உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேசுங்க: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேசுங்க: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: 'தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்' என கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

இந்தியாவின் பலம்

சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: இந்தியாவின் பலம். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். எண்ணிக்கை மட்டுமல்ல.இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தபட்ட விவகாரம். தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. மாநிலங்களை ஒன்றிணைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. இந்த கூட்டத்தில் இருந்து தொகுதி மறுசீரமைப்புக்கான எதிர்ப்பு துவங்கும். மத்திய அரசின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் கொள்கையை நடைமுறைப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன. தேசத்திற்கான நமது கடமையை நிறைவேற்றினோம். தற்போது தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நாம் தண்டிக்கப்பட்ட உள்ளோம். தொகுதி மறுசீரமைப்பே தற்போது முக்கிய பிரச்னையாக இருக்கிறது. நமது பார்லிமென்ட் பிரதிநிதித்துவம் குறைந்தால், நமக்கு உரிமையான நிதியை இழக்க நேரிடும்.நமது அரசியல் குரலையும் இழந்து விடுவோம். இந்த சூழலின் அபாயத்தை கருத்தில் கொண்டு தான், தமிழக முதல்வர் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார். நிதிக் கொள்கை, மொழிக்கொள்கை, கலாசார கொள்கை, இப்போது பிரதிநிதித்துவத்தை நிர்ணயிக்கும் பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடுகள், நமது கூட்டாட்சி முறையையும், ஜனநாயக நடைமுறைகளையும் சிதைப்பதாக உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

போராடுவோம்

கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனை தான் தொகுதி மறுசீரமைப்பு. டில்லியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.டில்லியில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பா.ஜ., நம்மை பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன்.மத்திய அரசின் நிதிப் பங்கீட்டிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தைப் போலவே மக்கள் தொகையை கட்டுப்படுத்திய பிற மாநிலங்களுக்கும் நிதிப்பங்கீட்டில் அநீதி இழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாததால் மத்திய அரசு விருப்பம் போல் சட்டங்களை நிறைவேற்றுகிறது. நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தும் வகையில் கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம், ஹைதராபாத்தில் நடத்தப்படும்:இவ்வாறு அவர் பேசினார்.

Gallery

நவீன் பட்நாயக் பேச்சு

கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பேசியதாவது: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் லோக்சபா தொகுதிகளை ஒடிசா இழக்கும். இது, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அதை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் போராடும்.நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம். வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் நாம் அளித்த நேர்மறையான பங்களிப்பின் காரணமாக, மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்களை தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தண்டிக்கக்கூடாது. நமது ஜனநாயகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த விவகாரம் பற்றி அனைத்து கட்சிகளையும் ஆலோசித்த பிறகே, மத்திய அரசு தொகுதி மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பெயர்ப்பலகை

கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் பெயர்களை, அவர்களது இருக்கை முன் அவரவர் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு பெயர்ப்பலகை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Esan
மார் 22, 2025 19:28

கூட்டத்தில் பங்கேற்றவர்களில் கனிமொழி கருணாநிதி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்.


Bala
மார் 22, 2025 14:50

MR KERALA CM DONT DUMP YOUR STATE WASTE IN TAMILNADU. WE STRONGLY OPPOSE THIS KIND OF FILTHY ACTIVITIES FROM YOUR STATE


Madras Madra
மார் 22, 2025 13:58

மக்கள் பிரிச்சினைகளை பேச எப்பவாச்சும் இது மாதிரி கூடி கூடி பேசியிருக்கீங்களா ?


Balasubramanian
மார் 22, 2025 13:37

அது சரி தெலுங்கானா முதல்வர் ரேவந்த்தும் பஞ்சாப் முதல்வர் மான் உம் எந்த மொழியில் பேசிக் கொண்டனர்?!


Kumar Kumzi
மார் 22, 2025 13:23

நொண்டி கூட்டணி உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு பால் ஊத்த சேர்ந்திருக்கானுங்க


Nedumaran
மார் 22, 2025 12:57

மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் தான் மக்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். எம்.பி -களின் எண்ணிக்கை குறைவதால் எந்த ஒரு நஷ்டமுமில்லை. மாறாக அரசுக்கு எம்.பி-களின் சம்பளம் மற்றும் பென்ஷன் மிச்சம் ஏற்படும்


Ganapathy
மார் 22, 2025 12:53

எம்பி மற்றும் எம்எல்ஏ போன்ற பதவிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையாகக் கொண்டு வரையறுத்தால்தான் மக்களுக்கு நீதி கிடைக்கும். மக்கள் சதியே புரிந்து கொள்ளவேண்டும்..இன்றுவரை பெரியார் அணை பிரச்சனையை தீர்க்கவக்கில்லை. மருத்துவக்கழிவை ஏன் கொட்டுகிறாய் இங்கு என கேரள முதல்வனை நேரில் கேட்க துணிவில்லை. கேரளா நமது எல்லைகளில் புதிய குறியீடுகள் இட்டு தனது எல்லைகளை திருட்டுத்தனமாக விரிவு படுத்துவது கூட தெரியாத முதல்வர். கேரள எம்பிக்களால் ரயில் சேவை மூலம் வஞ்சிக்கப்பட்ட மேற்கு வடமேற்கு தமிழகத்திற்கு இன்றுவரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நியாயம் வாங்கித் தர துப்பில்லை. தமிழக மக்களை எதாவது பொய்யான மடத்தனமான காரணத்தை கூறி பதட்டத்துடன் ஒரு தனிநாடு போல வைத்திருந்து தனது ஆட்சியின் தோல்வியை ஊழலை மறைக்க எண்ணும் முதல்வர் . தமிழகத்தின் சட்ட ஒழுங்கைப்பற்றி கேள்வி கேட்கும் எதிர்கட்சிகளை கிண்டல் செய்வதும் கைது செய்வதும் சில கொலைகள் நடப்பதை எதோ சாதாரணவிஷயம்போல நியாயப்படுத்துவதும் ஆணவம்மிக்க நடத்தைகான சான்றுகள்.


ஆரூர் ரங்
மார் 22, 2025 12:42

"சேட்டா, நீங்க அனுப்புன குப்பை லாரி, மருத்துவக் கழிவு, இறைச்சிக் கழிவு லாரி, தெருநாய் வண்டிகள் வந்துவிட்டன. நாங்க அனுப்புன மணல் லாரி, கல் லாரி, ரேசன் அரிசி லாரி, கனிம வளங்கள் லாரி எல்லாம் வந்ததா.?


Varadarajan Nagarajan
மார் 22, 2025 12:40

மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை மக்கள்தொகையின் அடிப்படையில் அல்லாமல் வெறு எதன் அடிப்படையில் அமயவேண்டும். மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம்முதல் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றது. நாடாளுமன்றத்திற்கு சென்று இவர்கள் மக்கள் பிரச்சனைகளையா பேசுகின்றார்கள். இவர்கள் அரசியல் பிரச்சனைகளை மனதில்கொண்டு எதெற்க்கெடுத்தாலும் போராட்டம், வெளிநடப்பு என அலைகிறார்கள். ஒருமுறை பதவிவகித்தால் காலகாலத்திற்கு இவர்களுக்கு வழங்கக்கப்டும் சலுகைகள் நிறுத்தப்பட்டு பதவிக்காலம்வரை மட்டும் என அறிவித்தால் மக்கள் வரிப்பணம் விரயமாகாது. இந்த கூட்டத்தைப்போல் காவிரி நதிநீர் பங்கீடு, முல்லை பெரியார் நீர் பிரச்சனை, மருத்துவக்கழிவுகள் கொட்டப்படும் பிரச்சனை, மாநிலங்களுக்கு இடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் கடத்தல், நாட்டின் பாதுகாப்பில் மாநிலங்களின் பங்கு என அனைவரையும் அழைத்து ஆக்கபூர்வமாக பேசலாமே


M Ramachandran
மார் 22, 2025 12:30

குருடர்கள் யானையை தடவி கண்ட கதைய்ய தான்.


முக்கிய வீடியோ