உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்

வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

ஏற்காடு செல்லும் மலைப்பாதை வளைவுக்கு ஈ.வெ.ரா., பெயர் சூட்டியதற்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், அந்த இடத்தில் தகடூர் அதியமான் வளைவு என பிளக்ஸ் ஒட்டினர்.சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 20 கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bs) உள்ளன. இந்த வளைவுகள் மிகவும் செங்குத்தானவை. ஒவ்வொரு வளைவுக்கும் பண்டைய கால மன்னர்களின் புகழைப் போற்றும் வகையில், அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், 8வது கொண்டை ஊசி வளைவிற்கு தகடூர் அதியமான் வளைவு என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த கோடை விழாவின் போது சாலையை புதுப்பிக்கும் பொழுது எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு ஈவெரா பெயரை நெடுஞ்சாலை துறையினர் வைத்துவிட்டனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த வளைவில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ஈவெரா என்ற பெயரை அழித்து விட்டு, அதன் மீது, கருப்பு பெயின்ட் அடித்து, 'தகடூர் அதியமான்' வளைவு என, பிளக்ஸ் ஒட்டினர். போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.இது குறித்து, நாம் தமிழர் கட்சியினர் கூறியதாவது: 8வது வளைவுக்கு, 'தகடூர் அதியமான்' என பெயர் வைக்கப்பட்டிருந்தது. கடந்த கோடை விழாவின்போது நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டு ஈவெரா பெயரை வைத்துவிட்டனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வளைவிற்கு, 'தகடூர் அதியமான் பெயர் தான் இருக்க வேண்டும், என்றனர்.ஈவெரா பெயரை அழித்த நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏற்காடு திராவிடர் விடுதலை கழகத்தினர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். நெடுஞ்சாலை துறையினர், நா.த.க.,வினர் மீது நடவடிக்கை கோரிஏற்காடு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி 13 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

M.S.Jayagopal
டிச 26, 2025 19:55

ஏற்காடு மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கு முன்னர் இருந்ததுபோல் எங்களை மட்டும் எழுதினால் போதும். பெயர் எழுதுவது எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் வெட்டி வேலையாகும்.


M.S.Jayagopal
டிச 26, 2025 19:55

ஏற்காடு மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கு முன்னர் இருந்ததுபோல் எங்களை மட்டும் எழுதினால் போதும். பெயர் எழுதுவது எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் வெட்டி வேலையாகும்.


Arumugam
டிச 26, 2025 15:41

அடுத்த முறை திருட்டுப் திராவிடம் வந்தாள்.... தமிழ்நாடு என்று பெயர் மாற்றி.. திராவிட நாடு என்று பெயர் வைப்பார்.. தமிழராய் விழித்திடவும்...


sundarsvpr
டிச 26, 2025 15:21

பெயர் வைப்பது ஒரு பெரிய தவறு இல்லை. ஈரோட்டு வெங்கிடசாமி ராமசாமி யார் என்று மக்கள் நன்றாக அறியவேண்டும். வளைவு சுவரில் இவர் படம் வைத்து இன்னாரின் அசிங்க பொன்மொழியான கடவுளை கற்பித்தவன்?என்ன சொன்னார் என்ற வார்த்தையை எழுதுவதற்கு வெட்கமாய் உள்ளது வணங்குபவன் காட்டுமிராண்டி கடவுள் இல்லவே இல்லை எழுதவேண்டும். கீழே ஒரு குப்பை தொட்டி அல்லது எச்சில் தொட்டில் வைக்கவேண்டும். விருப்பட்டவர்கள் காணிக்கையை செலுத்துவார்கள், அரசுக்கு போய் சேரும்.


Barakat Ali
டிச 26, 2025 13:47

ஈவேராவை நாத்திகம் பேசியதால் இஸ்லாமியர்களும் எதிர்க்கிறார்களே ....


M S RAGHUNATHAN
டிச 26, 2025 13:41

இவர்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு அழுதார்கள். ஒரு சிறந்த தமிழ் மன்னன் பெயரை அகற்றி ஒரு கன்னடக்காரர் பெயரை அதுவும் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி, சனியன் என்றெல்லாம் இகழ்ந்தவர் பெயரை வைப்பதில் இருந்தே ஆட்சியாளர்கள் தமிழ் , தமிழர்கள் விரோதிகள் என்று நன்கு தெரிகிறது. இவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டுமா என்று யோசியுங்கள்.


Sun
டிச 26, 2025 12:13

இந்தியாவுக்கு சுதந்திரமே வேண்டாம் என்றவர், ஜின்னாவுடன் நெருக்கமாக இருந்து பாகிஸ்தானுடன் சேர்த்து திராவிட தனி நாடு கேட்டவர் அதற்காக ஜின்னாவை சிபாரிசு செய்யச் சொன்னவர் கன்னடர் ஈ.வே. ராமசாமி. இவருடைய பெயர் இங்கு சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. தங்களது உதிரத்தை சிந்தி சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., பாரதியார், சுப்ரமணிய சிவா, காமராஜர் இன்னும் எண்ணிலடங்காதோர் இங்கு தொடர்ந்து புறக்கணிக்கப் படுகின்றனர். திராவிடம் என்ற போர்வையில் தெலுங்கர்கள் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வரை இங்கு ராமசாமியும், கருணாநிதியும் மட்டும்தான் கொண்டாடப் படுவார்கள்.


ஜெகதீசன்
டிச 26, 2025 11:59

தமிழை தூற்றியவரை, இந்துக்களை அசிங்கமாக பேசியவரின் அடையாளங்களை அழிக்காமல், ஏன் அவரைஅரசு தூக்கி பிடிக்கிறது? கொடுமை.


N Annamalai
டிச 26, 2025 11:37

பெரியார் பெயரில் உள்ள அனைத்தும் தமிழக அரசின் என்று மாற்றப்பட வேண்டும் .பெரியார் சிலைகள் நீக்கப்பட்ட அதில் மழை நீர் சேகரிக்க வழி செய்ய வேண்டும் .


Rathna
டிச 26, 2025 11:36

தனது உயிரை நீடிக்க கிடைத்த நெல்லி கனியை, தமிழ் மொழி வாழ ஒவையாருக்கு கொடுத்த அதியமான் எங்கே? தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று சமஸ்க்ருத மொழியில் சொன்ன - பாஷை நபர் எங்கே?? இங்கே எல்லாமே கோணமாணல் தான் போல..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை