உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை மூட முடியாது!

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை மூட முடியாது!

சென்னை : தமிழகத்தில் உள்ள எந்த சுங்கச் சாவடியும் மூடப்படாது; 'டோல்' கட்டணமும் குறைக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 6,600 கி.மீ., நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 65 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 22 சாவடிகள் நீண்ட காலத்துக்கு முன் அமைக்கப்பட்டவை.சாலை அமைப்பதற்கு ஆன செலவு தொகை வசூலான பின், சுங்க கட்டணம் 40 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.ஆனால், போக்குவரத்து அமைச்சகம் அவ்வாறு குறைக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி வருகிறது.

சீரமைக்கும் பணி

இதனால், போக்குவரத்து செலவு கணிசமாக அதிகரிக்கிறது. அதனால் விலைவாசி உயர்கிறது. சுங்கச் சாவடிகள் வாயிலாக வசூல் குவிந்தாலும், நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு திருப்திகரமாக இல்லை. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 150 விபத்து பகுதிகள் அடையாளம் காணப்பட்டும், அவற்றை சீரமைக்கும் பணி நடக்கவில்லை.சாலை விபத்து மற்றும் உயிரிழப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. செலவு செய்ததற்கு மேல் வருமானம் கிடைத்துவிட்ட சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் காலாவதி ஆனதாக கருதி, அவற்றை மூட வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு கடிதம் எழுதினார். பார்லிமென்டிலும் சட்டசபையிலும் இப்பிரச்னை பலமுறை எதிரொலித்தது. சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு பல கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த சூழலில், தமிழகத்தில் எந்த சுங்கச் சாவடியும் காலாவதி ஆகவில்லை என்பதால், எதையும் மூட முடியாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

நிதி தேவை

இது குறித்து, ஆணையத்தின் தமிழக பிரிவு அலுவலர் வீரேந்தர் சம்பியால் கூறியதாவது:சாலை பராமரிப்பும், மேம்பாடும் முடிவே இல்லாமல் தொடர்ந்து நடக்கும் பணிகள். அவற்றுக்கு நிதி தேவைப்படுவதால், சுங்க வசூலை நிறுத்தும் கேள்விக்கே இடமில்லை.நாடு முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒரே மாதிரியான விதிகள் உள்ளன. அதன்படி, சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைக்கப்படாது என, மார்ச் மாதமே மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.தமிழகத்தில் சுங்கச் சாவடிகளை மூடவோ, கட்டணத்தை குறைக்கவோ எந்த திட்டமும் அரசிடம் இல்லை.இவ்வாறு சம்பியால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Raj S
செப் 27, 2024 00:49

டாஸ்மாக்ல அடிக்கிறது பத்தவில்லைனு வீடு வரி, மின்சார கட்டணம் உயர்த்தினாங்கனு சொல்றீங்க... கோபாலபுர தெலுங்கன் குடும்பம் யார்கிட்டேர்ந்து கட்சியை புடிங்கிக்சோ அவன் சொன்னது... "நீ ஒரு விறல் காமிச்சா, உன்னோட பல திருட்டு வேலைய மீதி விரல்கள் காமிக்குமாம்"... அதுசரி, அவனையே மதிக்கிறது கிடையாது, அவனால ஒரு பிரயோஜனமும் இல்லனு சொரியான தூக்கிட்டு அலையறீங்க... அவன் சொன்னதையா மதிக்க போறீங்க??


கல்யாண்
செப் 26, 2024 22:42

ஜனாதிபதிலேருந்து டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் வரைக்கும் பைசா கட்டாம ஓசில போவாங்க. நாமதான் இவிங்களுக்கும் சேத்து கட்டணும்.


பொன்மலை ராஜா
செப் 26, 2024 21:52

அசோகன், நீ ஆட்சி செய்யவில்லை. நீ ஆதரிக்கும் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியில் உள்ளோரின் நிர்வாகத் திறமையின்மைக்கு நீ பொறுப்பு ஏற்கிறாய். எதிர்கட்சிகளை எதிர்த்து உன் கட்சிக்காக உழைத்தால் தவறில்லை. ஆனால் பொதுமக்களுக்கு எதிராக குரல் கொடுப்பது உன் கட்சியை அழிக்கும்.


M S RAGHUNATHAN
செப் 26, 2024 20:49

பெட்ரோல், டீசல்.விலை குறைய வேண்டுமானால் அவை GST வரம்புக்குள் வரவேண்டும்..தமிழ்நாடு அரசு, மற்றும் இதர மாநில அரசுகள் இதற்கு ஒத்துக் கொள்ளுமா ? சும்மா மத்திய அரசை குறை சொல்ல வேண்டாம். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு, பெட்ரோல் டீசல் வரி விதிப்பை GST க்கு மாற்ற அனுமதிக்காது.


Nallappan
செப் 26, 2024 19:45

இன்னும் சாலைகளை நன்றாக செப்பனிடுங்கள் என்பது மட்டுமே பொருத்தமானது...


M S RAGHUNATHAN
செப் 26, 2024 18:39

திரு பாலு மத்தியில் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்தபோது இந்த கேள்வி சுங்க சாவடிகள் அகற்றும் எழுப்பப் பட்டது. சாலை அமைக்க செய்த செலவு சுங்க வரியால் முழுதும்.வசூலிக்கப் பட்டால் அந்த சாவடி நீக்கப் படுமா ? பாலு சொன்னது. சுங்க வரி நீக்கப் படமாட்டாது. It is perpetual. ஜவாஹிருல்லாஹ் திமுக அரசிடம் பாலு அவர்களின் நிலையை ஏற்கின்றதா என்று கேட்டு, சரியான பதில் இல்லை என்றால் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். ஜவாஹிருல்லாஹ் நிச்சயம் செய்ய மாட்டார். கேட்டால்.. MLA, MP seat பிச்சை கிடைக்காது


அசோகன்
செப் 26, 2024 17:53

இனிமேல் சுங்க சாவடி வசூளை வெளிவரும் கணம் செந்தில் பாலாஜியே பார்த்துக்கொள்வார் என்று மட்டும் மத்திய அரசு சொல்லட்டும்..... இங்கே பதிவிடும் உபிஸ் எல்லாம் வரி கட்ட அருகதை இல்லைனா அப்புறம் எதுக்கு உனக்கு கார் அதை சுங்க சாவடியிலேயே விட்டு விட்டு போ..... ரோடு மட்டும் கண்ணாடி மாதிரி வேணும் ஆனா வரி கட்ட வலிக்குதா என்பார்கள் ???? பாலாஜி கைக்கு வந்ததுமே fast டேக் டோல் சார்ஜ் க்கு மேல் 50 ரூபாய் கையில் கொடுக்கணும் என்பான் ???


venugopal s
செப் 26, 2024 16:58

பெட்ரோல் டீசல் விலையில் கொள்ளை அடிக்கும் பணம் எங்களுக்கு பத்தவில்லை, அதனால் சுங்கக் கட்டணத்தை நிறுத்த முடியாது!


Pathmanaban
செப் 26, 2024 14:00

இது தான் பாஜக வின் உண்மை முகம் பெட்ரோல் விலையும் குறைக்க முடியாது மக்களே நீங்கள் வாழ்வது ஜனநாயக நாட்டிலா அல்லது மண்டை கனம் கொண்ட அரசாட்சியிலா


saravanan
செப் 26, 2024 13:06

தாத்தா காலத்தில் போடப்பட்ட சாலைகளுக்கு பேரன் காலம் வரை சுங்க கட்டணம் வசூலித்து கொண்டிருந்தால் நிச்சயம் அது சீரான கட்டண வசூல் அல்ல நூறு கோடி மதிப்பிலான சாலை அமைத்தால் அதன் economic life-ன் தன்மைக்கேற்ப அசல், வட்டி மற்றும் பராமரிப்பு செலவுகளை உள்ளடக்கிய கால அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு வெளிப்படையான தரவுகள் மற்றும் தகவல்கள் நிர்வகிக்கப்பட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மிக முக்கிய பங்கு வகிப்பது சாலை போக்குவரத்து என்பதால் எரி பொருள் விலை, சுங்க கட்டணம் போன்றவைகளை குறைந்த அளவில் வைத்திருத்தல் மக்கள் நல அரசின் தலையாய கடமை


சமீபத்திய செய்தி