வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கண்டிப்பாக செய்யவேண்டிய காரியம் எப்போதோ செய்திருக்கவேண்டும் பல்லாவரத்தில் நான்குடியிருந்த அடுக்குமாடி வாசலில் குடிப்பதற்குகாசு கொடுக்க வில்லை என்பதற்காக ஊர் குப்பையை ஒரு பணியாளர் கொட்டிவிட்டு சென்றார்
திமுக ஆட்சியில் ஒரு நல்ல முடிவு
இது பரவாயில்லை.கோவை மாநகராட்சியில் இதற்கு முன் இருந்த தலைமை பெண்மணி துப்புரவு பணியாளர்கள் ஊதியத்திலும் மூன்று சதவீதம் எடுத்துக்கொண்டு துப்புரவுப் பணியாளர்களை நல்லமுறையில் வயிற்றில் அடித்தார்
குப்பை அள்ளும் பணி இனி தனியார் வசம் ஒப்படைக்கப்படும். நல்லது. குப்பை அள்ள ஒப்பந்தம் செய்யக் காத்திருக்கும் ஒப்பந்தக்காரர்களே, உங்களில் ஒருவருக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது. உங்களைப்போலத்தான் தொண்ணூற்று ஆறில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஒப்பந்ததாரர் மேலிடத்து மாப்பிள்ளையாக ஆகிவிட்டார். அந்த மாதிரியான அதிர்ஷ்டம் உங்களில் யாருக்கு கிடைக்கப்போகிறது பார்ப்போம் முன்கூட்டியே வாழ்த்துகள்.
நல்ல முடிவு
மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை பார்க்கும் துாய்மை பணியாளர்களை, வேறு பணிகளுக்கு மாற்றி, குப்பை கையாளும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. - சிறப்பான செய்தியே நம் அமைச்சர்களைக் கூட மாற்றிவிட்டு, தனியார் துறை அதிகாரிகளை பணிக்கமர்த்தலாம்
இப்பவே அதிகாரியை மதிப்பதில்லை. இன்னும் வேற எங்காவது பணி அமர்த்தினால்.....
சட்டமன்ற உறுப்பினர்கள் என்றைக்கு சம்பளத்திற்காக வேலை பார்த்தார்கள். எப்படி காசு சேர்க்கலாம் என்றுதானே
மதுரை திருமங்கலம் நகராட்சியில் ஊழல்கள்- தூய்மை பணிகளுக்கு வேண்டிய விளக்குமார்கள் மற்றும் மற்ற உபகரணங்களை துப்புரவு ஊழியர்களுக்கு வான்கொடுக்காமல் அங்குள்ள தி மு க கவுன்சிலர்களும் நகராட்சி அலுவலர்களும் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்
அடிமட்ட மக்கள் அவதி படும் போது தான் திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.