உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

சென்னை: சென்னை மாநகரில் இன்று முதல், டீ கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்படுகிறது.தலைநகர் சென்னையில், 1,000க்கும் அதிகமான டீ கடைகள் இயங்கி வருகின்றன. பால் விலை மற்றும் காஸ் விலை உயர்வு உட்பட பல காரணங்களால், 2022ம் ஆண்டு, சென்னையில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீயின் விலை, 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 12 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி விலை, 3 ரூபாய் உயர்த்தப்பட்டு, 15 ரூபாய்க்கும் விற்பனையானது. Galleryஇந்நிலையில், சென்னையில் மூன்று ஆண்டுகளுக்கு பின், இன்று முதல் டீ, காபி விலையை உயர்த்த, டீ கடை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நேற்று வரை 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ, இன்று முதல் 3 ரூபாய் அதிகரித்து, 15 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. காபி விலையும் 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 20 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. அதேபோல, ராகி மால்ட், பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கிறது. பால், லெமன் டீ விலையில் மாற்றம் இல்லை. போண்டா, பஜ்ஜி, சமோசா விலையும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டு, 15 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளன. பார்சல் டீ, காபி விலையும், 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. விலை உயர்வு குறித்து டீ கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'அதிகரித்து வரும் மின் கட்டணம், காஸ் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக, டீ, காபி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

தரத்திற்கு ஏற்ப விலை!

சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் சுந்தர் கூறியதாவது: டீ, காபி விற்பனை விலையை எங்கள் சங்கம் முடிவு செய்வது கிடையாது. அந்தந்த கடை உரிமையாளர்கள், தங்கள் பகுதி சூழலுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயம் செய்து, வியாபாரம் செய்கின்றனர். இன்றும், சென்னையின் பல பகுதிகளில் 10 ரூபாய்க்கு டீ, காபி விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல இடத்திற்கேற்ப 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தற்போது, பல்வேறு பொருட்களின் விலை மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக, பல டீ கடைகளில் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். பொருட்களின் தரத்திற்கு ஏற்ப விலை உயர்வு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

கௌதம்
செப் 01, 2025 22:41

யோவ் கௌரிகிருஷ்ணா ல காபி 75ரூ


c.mohanraj raj
செப் 01, 2025 19:26

மதுரையில் ஏற்கனவே டீ ஒரு வருடமாக 18 ரூபாய்


ஃyts
செப் 01, 2025 11:54

தாராபுரத்தில் டீ 15 ரூபாய் ஆகி பல வருடங்கள் ஆகிறது


Nellai Ravi
செப் 01, 2025 11:50

GST விஷயத்தில் என் கருதும் அதே


Nellai Ravi
செப் 01, 2025 11:50

கிஸ்தி விஷயத்தில் என் கருதும் அதே


Rathna
செப் 01, 2025 11:46

பால் விலை 20 ml = 80 பைசா தண்ணி விலை = 20 பைசா சக்கரை விலை 10 கிராம் = 50 பைசா காஸ் விலை = 1 ரூபாய் டீ தூள் விலை = 5 கிராம் 2 ரூபாய் தொழிலாளி கூலி = 1 ரூபாய் கடை வாடகை = 2 ரூபாய் எல்லா விலையும் சேர்த்து மொத்தம் 7.50 விற்பது ரூபாய் 15.00 நூறு சதவீத லாபம்,


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 01, 2025 10:14

அரசு அனைத்திலும் விலையேற்றி விட்டது. இதில் மட்டும் விலையேற்றா விட்டால் நன்றாக இருக்காது என்பதால் விலையேற்றம். வாழ்க சென்னைவாசிகள். ஓட்டு இந்த முறை 2000 ரூபாய் கொடுக்க முடிவு செய்து இருக்கலாம் இதை அறிந்து தான் இந்த விலையேற்றம் இருக்கலாம். தீபாவளிக்கு ஐந்தாயிரமும் இந்த விலையேற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வணிக நிறுவனங்கள் இடம் திமுக தேர்தல் நிதி இந்த முறை அதிகம் வசூலிக்கலாம் என்பதாலும் இந்த விலை உயர்வு இருக்கலாம்.


Muralidharan S
செப் 01, 2025 09:59

GST குறைய போகும் சமயத்தில், அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வியாபாரிகளின் தந்திரம். நுகர்வோருக்கு எந்த ஒரு வித பயனும் போய்விடக்கூடாது என்பதே வியாபாரிகளின் கொள்கை. இந்த நாட்டில் வருமானத்திற்கு வரி கட்டும் மக்களுக்கு எப்பொழுதும் எந்த ஒரு பயனும் இருந்ததில்லை. வரியே காட்டாத அரசியல் வியாதிகளுக்கும், வருமானத்தை கணக்கிலேயே காட்டாத, வரி ஏய்ப்பு செய்து மக்களை சுரண்டி கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகளுக்கும் தான் வாழ்வு. 100 ரூபாய்க்கு விற்கும் பூக்கள், ஒரு பண்டிகை முகூர்த்த தினம் என்று வந்துவிட்டால், அப்படியே 300 ரூபாய் ஆகிவிடுகிறார்கள். சமீபத்தில் பிள்ளையார் சதுர்த்திக்கு 10 ரூபாய் அருகம்புல் 50 முதல் 60 ரூபாய் வரை விற்றார்கள் சென்னையில். வியாபாரிகள் மக்கள் வயிற்றில் அடிப்பதில் மிக மிக தேர்ந்துவிட்டார்கள் அரசியல்வியாதிகளை போல - மன்னன் எவ்வழி - வியாபாரிகள் அவ்வழி. ஒரு நாடு என்பது தனியாக வந்துவிடாது.. மக்களின் மனநிலையே அந்த நாட்டின் பிரதிபலிப்பு.. ஆனால், இங்கு எங்கும் எதிலும், யாரிடமும் நேர்மையும், நாணயமும் இல்லை.. அபரிமிதமான ஜனநாயகம் மற்றும் திராவிஷம் போன்ற கட்சிகளின் வளர்ச்சியால் நாசமான நாடு.. சுயநலமே பிரதானமான - இந்த நாடு, இப்படிப்பட்ட மனநிலை கொண்ட மக்களால் என்றுமே முன்னேறிய நாடுகளின் பட்டியலில் சேரப்போவதில்லை...


வாய்மையே வெல்லும்
செப் 01, 2025 09:24

மின்சாரம் விலை வாய்க்கு வந்தபடி ஏற்றிவிட வந்த காசில் ஜெர்மனி முதல்வர் சுற்றுப்பயணம் ..உனக்கென்னப்பா நித்தமும் விலையுயர்வில் முழிபிதுங்கும் சராசரி மக்களின் அவலநிலை திராவிட பதர்களுக்கு புரியா வாய்ப்பே லேது .. தயவு செஞ்சு ஓங்கோலுக்கே போய்டுங்க தமிழ்நாடு பிழைச்சுக்கட்டும்


anonymous
செப் 01, 2025 08:54

சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிக்க டீ, காபி கொடுத்தார்கள் பின்னர் அதே விலையில் ருசி பார்க்க அதாவது சுவைக்க கொடுத்தார்கள் தற்போது அளவை குறைக்க சொட்டு மருந்தாக கொடுக்க சிரமம் ஆவதால் இந்த விலையேற்றம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை