உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக டாஸ்மாக் பொது மேலாளருக்கு சம்மன்

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக டாஸ்மாக் பொது மேலாளருக்கு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டாஸ்மாக்' நிறுவன பொதுமேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.மதுபானங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து இருப்பதாக, அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.இதுதொடர்பாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி உள்ளது.

விசாரணை

எந்தெந்த ஆலைகளில் இருந்து, அதிக மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டும்; 'பார் டெண்டர்' யாருக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவகாரங்களில் துணை முதல்வர் உதயநிதியின் நெருங்கியநண்பர் ரத்தீஷ் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.அவர் வெளிநாட்டுக்கு தப்பிய நிலையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் மற்றும் ரத்தீஷ் இடையே நடந்த பணப்பரிமாற்றம் குறித்த விபரங்களை சேகரித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் தனியார் வங்கி அதிகாரி ஒருவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக விசாகனிடம் ஐந்து மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதேபோல கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவு துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதையடுத்து நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதாவும், ஜோதி சங்கரும், இன்று காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

மொத்த விற்பனை

இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

டாஸ்மாக்கில் உதவி பொது மேலாளர், துணை பொது மேலாளர் என்ற நிலையில் ஜோதிசங்கர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துஉள்ளார்.அவருக்கு ஊழல் நடந்த விதம் குறித்து தெரியும். அதுபோல மொத்த விற்பனை தொடர்பாக சங்கீதாவிடமும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் ஜோதிசங்கர், சங்கீதா ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Iyer
மே 21, 2025 11:32

30 - 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இவ்வளவு பணத்தை ஆக CASH ஆக எங்கும் ஒளித்து வைக்க முடியாது. REAL ESTATE GOLD போன்றவற்றில் முதலீடு செய்து இருப்பார்கள். இதை கண்டுபிடிப்பது கஷ்டம் இல்லை. விரைவில் செயல்படுவது அவசியம். தமிழ் நாடு அரசாங்கத்தில் உள்ள 50% க்கும் அதிகம் மந்திரிகள் உள்ளே போவது நிச்சயம்.


SUBBU,MADURAI
மே 21, 2025 14:22

டாஸ்மாக் அதிகாரிகளை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி தோற்றுப் போன திமுகவின் தலைமை குடும்பத்திற்கு வரப்போகிற செய்தி இடியாக இருக்கப் போகிறது. எங்கடி எங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கா போறீங்க என்று இவர்களை இப்போது அமலாக்கத்துறை வச்சு செய்கிறது.


V Venkatachalam
மே 21, 2025 14:46

உங்கள் ஆசைக்கு அளவே இல்லை. நாங்கள் உள்ளே போனால் என்ன? சுப்ரீம் கோர்ட் வழியாக போன வேகத்திலேயே வெளியே வந்துருவோமே? அப்ப என்ன பண்ணுவீங்க? கபில் சிபல் எதுக்கு இருக்காரு?


Iyer
மே 21, 2025 11:24

டெல்லியில் மதுபான ஊழல் வழக்கில் - நமது ED வெகு விரைவில் செயல்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் இவ்வளவு தாமதம் ஏன்?


Chandrasekaran
மே 21, 2025 10:40

இந்த வழக்கைப் பொறுத்து ஆதாரங்கள் உள்ளதென கூறுகிறார்களே களவாடிய தொகை மீட்கப்படுமா. அல்லது ஆயத்தீர்வை நிணயத்து முடித்து வைக்கப்படுமா. இன்று இந்தியா உள்நாட்டு புரட்சி மூலமே அரசு இழப்பை மீட்க முடியும். சட்டம் அதைச் செய்யாது. அரசியலில் தன்னை இணைத்துக்கொள்ளும் முன்பிருந்த நிலை என்ன இன்றைய நிலை என்ன என்று பொதுமக்களுக்குத் தெரியும். ஆனால் கண்காணிக்க வேண்டிய அமைப்புகளுக்குத் தெரியாது. வியப்பு. தொழிலதிபர் மூலதானம் வங்கிக்ககடன் எற்றற போர்வை. லாபம் அதிர்ச்சியூட்டக்கூடிய அளவு. இஸ்லாமிய நாட்டு தண்டனைச்சட்டம் இங்கிருந்திருக்க வேண்டும். தர்மமம் நீதி நியாயம் என கூறும் பழமைவாதிகள் தற்கொலை செய்துகொள்வது நல்லது.


மீனவ நண்பன்
மே 21, 2025 08:01

வேலியே பயிரை மேய்வது சரியல்ல ..தங்கம் முதல் பெருங்காயம் வரை விற்பனை செய்யும் amezon flipkart bigbasket போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் அல்லது மால்கள் மூலம் விற்பனை செய்தால் பில்லிங் முறைப்படி செய்து ஆன்லைனில் QR அல்லது UPI மூலம் பணமும் வங்கிக்கணக்கில். வருமே


V Venkatachalam
மே 21, 2025 19:25

மீனவரே எப்பிடி இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க? திராவிடியா மாடலுக்கு நீங்க சொல்ற விஷயம் அவன்களுக்கு அத்துப்படி..கொள்ளையடிக்க அந்த முறை எப்பிடி சரியா வரும்? நமக்கு வேண்டியது காசு பணம் துட்டு..


முக்கிய வீடியோ