உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?

தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?

சென்னை: தமிழக பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்

* மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3nbzkjs1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்* இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்* தமிழகம் எங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்*புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழகத்தை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!'எல்லோர்க்கும் எல்லாம்' எனும் உயரிய நோக்கத்துடன் தமிழகத்தின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.

அ.தி.மு.க.,பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,

தி.மு.க.,வின் பல்வேறு வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ரேஷனில் ஒரு கிலோ சக்கரை அதிகமாக வழங்கப்படும் என்ற தி.மு.க.,வாக்குறுதி என்ன ஆனது? நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

வெற்று அறிவிப்பு

அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஒரு ஆண்டில் எப்படி 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது சாத்தியமா?கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு எங்கே? தேர்தலுக்காக வெற்று அறிவிப்புகள். விளம்பர பட்ஜெட்.

கடன் அதிகரிப்பு

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புகளை நிரப்பவே முடியாது. நாளுக்கு நாளுக்கு கடன் அதிகரித்து கொண்டே செல்கிறது. நிர்வாகத் திறமையற்ற அரசு நடக்கிறது. மக்களின் கோபம், கொந்தளிப்பை குறைக்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது.

தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலை

பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க., வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை.

விளம்பர அறிவிப்புகள்

அண்ணாமலை அறிக்கை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. தி.மு.க.,வுக்கு வேண்டப் பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது தி.மு.க.,

பாசாங்கு

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பட்ஜெட் அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே. கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்?ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா?இல்லை வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா என்பது போகப்போகத் தான் தெரியம்.அண்ணா பல்கலையை தர வரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில் பல்கலையில் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆயின என்றே தெரியவில்லை. சாதாரண நிலையில் இருக்கும் பொது மக்கள் நேரடியாக பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் பாஜ அரசு பட்ஜெட்டில் டில்லியில் இருந்து கொண்டு தமிழகத்தையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசு தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழக மக்களின் நலன்களை மறந்து விட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டு உள்ளது. இது தான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.மக்களை பற்றி கவலைப்படாமல் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு. இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுககும் மிகப்பெரிய பதிலடியாக 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு விரைவில் உணரும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர், செல்வ பெருந்தகைவரலாற்றின் சிறப்பு மிக்க பட்ஜெட். தமிழகத்தை தலை நிமிர வைக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கான பட்ஜெட். அனைத்து மக்களையும் உள்ளடக்கி பயன்பெறும் வகையில் தமிழக பட்ஜெட் உள்ளது.அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வது, தி.மு.க.,வின் செயலற்ற நிர்வாகத்தை வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சமூகநீதியின் முதல் படியான ஜாதிவாரி கணக்கெடுப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், நதிநீர் இணைப்பு திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு இணைந்த மாநில உரிமை சார்ந்த நீராதார பிரச்னைகளுக்கு தீர்வு என எதுவுமே இல்லாமல் தி.மு.க., அரசால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டிற்கான தலைப்பை எல்லார்க்கும் எல்லாம் என்பதற்கு மாறாக எவருக்கும் எதுவுமில்லை என்று வைத்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.பா. ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெற்று பட்ஜெட். அதில் ஒன்றும் இல்லை. வேளச்சேரியில் ரூ.300 கோடியில் பாலம் கட்டுவது இன்னும், அதிகமான கார்களை கொண்டு நிறுத்துவதற்காகவா? விளம்பரத்திற்கான அரசு நடந்து கொண்டிருப்பது என்பதை தமிழக பட்ஜெட் பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்புகள் இல்லை. மக்களுக்காக புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை.

மார்க்சிஸ்ட் கருத்து

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மகளிர் உரிமைத் திட்டம் விரிவாக்கம், மாணவர்களுக்கு காலை நேர உணவு திட்டம், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி கூடுதலான நிதி ஒதுக்கீடு, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, மாநகராட்சிகளில் உள்ள 30 இடங்களில் முதல்வர் படிப்பகம், ஐந்து லட்சம் மனைப்பட்டாகள், நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு, பெற்றோரை இழந்த மாணவ மாணவியருக்கு 18 வயது எட்டும் வரை மாதம் ரூ.2 ஆயிரம், ஆதரவற்ற முதியோருக்கு அன்பு சோலை எனும் பராமரிப்பு இல்லங்கள் ஆகியன வரவேற்கத்தக்கது. தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் இலக்கியங்கள் மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பது, புதிய நூலகங்கள், வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சிகள் நடத்துவது ஆகியன வரவேற்கத்தக்கது.40 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் எனும் அறிவிப்பு, பழைய பென்சன திட்டம், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணிக்கொடை நிலுவை ஆகியவை குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாதது அந்த பகுதியினர் இடையே பெரும் சோர்வை உருவாக்கும். அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

M kathirvelpandian
மார் 15, 2025 01:00

என்னது திராவிட மாடல் தொடர் வண்டி . ...ஆஹ்.


xyzabc
மார் 15, 2025 00:18

ரயில் சேவை, விமான சேவை எப்படி இதெல்லாம்? ஒன்னுமே புரியல இந்த உலகத்துல.. ஒலிக்குது


xyzabc
மார் 15, 2025 00:15

ஒரே ஆண்டில் முடியாது. அதுக்கு தான் மீண்டும் 5 வருடங்களுக்கு தேர்ந்தேடுக்க போகிறார்கள் மக்கள். 200 ரூ செய்யும் மாயா ஜாலம் .


பாமரன்
மார் 14, 2025 22:46

அதிவேக ரெயிலு எப்படி மாநில அரசு கெக்கேபிக்கேன்னு இளிக்கும் அப்ரசண்டிக புரிதலுக்காக பட்ஜெட் உரையில் சொன்னது என்னன்னா..... வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் RRTS ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்க்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் .... புரிஞ்சவன் பிஸ்தா... புரியாதா அப்ப பகோடா தான்....


Ramesh Sargam
மார் 14, 2025 21:49

தமிழக பட்ஜெட் - மக்கள்மீது மேலும் சுமை.


நசி
மார் 14, 2025 20:54

எல்லா கட்சிகளும் டம்பாசாரி செலவு பண்ணுகின்றன..நாளைய சமுதாயம் நான் போகிறது


T.sthivinayagam
மார் 14, 2025 20:38

மத்திய பாஜக., அமைச்சர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய ரூ பட்ஜெட்


ஆரூர் ரங்
மார் 14, 2025 22:13

பின்னே வரலாறு காணாத அளவுக்கு ஒரு மாநில அரசு பட்ஜெட்டில் மின்னல் வேக ரயில் திட்டம், விமானநிலையம்,,விண்வெளி ஆராய்ச்சின்னு பறக்கிற பாத்தா அடுத்து சூரியனுக்கு சாட்டிலைட் அனுப்பும் திட்டமும் வருமே.


chinnamanibalan
மார் 14, 2025 19:33

சென்னையில் மழைநீர் கால்வாய்கள் பல ஆயிரம் கோடி செலவு செய்து அமைத்தனர். இனிமேல் மழைக் காலங்களில் சென்னை மக்கள் நிம்மதியாக வாழலாம் என்றனர். ஆனால் மழைநீர் வடியவில்லை மாறாக ஆங்காங்கே மழை நீர் குளம் போல தேங்குகிறது. சிங்கார சென்னை என்றனர். ஆனால் எங்கு நோக்கினும் சாலைகள் மேடு பள்ளமாக, சீரழிந்து போன சென்னையாக இன்று வரை தொடர்கிறது. திமுக வின் வெற்று அறிவிப்புகளுக்கு என்றென்றும் பஞ்சமே இல்லை. இன்னும் எத்தனை காலம்தான் தமிழக மக்களின் காதுகளில் இவர்கள் பூவை சுற்றுவர் என்பது தெரியவில்லை.


Ray
மார் 14, 2025 18:44

1. இந்த பட்ஜெட் வெற்றுக் காகிதத்தைக் கொடுத்திருக்கார் 2. இத்தனை திட்டங்களை ஒரே ஆண்டில் எப்படி முடிப்பார்களாம்? 3. திட்டங்கள் நிறைவேறுமா? சாலைகளை மேம்படுத்துதல் என்ன பட்ஜெட் 4. திமுகவை அசைக்க முடியாது அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் பட்ஜெட் இது 5. திருவாளர் பொதுஜனம் என்ன சொல்கிறார்?


saravan
மார் 14, 2025 17:40

அரசு ஊஊழியர்களுக்கு சரண்டர் விடுப்பு உண்டாம்...ஆனால் 01.04.2026 முதலாம்...அப்படியே பழைய பென்ஷனும் உண்டு...ஆனால் 01.04.2126 என அறிவித்திருக்கலாம்...இதுதாண்டா திராவிட மாடல்... இதுதாண்டா திராவிட மாடல்...


Ray
மார் 14, 2025 21:37

இந்த பட்ஜெட் 25 - 26 நிதி ஆண்டுக்கானது என்ற அடிப்படை கூட தெரியாதா? அது 01.04.25 லிருந்துதான். போகட்டும் சரவணன் சுமதி என்ற பெயர்கள் சரியில்லாதவை என்று எண்கணித மேதைகள் சொல்லியுள்ளார்கள்


புதிய வீடியோ