உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய இயந்திரம் தமிழகம்: கவர்னர் ரவி பெருமிதம்

நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய இயந்திரம் தமிழகம்: கவர்னர் ரவி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழகம் முக்கிய இயந்திரமாக பார்க்கப்படுகிறது,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார். என்.ஐ.ஆர்.எப்., எனும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் முதன்மை இடங்களை பிடித்தன. இதற்கான, பாராட்டு விழா, சென்னை கிண்டி ராஜ்பவனில், கவர்னர் ரவி தலைமையில் நேற்று நடந்தது. இதில், என்.ஐ.ஆர்.எப்., பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி, கவர்னர் வாழ்த்தி பேசியதாவது: நமது மாநிலத்தில், சிறந்த கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அவை ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டால், கல்வியில் இன்னும் சிறந்த முன்னேற்றம் காண முடியும். வரும், 2035ம் ஆண்டுக்குள், நாட்டின் உயர் கல்வி மாணவர் சேர்க்கையை, 50 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 50 சதவீத்துக்கும் அதிகமாக உள்ளது. இது, தேசிய சராசரியை விட அதிகம். தற்போது தரத்தை மேம்படுத்துவது மிக அவசியம். நம் மனிதவள திறனை, மேலும் திறமையாக மாற்றினால், அது நாட்டிற்கு முழு வளர்ச்சியை வழங்கும். ஏனெனில், நம் நாடு, தமிழகத்தை வளர்ச்சிக்கான முக்கிய இயந்திரமாக பார்க்கிறது. இது, மாநில வளர்ச்சி மட்டும் அல்லாது, தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிய இயக்கமாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது: இன்ஜினியரிங் படிப்புகளுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்பது கிடையாது. சிவில், மெக்கானிக்கல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது கூட, 15 இன்ஜினியரிங் தொழில்நுட்பங்கள் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பதிவாளர்கள் 'ஆப்சென்ட்' கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இதனால், மாநில பல்கலை பட்டமளிப்பு விழாக்களை, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்து வருகிறார். இந்நிலையில், கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான பாராட்டு விழாவில், அண்ணா பல்கலை, சென்னை பல்கலை உட்பட முக்கிய பல்கலை பதிவாளர்கள் புறக்கணித்தனர். அவர்களுக்கு பதிலாக, துறை சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணை வேந்தர் ஆறுமுகம் உட்பட சிலர் பங்கேற்றனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Mariadoss E
அக் 10, 2025 18:28

அந்த வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் பிஜேபி இன் ஏஜெண்ட் ஆக தாங்கள் இருப்பது கீழ்த்தர அரசியல்......


ராஜா
அக் 09, 2025 18:48

தமிழக நிதிநிலை மோசமானத்திற்கு இந்தப்புன்னகை ஒரு முக்கிய காரணம்.


என்றும் இந்தியன்
அக் 09, 2025 17:25

என்.ஐ.ஆர்.எப்., எனும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் முதன்மை இடங்களை பிடித்தன. நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழகம் முக்கிய இயந்திரமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இதில் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் பங்கு 0.00001 சதவிகிதம் கூட இல்லை என, கவர்னர் ரவி தெரிவித்தார். இப்படி படியுங்கள் அதன் அர்த்தம் நன்றாக விளங்கும்


Sudha
அக் 09, 2025 13:37

திடீரென ஏன் சொல்கிறார்? பக்கதுல இருமல் மருந்து, 6 வயது குழந்தை எரிப்பு போன்ற seidhigal


Venugopal S
அக் 09, 2025 13:31

எப்போதாவது இதுபோல் உண்மை வாய் தவறி வந்து விடுகிறது!


திகழ்ஓவியன்
அக் 09, 2025 13:06

இன்றய பேச்சு ஸ்டெடி யா இருந்ததால் வந்ததோ இல்லை அன்று ஸ்டெடி ஆக இல்லாதாதாலோ எல்லாம் சனாதன திற்கு தான் தெரியும்


M Ramachandran
அக் 09, 2025 12:47

ஒன்னும் புரியல ஒரே கண்ணா மூச்சி ஆட்டமா இருக்கு.


தலைவன்
அக் 09, 2025 15:04

புரிஞ்சதலானதான் அவரு ஆளுநர். புரியாததனால நீங்க வெறும் வாசகர்.


Manyan
அக் 09, 2025 11:08

உலக நாடுகளின் வளர்ச்சிக்கே வழி வகுக்கும் தமிழகம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி முக்கிய எந்திரமாக இல்லாமல் போகும். மத்திய மாநில அரசுகள் இணைந்து தமிழக உயர் கல்வி மேம்பாட்டிற்கு மற்றும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சிகளுக்கு செலவிட்டால் இந்தியா நிச்சயம் உலகிற்கு முன்னோடியாக இருக்கும்


SRIDHAAR.R
அக் 09, 2025 09:31

கல்வித்துறை சிறந்து விளங்க அரசாங்க,அரசியல் வாதிகள் இணைந்து செயல்பட்டால் தமிழகம் முதல் இடத்திற்கு வரும்


Indian
அக் 09, 2025 08:57

ஆனா பணம் தரமாட்டோம் ..திட்டங்களும் தரமாட்டோம் ..


சமீபத்திய செய்தி