உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவின் பெருமைமிகு மாநிலம் தமிழகம்: கவர்னர்

இந்தியாவின் பெருமைமிகு மாநிலம் தமிழகம்: கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இந்தியாவின் பெருமைமிகு மாநிலம் தமிழகம். இங்கிருந்து ஆன்மிகம் நாடு முழுவதும் சென்றுள்ளது,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.டிடி தமிழ் தொலைக்காட்சியில் நடந்த ஹிந்தி தின விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: ஹிந்தி மொழி திணிக்கப்படவில்லை. அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டியவை. தமிழகத்தில் ஹிந்தி கற்க மாட்டார்கள். ஹிந்தி எதிர்ப்பு உள்ளது என்று முன்பு நினைத்து இருந்தேன். கடந்த 3 ஆண்டுகளில் பல பகுதிகளுக்கு சென்ற பின்னர் தமிழகத்தில் ஹிந்தி மொழியை மக்கள் கற்பது தெரிந்தது.தமிழக மக்கள் இடையே ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் சமஸ்கிருதம் நீக்கப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் 27 ல் மும்மொழி கொள்கை உள்ளது. தமிழகத்தில் மட்டும் தான் இரு மொழி கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது. பிரிக்க நினைக்கும் முயற்சி ஒரு போதும் நிறைவேறாது. இந்தியா எப்போதும் ஒன்றாகவே உள்ளது. எப்போதும் ஒன்றாகவே இருக்கும். இந்தியாவின் பலமான அங்கமாக தமிழகம் எப்போதும் இருக்கும். இந்தியாவின் பெருமை மிகு மாநிலம் தமிழகம். இங்கிருந்து ஆன்மிகம் நாடு முழுவதும் சென்றுள்ளது. தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல என்ன செய்தனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venugopal s
அக் 18, 2024 22:30

பாஜக சங்கிகள் விட்டால் இவரை .... போல் உள்ளதே!


அப்புசாமி
அக் 18, 2024 22:22

போதும்.போதும். தமிழ்னா என்னன்னு தெரியாத நீங்கள்ளாம் தமிழ் விழாக்களில்.பங்கெடுக்காம இருந்தாலே போதும்.


jayavelan t
அக் 18, 2024 21:49

We do Not want Hindi Who ever when ever required will learn the additional language at least to speak. Why 3rd language is required must? Is any other country other than India has got 3rd language? In some countries only one their language. Since putting putting pressure on 3rd language, students are Not able to concentrate much on other required subjects. As per Honorable Governor post, he should Not support any particular party, Not good.


jayavelan t
அக் 18, 2024 22:55

Note: I am a common man, Not supporter or against of any party. I had to let my daughters do take Hindi/Sanskrit/Telugu/Marathi since I had to be in various states due to my movement / requirement. And, I learnt Telugu to just speak since I want. Though I was there in Navi-Mumbai and Bangalore, I did not learn much those languages and managed with whatever I know when required.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 18, 2024 21:38

கவர்னர் மீண்டும் மீண்டும் பல கருத்துக்கள் மூலம் சொல்வது இதைத்தான் ...... திராவிடம் என்பது பம்மாத்து வேலை ...... தமிழன் விழித்துக்கொள்ள வேண்டும் ...... இந்த இரு அம்சங்கள்தான் .... ஒரு மோசடி கும்பலுக்கே இதுதான் பிழைப்பு என்பதால் அவர்களும் அவர்களது அடிமைகளும் பொங்குகிறார்கள் .....


T.sthivinayagam
அக் 18, 2024 21:18

தமிழக இந்துக்கள் பேசுவது ஈசனின் மொழியான தமிழை.தமிழை தாழ்த்தி பேச நினைப்பவர்களை ஈசன் மன்னிக்கமாட்டார் என ஈசன் பக்தர்கள் கூறுகின்றனர்


தாமரை மலர்கிறது
அக் 18, 2024 21:18

தமிழ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேலை போன்று பாடம் கற்பிப்பது நல்லது. தேசிய நீரோட்டத்தில் கலந்துகொள்ள ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என்று ஒவ்வொரு தமிழர்களுக்கும் புரிந்துள்ளது. அதுவரை தமிழகத்திற்கு நிதியை நிறுத்திவைப்பது, ஹிந்தி கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும்.


அப்பாவி
அக் 18, 2024 21:17

உண்மைதான். அஞ்சு வருஷமா அதைக் குலைக்க சதி நடக்குது.


Ramesh Sargam
அக் 18, 2024 20:55

உண்மைதான், தமிழகம் இந்தியாவின் பெருமைமிகு மாநிலம்தான். ஆனால் அங்கு திமுக மிக மிக கேவலமான ஆட்சிபுரிவதுதான் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கிறது.


Palanisamy Sekar
அக் 18, 2024 20:41

மனம் நொந்து சொல்கின்றேன். உதாரணத்திற்கு சிங்கப்பூரில் உள்ள பல இந்திய மாநில மக்களிடையே மும்மொழி மற்றும் அதற்கும் மேலாக நான்கு ஐந்து மொழி கூட பேசுகின்ற ஜனங்களை நேரில் கண்டுள்ளேன். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற அத்துணை பேரில் தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு தமிழ் மட்டுமே தெரிகின்றது. அதில் பலருக்கு பிழை இல்லாமல் எழுதக்கூட தெரியாது. தமிழ் படிக்க தெரியாத பலரையும் நான் கண்டுள்ளேன். ஆங்கிலமும் தெரியாது. தமிழ்நாட்டில் என்றைக்கு இந்த திமுக உருவானதோ அன்றைக்கே தமிழக மக்களுக்கு பீடை பிடித்துவிட்டது என்று சொல்லலாம். நாட்டுக்கு பிடித்த கேடு திமுக


அப்பாவி
அக் 18, 2024 21:18

உங்க சிங்கப்பூருக்கு அது போதும். ஐரோப்பா, அமெரிக்கான்னு போய்ப் பாரு. அங்கேயும் தமிழன் இருக்கான். உங்களை விட நல்லா இருக்கான். ஈஸ்வரன் போதும் சிங்கப்பூருக்கு.


Barakat Ali
அக் 18, 2024 20:09

தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல என்ன செய்தனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார். ..... ஈரவெங்காயம் வாங்கின யுனெஸ்கோ விருது பத்தி இவருக்குத் தெரியல ......


சமீபத்திய செய்தி