உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணி நிரந்தரம் கோரிய போராட்டம் தொடரும்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு

பணி நிரந்தரம் கோரிய போராட்டம் தொடரும்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 12ம் நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட, பகுதி நேர ஆசிரியர்களை, போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கடந்த 8ம் தேதி முதல், பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.12ம் நாளாக, 600க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், டி.பி.ஐ., அலுவலகம் அருகே அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை, போலீசார் கைது செய்ய முயன்ற போது, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் குண்டு கட்டாக துாக்கிச் சென்று, 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றிச் சென்று, திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.இதற்கிடையே, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலக் குழுவினர், தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷிடம் பேச்சு நடத்தினர். ஆனால், முடிவு எட்டப்படவில்லை.நல்ல அறிவிப்பு வெளியாகும் வரை, போராட்டம் தொடரும் என, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜன 20, 2026 04:18

ஒருசிலராவது தீம்க்காவின் பொய்களை நம்பி வாக்களித்து விட்டோமே என்று நினைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது ஆறுதல் என்றாலும் அடிமை உடன்பிறப்புக்களும் பணமும் சிறுபான்மை ஆதரவும் இருக்கும் பொழுது தமிழகத்தில் எந்த மாற்றமும் வந்து விடாது. மத்திய அரசு கூடுதலாக நிதி கொடுக்காததால் மட்டுமே மிச்சமிருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று இளவரசி சொல்லியிருப்பது மக்களை மாக்களாக நினைப்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை