் கடைகளை உடைக்குறீங்க. நல்ல சமாசாரம். அது மாதிரி இந்த குற்றத்தில் ஈடுபட்டவன்களை காவல் நிலையத்தில் புகுந்து வெளியே இழுத்து வந்து பப்ளிக்கில் வைத்து தீர்த்து கட்டுங்கள். அவன்களுக்கு கவர்மெண்ட் கிட்டே பயம் கிடையாது. உங்க கிட்டயாச்சும் பயம் வரட்டும். ஏற்கனவே கட்டு மரம் பேனா சிலையை உடைப்பேன்னு சொன்னீங்க. இன்னிக்கு வரை அந்த சிலை வைக்க ஒரு துரும்பை கூட எடுக்காமல் பயந்து போய் விட்டுட்டானுங்க. அது மாதிரி இதையும் பண்ணுங்க. உங்க ஆளான்னு மட்டும் பாத்துக்குங்க.


சமீபத்திய செய்தி