உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாம்பரம் - திருச்சி பொங்கல் சிறப்பு ரயில்

தாம்பரம் - திருச்சி பொங்கல் சிறப்பு ரயில்

சென்னை:பொங்கல் பண்டிகையை ஒட்டி, தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று முதல் ஜன் சதாப்தி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.தெற்கு ரயில்வே அறிக்கை: திருச்சியில் இருந்து இன்றும், நாளையும், 10, 11, 12, 13, 17, 18, 19ம் தேதிகளிலும் அதிகாலை 5:35 மணிக்கு புறப்படும் ஜன் சதாப்தி சிறப்பு ரயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் தாம்பரத்தில் இருந்து இன்றும், நாளையும், 10, 11, 12, 13, 17, 18, 19ம் தேதிகளிலும், மாலை 3:30க்கு புறப்பட்டு, இரவு 11:35 மணிக்கு திருச்சி செல்லும். செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும் இந்த ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து வியாழன் தோறும் காலை 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் அதிகாலை 3:45க்கு திருச்சி செல்லும் திருச்சியில் இருந்து நாளை முதல் ஞாயிறு தோறும் அதிகாலை, 5:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 9:15 மணிக்கு ஆமதாபாத் செல்லும். மறு அறிவிப்பு வெளியிடும் வரை, இந்த ரயில் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை