உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை; அமைச்சர் ரமேஷ்

தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை; அமைச்சர் ரமேஷ்

மதுரை: எங்கெல்லாம் கும்பாபிஷேகம் நடக்கிறதோ, அங்கு தமிழில் பாராயணம் செய்ய தமிழ் ஓதுவார்கள் அனுப்பப்படுவதாகவும், தமிழுக்கு நாம் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம், என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கக்கோரி, கோவில் முன்பு தமிழ் ஓதுவார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில், இந்தப் போராட்டம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழ் ஓதுவார்களைப் பொறுத்தவரைக்கும், எங்கெல்லாம் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நடக்கிறதோ, அந்தப் பூஜைகளை தமிழில் நடத்துவதற்கு தமிழில் பாராயணம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 27 ஓதுவார்களை ஸ்பெஷலாக இங்கு கொண்டு வந்து, கடந்த 11ம் தேதியில் இருந்து வேலை நடந்து கொண்டிருக்கிறது. தமிழுக்கு நாம் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம். முதல்வர் எப்போதும் தமிழை முன்னிறுத்தக் கூடியவர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அவர்கள் நிச்சயமாக பங்கேற்பார்கள். அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் தான் கோவிலில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் யாரும் போராட்டம் நடத்தவில்லை, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கிஜன்
செப் 16, 2026 23:24

தமிழகத்தில் இருக்கும் பெரிய கோபுரங்கள் உள்ள கோவில்கள் போல இந்தியாவில் வேறெங்கும் இல்லை…கோவில் கட்டிய தமிழனுக்கு அதை கும்பிட தெரியாதாம்….வணங்க வேறு மொழி வேண்டுமாம்..நல்லா இருக்கு உங்க நியாயம்


ராஜகுமார் இ
செப் 16, 2026 20:03

அதாவது, தமிழ், யாகசாலை வரை தான் அனுமதிக்கப்படும் என்று கூறுகிறார். உயிர் தமிழ் என்கிறீர்கள்! தமிழ் புனிதமானது என்கிறீர்கள்! ஏன் தமிழை, கருவறையிலும், கோபுரத்திலும் அனுமதிக்க மறுக்கிறீர்கள்..? இதைத்தானே திரு. சேகர் பாபு செய்தார். அவரது தாய் மொழி தெலுங்கு..திரு. ரமேசு அமைச்சர் அவர்களே.. உங்கள் தாய் மொழி, தமிழ் தானே..??


D Natarajan
செப் 16, 2026 17:29

வாழ்க தமிழ் அருமையான கோஷம் , தமிழ் நாட்டில் ஒரு தமிழ் பல்கலை கழகம் தான் உள்ளது. அதை கவனியுங்கள். தமிழ் வளர்ப்பதை செயலில் காட்டுங்கள்


sankaran
செப் 16, 2026 16:36

இந்த பிரச்னை தமிழ்நாட்டில் மட்டும்தான்..


vijay
செப் 16, 2026 15:48

தேவாரம் திருமுறைகள் பதிகங்கள் திருவாசகம் எல்லாம் செந்தமிழில். ஆனால் ஓதுவார்கள் தமிழில் பாராயணம் செய்ய போராட்டம் நடத்தவேண்டும் சிவபெருமானே நீங்கள் வளர்த்த, உங்களுக்கு பிடித்த தமிழில் பாராயணம் செய்வதற்கு போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய


Keshavan.J
செப் 16, 2026 15:45

பல தமிழக அரசியல்வாதிகளைப் பற்றிய வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவர்களில் பலருக்கு சமஸ்கிருதம் அல்லது இந்திப் பெயர் இருந்தாலும், தங்களைத் தமிழின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். உதாரணம் இந்த மந்திரி பெயர் ரமேஷ். உதயநிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, நேரு, ஜகத்ராட்சன், கருணாநிதி இது எல்லாம் சமஸ்கிருதம் பெயர். ஒருபடி மேல பொய் ரஷ்யா மொழியில் பெயர் கொண்டு ஒரு முதல் மந்திரி இருந்தார். எல்லாரும் காமெடி பீஸுகள்


Ravichandran Selliah
செப் 16, 2026 14:59

தமிழை முதலில் தமிழ்நாட்டில் கடடாய மொழி ஆக்குங்கள், பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களை நியமியுங்கள், ... அதன் பிறகு கோவில்களிலும், மசூதிகளிளும் .. கடடாயமொழி ஆக்குவோம்.


Keshavan.J
செப் 16, 2026 16:47

அரசாங்க பள்ளியில் தமிழ் கட்டாய பாடம் தான். 1970 இருந்து 1982 வரையில் நான்படித்தேன், 5 ஆம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலம் படிப்பு. இப்போது இந்த படிப்பு முறை இல்லையா.


Perumal Pillai
செப் 16, 2026 14:24

தமிழ் தமிழ் என காரணமின்றி கூச்சல் போட்டுத்தான் திமுகவும் அதிமுகவும் 1967 ல் இருந்து மக்களுக்கு அல்வா கொடுத்து வந்தனர் .


Keshavan.J
செப் 16, 2026 16:44

அது திருநெல்வேலி அல்வா இது இருட்டுக்கடை ஆல்வா , சும்மா சாப்பிடுங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை