உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பக்தர்களுக்கு தற்காலிக சொகுசு குடியிருப்புகள் அமைப்பு

தமிழக பக்தர்களுக்கு தற்காலிக சொகுசு குடியிருப்புகள் அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மகா கும்பமேளாவில், பங்கேற்க செல்லும் தமிழக பக்தர்களுக்காக, 400 தற்காலிக சொகுசு குடியிருப்புகளை ஐ.ஆர்.சி.டி.சி., அமைத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடக்கிறது. இது, உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையில், பிரயாக்ராஜில் வரும் 2025 ஜன., 13ம் தேதி முதல் பிப்., 26 வரை மகா கும்பமேளா 45 நாட்கள் நடக்க உள்ளது. இதில், 43 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜ் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்த மாநில அரசு, மத்திய அரசின் துறைகளோடு இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் தென்மண்டலம் சார்பில், தமிழக பக்தர்களுக்காக தற்காலிக குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:

மகா கும்பமேளாவில் செல்லும் பக்தர்களுக்காக, தனியாக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கம், தற்காலிக, சொகுசு குடியிருப்புகள் அமைத்து வருகிறோம்.மகா கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமத்தில் இருந்து 3.5 கி.மீ., துாரத்தில் பிரயாக்ராஜில் 400 சொகுசு குடியிருப்புகளை அமைத்துள்ளோம். 300 டீலக்ஸ் குடியிருப்புகளும், 100 பிரிமீயம் பிரிவில் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப கட்டணம் 16,200 ரூபாய். உணவுகள், பெட் வசதி, கழிப்பறை வசதி, 'சிசிடிவி' கேமரா பாதுகாப்பு உள்ளிட்டவை இருக்கும். இது குறித்து மேலும் தகவல் பெற, 8076025236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது https://www.irctctourism.com/mahakumbhgram என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஜெய்ஹிந்த்புரம்
டிச 26, 2024 06:28

ஆரம்ப கட்டணம் 16,200 ரூபாய்.. இந்த இடத்து சொந்தக்காரனை துரத்தி விட்டுட்டு அங்கே வெறும் கொட்டகை போட்டு, அந்த டென்ட்டு கொட்டாயிக்கு வாடகை ஆரம்ப கட்டணம் 16,200 ரூபாய்.. கல்லா கட்டுறவன் கட்டாயம் ஒரு குசராத்தியாகத் தான் இருப்பான். இதே வழிப்பறி கொள்ளையை தான் அயோத்தி கோவிலுக்கு செல்பவர்களிடம் செய்தார்கள்.


raja
டிச 26, 2024 07:15

சந்தோஷ படு மூர்க்கா... இப்படி இந்துகளிடம் கொள்ளையடித்து உன் ஜமாத்தார்களுக்கு அரசு சம்பளம் கொடுகிறதே...உன் மத மக்களிடமே மசுதிகளிடமோ இது போல் வசூலிக்க வில்லையே அதை ஏன் என்று கேட்பாயாக...


Kasimani Baskaran
டிச 26, 2024 07:29

அரசு நிறுவனம் என்று கூட தெரியாமல் உருட்டுவது மகா கேவலம்.


N Sasikumar Yadhav
டிச 26, 2024 08:16

அந்நியமதத்தை பின்பற்றும் உங்களுக்கு கவலை வேண்டாம்


ஜெய்ஹிந்த்புரம்
டிச 28, 2024 02:13

IRCTC வெறும் புக்கிங் portal மட்டும் தான். கங்கை ஆற்றங்கரையில் 10 கிலோமீட்டர் தூரம் இந்த மாதிரி குடில்களுக்கு தனியாருக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை