உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புது மேக்கப் போட்டு பழைய நாடகம் நடத்தும் ஸ்டாலின்: மத்திய மந்திரி கிண்டல்

புது மேக்கப் போட்டு பழைய நாடகம் நடத்தும் ஸ்டாலின்: மத்திய மந்திரி கிண்டல்

ஹைதராபாத்: “புதிய கல்விக் கொள்கை, லோக்சபா தொகுதிகள் மறுவரையறை போன்றவற்றில், உண்மையை புரிந்து கொள்ளாமல், அரசியலுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கிறார்,” என, மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி குறிப்பிட்டார்.தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவரும், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சருமான கிஷண் ரெட்டி, ஹைதராபாதில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:புதிய கல்விக் கொள்கை மற்றும் லோக்சபா தொகுதிகள் மறுவரையறை போன்றவற்றில் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இது, முழுக்க முழுக்க அரசியல் ரீதியிலானது என்பது அனைவருக்கும் தெரியும்.தி.மு.க., அரசின் ஊழல்கள், கடுமையான வரி விதிப்புகள், மின்சார கட்டணம் உயர்வு, ஸ்டாலின் குடும்பத்தின் சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றில், அரசுக்கு எதிரான மனநிலை தமிழகம் முழுதும் உள்ளது. இந்த பிரச்னையை திசைதிருப்பி, மக்களை துாண்டி விடும் வகையில் ஈடுபட்டுள்ளனர்.தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பதே தேசிய கல்வி கொள்கையின் அடிப்படை. கடந்த 1986ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த கல்விக் கொள்கையை, தி.மு.க., அப்போது எதிர்க்கவில்லை. மும்மொழி கொள்கையே சிறந்தது என, காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி கமிஷனும் பரிந்துரை செய்துள்ளது.தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தன் அரசின் மீதான மக்கள் கோபத்தை திசைதிருப்ப, புதிய மேக்கப் போட்டு, பழைய நாடகத்தை தி.மு.க., நடத்துகிறது.புதிய கல்விக் கொள்கையானது, அனைத்து மொழிகளையும் ஊக்குவிக்கிறது. தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், இதெல்லாம் தெரிந்தும், புரிந்தும், தி.மு.க.,வும், காங்கிரசும் தேர்தல் நாடகம் நடத்துகின்றன.தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தியதில் தவறில்லை. ஆனால், பொய் தகவலை பரப்புவது தான் தவறு.முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்பிறகே, தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். அதிலும், தொகுதிகள் குறைக்கப்படாது என, மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.இருப்பினும், இந்த விஷயத்தில் ஸ்டாலின் புரிந்து பேசுகிறாரா, புரியாமல் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், தேர்தலுக்காக பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Saravanan
மார் 18, 2025 05:40

It will be good to know if gujarat and bihar provide with pm shree funds? Can you share the fact on this


K.Ramakrishnan
மார் 17, 2025 20:41

மாநிலத்துக்கு இது பொருந்தும் என்றால் மத்தியில் ஆட்சி நடத்துகிறவர்களுக்கும் பொருந்தும் அல்லவா....


Pavanan
மார் 17, 2025 16:27

Fact check: Till now Gujarat has not joined PM Shree. In Gujarat they follow still only one language policy. Bihar also still follows only one language policy. In UP more than 28,000 Govt schools shut down in the last 5 years and approval given for more than 15,000 private CBSE schools. What’s the fun in 3 language policy?


R.Rajendran Rathnasamy
மார் 17, 2025 14:14

Well said by the minister. It is all due to Stalin"s Ego and purely politics.Any good thing brought by Central govt he will be the first person to object without knowing and studying the content.


kumar
மார் 17, 2025 14:08

நான் நெனச்சேன் நீ கரெக்ட்டா சொன்ன ஒரு நாள் குள்ளநரி சாயம் வெளுக்கும்.


Anand
மார் 17, 2025 10:40

டாஸ்மாக் டூமில்ஸ் ஆதரவு இருக்கும்வரை இதுபோன்ற மேக்கப் போட்டு பழைய நாடகங்கள் நித்தம் நித்தம் நடைபெறும்.


ஆரூர் ரங்
மார் 17, 2025 10:40

எல்லோரது கோரிக்கைகளுக்கும் ஏற்றவாறு வடிவமைத்த முழுமையான சென்சஸ் நடத்துவது இனி சாத்தியமேயில்லை. சென்சஸ் நடத்தாமல் தொகுதி மறுவரையறை நடத்த சட்டத்திலும் இடமில்லை. இதெல்லாம் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கும் அ யோக்கியர்களுக்கு நன்கு தெரியும். மக்களது அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப தொகுதி, ரூ, ஹிந்தி என தினமும் ஒரு நாடகம். ( வேஷம் ஓகே. ஆனா கொண்டை நல்லாயில்ல . பொருத்தமாயில்லை)


Ray
மார் 17, 2025 09:13

தொகுதிகள் குறைக்கப்படாது என, மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. அப்படியானால் நீங்கள் கட்டிய நாடாளுமன்றத்தில் எண்ணூருக்குமேற்பட்ட இருக்கைகளை அமைத்தது கும்பமேளா அகோரிகளை அமரவைக்கவோ? அரசியலில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து ஏற்ற இறக்கண்களைக் கண்ட ஸ்டாலினுக்கு இவர்கள் பித்தலாட்டம் புரியாதா?


கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 17, 2025 08:33

ஒன்றிய அமைச்சர்கள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் கண்டால் பயம். அச்சத்தில் பிதருகிராகள்.


raja
மார் 17, 2025 08:25

தமிழர்கள் செண்டிமெண்டல் இடியட்ஸ் என்று விஜகந்த் நடித்த ரமனாவில் வசனம் வரும்...அதை இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் பிற கொல்லையனும் அவன் குடும்பம் மற்றும் பரம்பரை ருவா இறநூறு குடும்ப பரம்பரை கொத்தடிமைகள் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.. தமிழர்கள் இனியாவது விழித்து கொண்டு இந்த கொள்ளையர்களை அடித்து விரட்ட வேண்டும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை