உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளால் தமிழக மீனவர்களுக்கு ரூ.பல கோடி இழப்பு

இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளால் தமிழக மீனவர்களுக்கு ரூ.பல கோடி இழப்பு

ராமேஸ்வரம் : இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளால் தமிழக மீனவர்களுக்கு ரூ.பல கோடி இழப்பு ஏற்படுவதுடன் சிறையில் அடைக்கப்படுவதால் சித்ரவதைக்கும் ஆளாகின்றனர்.ராமேஸ்வரம் முதல் நாகபட்டினம் வரை 4000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளில் மீனவர்கள் வங்காள விரிகுடா கடலில் மீன் பிடிக்கின்றனர். ராமேஸ்வரம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை இந்திய கடல் எல்லை 25 முதல் 40 கி.மீ.,ல் முடிகிறது. இதனால் இப்பகுதி மீனவர்கள் குறுகிய எல்லைக்குள் மீன் பிடிக்கும் போது சில நேரம் மீன்வரத்திற்காக எல்லை தாண்டி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால் ராமேஸ்வரம் பகுதி உள்ளிட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி, படகுகளை கப்பலை கொண்டு மோதி மூழ்கடித்து விடுகின்றனர். மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தும் சித்ரவதை செய்கின்றனர்.

2000 மீனவர்கள் கைது

1984 முதல் 2009 வரை இலங்கையில் ராணுவம், விடுதலைப்புலிகள் இடையே போர் நடந்த நேரத்தில் பாக்ஜலசந்தி கடலில் புலிகளின் கடற்படை பிரிவு வலுவாக இருந்தது. இதை பயன்படுத்தி இப்பகுதி மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித்தனர். இதன் மூலம் மீனவர்கள் வருவாயை பூர்த்தி செய்த நிலையில் 2009ல் விடுதலை புலிகள் தலைவர்கள் கொல்லப்பட்டதும், இலங்கை கடற்படையின் தாக்குதல் தமிழக மீனவர்கள் பக்கம் திரும்பியது. 2009 முதல் தற்போது வரை 400 படகுகள், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 2015க்கு பின் 300 படகுகள், 2000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2015க்கு முன்பு சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்ட நிலையில் 2015க்கு பின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. இப்படகுகளை இலங்கை அரசு தேசிய உடைமையாக அறிவித்தது.மேலும் மீனவர்களுக்கு சிறையில் சுகாதாரமான உணவு, குடிநீர் வழங்காமல் கடுங்காவல் தண்டனை வழங்கியும், அபராதம் விதிக்கவும் துவங்கியது. இதனால் படகுகளை இழந்த உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடனில் சிக்கி தவிக்கும் அவலம் ஏற்பட்டது.சிறை தண்டணை பெற்ற மீனவர்களை இரும்பு சங்கிலிகளால் பிணைத்தும், மொட்டையடித்து அவமானப்படுத்தியும், தொற்று நோய், அம்மை நோயால் பாதிக்கும் அளவிற்கு சித்திரவதைக்கும் உள்ளாக்கி வருகிறது. இவர்களை விடுவிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் 30 முதல் 60 நாட்கள் வரை இலங்கை அரசு சிறையில் அடைத்து விடுகிறது.தீர்வு தான் என்ன : இந்திய, இலங்கை உயர் அதிகாரிகள் முன்னிலையில் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வாரத்தில் இரு நாட்கள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும், மற்ற நாட்களில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கவும் உடன்பாடு ஏற்படுத்தினால் குறுகிய கடல் எல்லை கொண்ட பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க நிரந்தர தீர்வு காண முடியும். இல்லையெனில் தமிழக மீனவர்கள் ஒடுக்கப்பட்டு மீன்பிடி தொழில் முற்றிலும் அழிந்து போகும் அபாயம் உள்ளது என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

panneer selvam
அக் 28, 2024 22:24

Let us stop this hype and sentimental drama . Please answer this simple question , Will Andhra fishermen will allow Chennai Kasimedu fishermen to do fishing in their coastal area ? after they are all Indians and fishing in Indian territory . If Kasimedu fishermen caught near Andhra coast , their boat and net will be confiscated by Andhra fishermen stating they have stolen their live hood in their area and punished serverly . Now back to Sri Lanka issue , How Sri Lanka will allow Indian fishermen to do fishing in their territory . Tamilnadu politicians are playing cheap politics without telling the truth in firm words to fishermen and Tamilnadu fishermen also exploit their weak politicians to their advantage .


ே காலிந்த ராஜ்
அக் 12, 2024 11:53

இருந்தாலும் வெண்சாமரம் வீசபடும்


raja
அக் 12, 2024 11:47

தமிழனின் உரிமையை மீட்போமுண்ணு சொல்லிகிட்டு உங்கள் தொகுதியில் ஒரு கோமாளி என்று வளம் வந்தான்..


venkatarengan.
அக் 12, 2024 11:30

ஒரு மீனவ கிராமத்தை விட்டு அடுத்த மீனவ கிராம எல்லையில் மீன் பிடித்தாலே பெரிய கலவரம் எற்படும்.அடுத்த நாட்டு எல்லையை தாண்டினால் அவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா? இலங்கை கடற்படை சிறிய படகுகள் மூலம் ரோந்து சுற்றி வருவது போல இந்திய கடற்படை என்று உள்ளதா? இந்திய மீனவர்கள் கடல் எல்லையை தாண்டும் போது இந்திய கடற்படை எச்சரிக்கை செய்து அனுப்பும் வகையில் நடுக்கடலில் நம் கடற்படை நிரந்தரமாக இருக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மீனவர்கள் அனைவருக்கும் ஆதார் போன்று பீளமேட்டில் அட்டை மற்றும் படகுகளுக்கு வாகனங்கள் போல கட்டாய பதிவு செய்ய வேண்டும். பதிவு பெற்ற படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். ஓவ்வொரு முறை கடலுக்கு செல்லும் போதும் பயோமெட்ரிக் பதிவு செய்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கை கடற்படை நம்மாளுங்க பிடித்தால் உடனடியாக இந்திய கடலோர காவல் படையிடம் ஓப்படைக்கும் வகையில் இந்திய இலங்கை ஓப்பந்தம் ஏற்பட வேண்டும். இ


veeramani
அக் 12, 2024 08:57

அன்றைய ரா ம் நாடுக்காரன் புலம்பல் .. எழுபது என்பது காலகட்டங்களில் மீனவர் பிரச்சினையா இல்லை. அன்று ராமேஸ்வரம் , தங்கச்சிமடம், தனுசுகோடி பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்தனர். சரியாக இந்திய எல்லை தாண்டாமல் வலையை வீசி மீன் பிடித்தனர். ஆனால் இன்றோ ... பழி பாவம் செயல்களுக்கு அஞ்சாமல் தூத்துக்குடி, நெல்லை கன்னியாகுமாரி கேரளா அரேஞ் மீஎனவர்கள் பாக் ஜலசந்தியில் இலங்கை நாட்டி பகுதிக்கு சென்று வலை வீசுகின்றனர். எனது ஒரே கேள்வி .. குருசடை ஹீவிற்கு தென் பகுதியில் சென்று இவர்கள் தொழில் செய்தால் எவர் சிறை பிடிக்கப்போகிறார்கள் . வேண்டுமென்றே இலங்கை கடலில் வலை திருட்டுத்தனமாக வீசி இலங்கை வசிக்கும் தமிழ் மீனவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். பார்த்த பிரதமர் மோடி ஜி அவர்களின் காலத்தில் துப்பாக்கி சூடு எதுவும் இல்லவேயில்லை தமிழ் பேசு மீனவர்கள் எவரும் சாகவில்லை எனவே பாக்ஹ் ஜலசந்தியில் எவரும் மீன் பிடிக்க கூடாது என இந்தியாவும் இலங்கையும் ஒரு பந்தம் செய்து மிக கண்டிப்புடன் செயல்படுத்தவேண்டும்


சமீபத்திய செய்தி