உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரபரப்பான அரசியல் சூழலில் கூடியது தமிழக சட்டசபை: கரூர் சம்பவத்திற்கு இரங்கல்

பரபரப்பான அரசியல் சூழலில் கூடியது தமிழக சட்டசபை: கரூர் சம்பவத்திற்கு இரங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மற்றும் கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக சட்டசபை கூட்டம் இன்று (அக் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. கரூர் துயர சம்பவம் உட்பட பல்வேறு பிரச்னைகளை, சட்டசபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் 17ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்.இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் கவர்னர் கணேசன், இ.கம்யூ., மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பீலா வெங்கடேசன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது. நாளை மீண்டும் சட்டசபை கூடி, கூடுதல் மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம், 16ம் தேதி வரை நடக்கும். விவாதத்திற்கு, 17ம் தேதி பதில் அளிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Vasan
அக் 14, 2025 15:37

அப்படியே மறைந்து போன கீழ்கண்டவற்றிற்கும் இரங்கல் தெரிவிக்கலாம்: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உண்மை, நியாயம், நீதி, நேர்மை,


Sivaram
அக் 14, 2025 14:38

அப்பாவு, அப்பா சொல்படி நடப்பார், திராவிட மாடல் அப்பா அவரின் குடும்ப உறுப்பினர்கள், மகன், மனைவி, மற்றும் தங்கை சொல்படி நடப்பார், தமிழன் மற்றும் உடன்பிறப்புகள் கடைசி வரை உழைக்காமல் கொத்தடிமையாய் இருப்பார்கள் வாழ்க சமூக நீதி


sankar
அக் 14, 2025 14:27

அழுகுணி அரசியல் செய்தே ஆட்சிக்கு வந்தவர்கள்


sundarsvpr
அக் 14, 2025 14:06

இரங்கல் தீர்மானம் கூற சட்ட மன்றம் இயக்குவது தேவையற்றது. காரணம் பிறப்பு இறப்பு இயற்கை நியதி. அப்படி தேவை என்று கருதினால் நாட்டில் இறந்த எல்லோருக்கும் இரங்கல் தீர்மானம் மன்றத்தில் நிறைவேற்றவேண்டும்.


Sridhar
அக் 14, 2025 13:26

எண்ணுர்ல ஏழு பெரு இறந்தாங்களே அவங்க உயிரெல்லாம் ஒங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா? அட, உங்கள் நிர்வாகத்தின் கவனக்குறைவால் அலட்சியப்போக்கால் விஷத்தை மருந்தாக குடிக்க நேர்ந்து இறந்த அந்த இளம் குழந்தைகள் உயிரும் உங்களுக்கு அலட்சியமாக போய்விட்டதா? 67 இல் தொடங்கிய இந்த போலிநாடக கம்பெனி என்று மூட்டைகட்டி அனுப்பப்படும்?


Murugesan
அக் 14, 2025 13:26

என்னத்த கிழிக்க போறாங்க, திருட்டு திராவிட அயோக்கியர்கள்


திகழ்ஓவியன்
அக் 14, 2025 13:06

உண்மையில் இதில் திமுகவுக்கு எங்கிருந்து பாதகம்? உச்சநீதிமன்றம் எங்குமே தமிழக போலீசை குறை சொல்லவில்லை.. கண்டிக்க வில்லை. தமிழக அரசை கூட குறை சொல்லவில்லை. திமுக அரசு மிக மிக சாதுர்யமாக இந்த விஷயத்தை தள்ளி நின்று கையாண்டது. ஒரு நபர் கமிஷன் மட்டும் தான் திமுக தானாகவே எடுத்த முடிவு. அது ஒரு சாதாரணமான முடிவு. அந்த விபத்தின் மீது எடுக்கப்பட்ட மீதி முடிவுகள் எல்லாம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எடுக்கப்பட்டன. உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்திருந்தால் அப்போது திமுக மீது பழி விழ வாய்ப்புகள் அதிகம். அஸ்ரா கர்க் விசாரணை மீது உள்நோக்கம் கற்பிக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம். இப்போது அதில் இருந்து திமுக தப்பித்துக்கொண்டுள்ளது. இப்போது தற்குறி கூத்தாடியின் மீது பார்வையை திரும்பிவிட்டது அரசு. இதே கூத்தாடி வெகு சமீபம் சிபிஐ விசாரணைக்கு எதிரா பேசி.. இப்போது அதே விசாரணையை கோரும்போது அந்த கூத்தடியின் மீதான நம்பகத்தன்மை படுகேவலமாக அடிபட்டுப்போய்விட்டது .....தர்குரியின் நிலைமை இப்போது இருதலை கொல்லி எறும்பு போல..


Suppan
அக் 14, 2025 14:37

நல்லாவே முட்டுக்கொடுக்கிறீங்க. தீபாவளி போனஸுக்கு துண்டு போடுகிறீர்களோ?


Kjp
அக் 14, 2025 19:33

இரண்டாவது முறையாக திமுக ஆட்சி வந்ததாக சரித்திரமே கிடையாது வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஆனது அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.


vivek
அக் 15, 2025 08:36

அடடே .... எவளோ செயற்கை நுண்ணறிவு....


திகழ்ஓவியன்
அக் 14, 2025 13:06

விஜய், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் ஆகியோரைக் கைது செய்ய வாய்ப்புகள் இருந்தும், அவர்களை ஸ்டாலின் அரசு கைது செய்வில்லை. அதுபோல பா.ஜ.க-வின் சி.பி.ஐ இருக்காது.


duruvasar
அக் 14, 2025 12:42

அப்பாவு டைம்ஸ் .


திகழ்ஓவியன்
அக் 14, 2025 12:21

CBI விசாரணை, யார் மீது தவறு என்று அறிய, இடம் கொடுத்தது மட்டுமே அரசு, போலீஸ் 500 பேர் பாதுகாப்பு இது மட்டுமே அரசு, ஆனா மீட்டிங் ஏற்பாடு பண்ணியது JOSEPH


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை