உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தரத்தில் சமரசம் கிடையாது; ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் திட்டவட்டம்

தரத்தில் சமரசம் கிடையாது; ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை:''45 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். எப்போதும் சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்படுகிறது, '' என, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் 1979ல் துவக்கப்பட்டது. 45 ஆண்டுக்கு மேலான பாரம்பரியத்துடன் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்கிறோம். கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி உட்பட வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என, 68 கிளைகள் உள்ளன. 50 ஆயிரம் சதுரடியில் உலகத்தரம் வாய்ந்த கிச்சன் செயல்படுகிறது. உணவு பாதுகாப்பு துறையின் விதிகளுக்கு உட்பட்டு இனிப்புகள் தயாராகின்றன.சுத்தமான நெய்யினால் தயாரிக்கும் இனிப்புகளே, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். அந்த காலம் முதல் இந்த காலம் வரை இத்தொழிலுக்கு நாங்கள் வைத்திருக்கும் சத்தியம், தர்மம் என்பது என்றுமே தொழிலில் உண்மையை சொல்வது. பாதாம் அல்வா என்றால் பாதாம் பயன்படுத்தி தயாரிப்பது, சுத்தமான நெய் என்றால் சுத்தமான நெய் பயன்படுத்துவது. எந்த இடத்திலும், எவ்விதமான சூழலிலும் கலப்படத்துக்கு இடமில்லை.வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஸ்வீட்ஸின் தரம் மட்டுமின்றி, நாங்கள் பின்பற்றும் சத்தியம். எந்த இடத்திலும் தவறியதில்லை. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே சொத்து. அதன் மூலமே வளர்ந்திருக்கிறோம்; உலகம் முழுவதும் பேசப்படுகிறோம். எக்காரணம் கொண்டும், நம்பிக்கைக்கு விரோதமாக செயல்பட மாட்டோம். தொழில் தர்மத்துக்கு விரோதமாக எப்போதும் எங்கள் தலைமுறையே எந்த செயலும் செய்யாது. எப்.எஸ்.எஸ்.ஐ., என்கிற உணவு பாதுகாப்பு நிறுவனத்தின் சட்டத்தின் கீழ் அனைத்து உணவு நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும். அனைத்து உணவு நிலையங்களிலும் வழக்கமான உணவு பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்த தயாரிப்பிலும் கலப்படம் இருப்பதாக எந்த ஆய்வக அறிக்கையும் உறுதிப்படுத்தவில்லை. ஆய்வு செய்யும்போது, மூலப்பொருட்களின் தரத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவர். இது வேறு, விற்கும் பொருளை ஆய்வு செய்வது வேறு.தரம் குறைவது கலப்படம் கிடையாது. வனஸ்பதி கலந்திருப்பதாக தகவல் எவ்வாறு வெளியானதென தெரியவில்லை; யூகத்தின் அடிப்படையில் வெளியாகியிருக்கலாம். எப்.எஸ்.எஸ்.ஐ., அறிக்கையில் கிடையாது. எவ்வித அபராதமும் விதிக்கவில்லை. தொழில் தர்மத்துடன் செயல்படுவதால், தலை நிமிர்ந்து செயல்படுகிறோம். தரத்தில் இருந்து ஒரு இஞ்ச் கூட விலகியதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

baala
ஜன 19, 2026 11:01

சும்மா பொய் எல்லாம் சொல்லாதீங்க. இந்தியாவில் எந்த பொருளில் தரம் இருக்கிறது. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். எல்லாம் கலப்படம்,


Tetra
ஜன 15, 2026 19:50

வேலை செய்றவன் ஒழுங்கா இருந்தா கலப்படத்துக்கு இடம் இருக்காது


Ram pollachi
ஜன 15, 2026 10:12

இனிப்பில் நெய் கூட வனஸ்பதி சேர்ந்திருக்கிறது.. அடுத்து சர்க்கரை கூட உப்பும் கலந்திருக்கிறது காரத்தில் இனிப்பை கலந்துள்ளார் என சொல்லலாம்.. சுவை மற்றும் மனம் கெடாமல் இருக்க பற்பல வழிகளை சமையல் கலைஞர்கள் கையாளுகிறார்கள். எப்போதும் உச்சத்தில் இருக்க முடியாது ஒரு நாள் கீழே இறங்கி வரத்தான் வேண்டும். போதும் என்ற மனம் வேண்டும் இல்லை என்றால் மொத்தமும் அழிவு....


கண்ணா
ஜன 15, 2026 08:05

இதில் நிச்சயமாக திமுகவின் பங்கு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நெய்யில் கலப்படம் இருந்தால், நெய் தயாரிக்கும் நிறுவனத்தின் மேல் நடவடிக்கை மற்றும் பத்திரிகையில் அந்த நிறுவனத்தை பற்றி எழுத வேண்டுமே ஒழிய உபயோகித்த வரின் நிறுவனத்திற்கு அவதூறு ஏற்படுத்த தேவையில்லை. இதில் திமுக திக போன்றவர்களின் ஒரு குறிப்பிட்ட சமுதாய வெறுப்பு வெளிபடுகிறது என்று தோன்றுகிறது. இந்த அவதூறு செயலை 60 வருடங்களாக எனக்கு தெரிந்த நேர்மையான நிறுவனத்தின் மீது சுமத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.


baala
ஜன 19, 2026 11:03

அவர் தயாரித்தால் இவர்கள் அதை உபயோகப்படுத்தலாமா? இவர்கள்தான் அதை நிராகரிக்க வேண்டும். தரம் என்று பொய் சொல்லுபவர்கள்.


kumaran
ஜன 15, 2026 07:30

வாடிக்கையாளர் என்ற முறையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தரத்தை பற்றி கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று அன்று புதிதாக chef என்று சொல்லக்கூடிய ஸ்வீட்ஸ் தயார் செய்பவர் முதன் முதலில் கேசரி தயார் செய்திருக்கிறார் அதற்கான நெய் சற்று குறைவாக இருந்ததால் வனஸ்பதி சேர்த்து கேசரி தயார் செய்ததும் அதில் கொஞ்சம் விற்பனையும் ஆகி இருந்தது அன்று அந்த மையத்தில் சென்னை அசோக்நகர் பிஎஸ்என்எல் எதிரே உள்ள கிளையில் அதன் இயக்குனர்களில் ஒருவர் தரத்தை பரிசோதனை செய்திருக்கிறார் அப்போது அந்த புதிய chef தான் தயார் செய்த கேசரி பற்றியும் அப்போது நெய் பற்றாக்குறையை போக்க சிறிது வனஸ்பதி சேர்த்தாக பெருமையாக சொன்னார் இதைக்கேட்ட உரிமையாளர் இன்று கேசரி எவ்வளவு விற்பனை ஆனது என கேட்க ரூபாய் பத்தாயிரம் என்று கேசியர் சொல்ல அதை கோவில் உண்டியலில் சேர்க்கவும் மீதமுள்ள கேசரியை அகற்றிவிட்டு அந்த chef க்கு கண்க்கு முடிக்கப்பட்டு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார் அந்த உரிமையாளர் அவர் பெயர் முரளி என்று நினைக்கிறேன் இது கடந்த பத்து ஆண்டுகள் முன்பு நடந்தது


Ramona
ஜன 15, 2026 05:41

அந்த கிருஷ்ணா இனிப்புகள் ,காரவகைகள்உண்மையிலேயே நன்றாக இருக்க, சமீபத்தில் திறந்த ஒரு கிளையில் வெரும் ஏமாற்றமே கிடைத்தது, எங்களுடைய குடும்பத்தினர் பலருக்கு வயிறு கோளாறு ஏற்பட்டது, பணத்தை இறைத்து கட்டடம் ஆடம்பரமா கட்டி ,நாங்க பணத்த கொடுத்து உடல் உபாதையை கண்டோம்


தியாகு
ஜன 15, 2026 00:00

இதில் அரசியல் இருக்க வாய்ப்புகள் அதிகம். கட்டுமர திருட்டு திமுக மூர்க்க கும்பலையும் மதம் மாற்றும் கும்பலையும் மகிழ்விக்க இதை செய்திருக்க வாய்ப்புகள் அதிகம்.


baala
ஜன 19, 2026 11:05

உலகில் யோக்கியர்கள் குறைவு. மனிதர்களில் திருடர்கள் இல்லை யாராவது சொல்ல சொல்லுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை