உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகன் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார்

மகன் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார்

கடலுார்: கடலுாரில், போதை மறுவாழ்வு மையத்தில் இறந்த, மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.கடலுார், திருவந்திபுரத்தை சேர்ந்தவர் சிவா,37; கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கடலுாரில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மறுவாழ்வு மையத்தில் கடந்த 11ம் தேதி துாக்கில் தொங்கிய நிலையில் சிவா இறந்து கிடந்தார்.தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் மங்கவரம், திருப்பாதிரிப்புலியூர் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ