உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்

அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பிரதமர் மீன்வளத் திட்டம் ஆகியவற்றுக்கு மாநில அரசு தான் அதிகமாக நிதி அளிக்கிறது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q6dszok0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0படையப்பா படக் 'காமெடி' போல 'மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும்.இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பா.ஜ., அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Natarajan Ramanathan
ஜூன் 15, 2025 23:35

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஒரு மாநில முதல்வர் பச்சையாக பொய் சொல்கிறார். ஆனால் எந்த ஊடகமும் கேள்வியே கேட்பதில்லை. கேவலமான மாநிலம். கேவலமான ஊடகங்கள்.


Natanasabapathy pillai
ஜூன் 15, 2025 17:06

அதிகமாக கொள்ளை அடிப்பதும் தமிழக அரசு தான் .


venugopal s
ஜூன் 15, 2025 15:33

வேலைக்கே போகாமல், பத்து பைசா சம்பாதிக்க துப்பில்லாமல் வெட்டியாக வீட்டில் இருந்தாலும் குடும்பத்தலைவர் என்ற பெயர் அவருக்கு தானே என்பது போல் இருக்கிறது மத்திய பாஜக அரசு!


N Sasikumar Yadhav
ஜூன் 15, 2025 13:20

கோபாலபுர குடும்பம் விஞ்ஞானரீதியாக ஆட்டய போட்டு பல தலைமுறைகளுக்கு சொத்துக்கள் சேர்க்க படியளப்பது தமிழக மக்கள் .


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 15, 2025 07:36

கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் முதல்வர் ...இவரின் தந்தை ஊழலுக்கு நெருப்பானவர் ...அரசு பணத்தை ஒருகாசு கூட தொடாதவர் ...தான் கதை வசனம் எழுதி சம்பாதித்த பணத்தைக்கூட வீட்டிற்கு கொண்டு செல்லாமல் ஏழைகளுக்கு வாரிக்குடுத்த வள்ளல் ..அந்தவழியில் வந்த சுடலை வருமானத்தை படி அளக்கிறார் ,


Rmblr
ஜூன் 14, 2025 21:54

"They’re not giving anything for free — they’re just collecting taxes and returning only a portion of it.


ப.சாமி
ஜூன் 14, 2025 21:06

அதிகமாக படியளப்பதும் தமிழகம் தான்.கொள்ளையடிப்பதும் தமிழகம் தான்.


Ganapathy Subramanian
ஜூன் 14, 2025 20:44

மத்திய அரசின் நிதியே வேண்டாம் என்று சொல்லிவிட்டு நூறு சதவீத மாநில அரசின் நிதி மூலமாக கட்டுமரத்தில் பெயரை போட்டு செயல் படுத்த வேண்டியதுதானே?


NBR
ஜூன் 14, 2025 20:30

Jal Jeevan plan- Central Government project. Implementation by State Government but funded by Central is not properly d by the state. More bribe is collected by the state government officials also delayed for collecting bribe.


சுரேஷ் பாபு
ஜூன் 14, 2025 20:08

மத்திய அரசு 60% கொடுத்தால் மாநில அரசு 40% கொடுக்கிறது என்றே வைத்துக் கொள்வோம் - ஆனால் உங்கள் புகைப்படம் மற்றும் உங்கள் மகன், அப்பா புகைப்படங்களைப் போட்டு விளம்பரப்படுத்திக் கொள்கிறீர்கள். நியாயமாக மோடிஜி அவர்களின் புகைப்படம் அல்லவா பிரதானமாக இருக்க வேண்டும்?


சமீபத்திய செய்தி