உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டுமனையை பதிவு செய்ய ரூ. 2 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் சார் பதிவாளர்

வீட்டுமனையை பதிவு செய்ய ரூ. 2 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் சார் பதிவாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தாம்பரம்: வீட்டுமனையை பதிவு செய்ய, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, தாம்பரம் பெண் சார் - பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் பிரவின்குமார். இவர், நெடுங்குன்றத்தில் உள்ள, 2,400 சதுர அடி நிலத்தை பதிவு செய்ய, தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலித்து பதிவு செய்ய, சார் - பதிவாளர் ரேவதி, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பத்திரப்பதிவின்போது, 2 லட்சம் ரூபாய் தருவதாகவும், மீதி 8 லட்சத்தை பத்திரம் வாங்கும்போது, தருவதாக கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவின்குமார், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று, தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்தனர். அப்போது, லஞ்ச பணத்தை வாங்கிய ரேவதியை, கையும் களவுமாக கைது செய்தனர். ரேவதிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Muralidaran
நவ 20, 2025 14:20

பல கோடி லஞ்சம் வாங்குபவர்களில் ஒரே ஒருவரை கைது செய்திருப்பது சற்றே ஆறுதலாக இருந்தாலும் எப்படி முற்றிலும் லஞ்சத்தை ஒழிப்பது ?


Ramona
நவ 14, 2025 12:36

அபரிமிதமான லஞ்சம் கையில் புழக்கமிட்டால் அல்லது சேர்ந்தாலோ இப்படி தான் உடம்பு வீங்கிடும், ஆனால் ஒரு வியாதியும் வராது அது எப்படியென்பதே ஆச்சரியமாக இருக்கு ,


Matt P
நவ 14, 2025 12:11

ஆட்சியிலிருப்பவர்களே பெண்களுக்கு மாசா மாசா பணம் இலவச பயணம் என்று லஞ்சம் கொடுத்தால் தேர்தல் வரும்போது கவனிப்பார்களே என்பதற்கு தானே.


Matt P
நவ 14, 2025 12:07

தவறு செய்தபோது தைரியமான மனம், மானம் போகும்போது குலுங்க தான் செய்கிறது. படத்தை பார்த்தஆல் அப்படி தான் தெரிகிறது. இயற்கையை வெல்வது அவ்வளவு எளிதல்ல என்று இனிமேலாவது உணர்ந்தால் சரி.


baala
நவ 17, 2025 10:05

மானம் என்றால் ?


Natchimuthu Chithiraisamy
நவ 14, 2025 11:38

சம்பளம் உறுதி வேலை செய்யவேண்டியது இல்லை. போலீஸ் ஒவ்வொருநாளும் அரசு சம்பளத்தோடு அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்கிறார்கள்.


seshadri
நவ 14, 2025 11:31

தமிழ் நாட்டில் உள்ள எல்லா அலுவலகங்களும் லஞ்ச அலுவலகங்கள்தான் வெவேறு பெயர்களில் இயங்குகிறது. அங்கு வேலை செய்யும் பியூன் முதல் கொண்டு மேல்மட்ட அதிகாரி வரை லஞ்சத்தில் திளைப்பவர்கள்தான். லஞ்சம் கேட்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லை.


Amar Akbar Antony
நவ 14, 2025 11:19

அயோக்கியத்தனம் துரோகம் அடுத்தவர் மனைவி கணவர் மீது காமம் உடன் பணியிலுள்ளவர்கள் மீது கள்ளத்தொடர்பு திருட்டுத்தனம் அகம்பாவம் பழிக்கு அஞ்சாமை பொதுமக்கள் மீது கிஞ்சித்தும் கரிசனம் இல்லாமை எல்லாவற்றுக்கும் மேலாக கைகளில் புரலும் அபரிமிதமான இலஞ்சப்பணம் அதன்மூலம் தன் குழந்தைகளை இலட்சங்கள் கொடுத்து ஆடம்பர பள்ளி கல்லூரிகளில் படிக்கவைத்தல் என்று சமூகத்திற்கும் செய்யும் வேலைக்கு எதிராக செயல்படும் இவர்போன்ற எண்ணற்ற அரசூழியர்கள் நிச்சயம் அமைதியின்றி கடும் நோயுடன் வாழ்வை கழிக்கவேண்டும் என்பதே என்னைப்போல் உள்ள பொதுமக்களின் சாபம்.


A P
நவ 14, 2025 11:14

தினமலர் வாசகர்களின் கருத்துக்களை படித்தார்களே ஆனால் போதும், இனி எவனும் லஞ்சம் வாங்க மாட்டான். ஏனென்றால், இப்படி லஞ்சப் பிச்சை வாங்கி கேவலமான பிழைப்பு ....


NBR
நவ 14, 2025 11:13

Women asking for equal rights for all these stupidity activities.


பாமரன்
நவ 14, 2025 11:05

இதுகல்லாம் திருந்தாதுக... இதுவரை எத்தனையோ பேர்... கிட்டத்தட்ட டெய்லி ... பிச்சை எடுத்து மாட்டியதா ஃபோட்டோ போட்டு மலர் செய்தி வெளியிடுகிறது... பாராட்டுக்கள்... ஆனால் ஊர்க்கெழவி கணக்கா ச்சூ சொல்லிட்டு போகாமல் அவர்கள் அத்தனை பேரும் இன்னும் வேற எடத்துல ஜாப்ல இருந்துட்டு கலெக்சனை விட்ட இடத்தில் இருந்து கண்டினியூ பண்றாங்களா... அல்லது பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டதான்னும் அப்பப்போ போட்டால் நல்லாயிருக்கும்... இல்லைன்னா நம்ம சென்ட்ரல் கம்பெனி ஏஜெண்டுகள் சீபீபீபீபி அம்லுஅக்கா ஐடி துறைகள் நடத்தும் காமெடி ரெய்டுகளில் ஒன்னாவே பார்க்க வேண்டும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை