மேலும் செய்திகள்
சத்துணவு பணியாளர் ஒன்றியம் தீர்மானம்
02-Nov-2025
சென்னை: அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ - மாணவியருக்கு முட்டை வழங்குவதற்காக, ஓராண்டுக்கு தேவையான, 113.38 கோடி முட்டைகள் சப்ளை செய்ய, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான, 'டெண்டர்' கோரப் பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் துறை சார்பில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, ஓராண்டிற்கு தேவையான முட்டைகள் கொள்முதல் செய்ய, 690 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், 38 லட்சத்து 77,438 மாணவ - மாணவியருக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. இம்முட்டையை, ஓராண்டுக்கு மண்டல வாரியாக சப்ளை செய்ய, தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்ய, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு இயக்குனரகம், 'டெண்டர்' கோரியுள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், ஓராண்டுக்கு, 113 கோடியே 38 லட்சத்து 78,948 முட்டைகள் சப்ளை செய்ய வேண்டும். முட்டை, 45 முதல் 52 கிராம் எடையுள்ளதாக இருக்க வேண்டும் என, டெ ண்டரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
02-Nov-2025