உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடைபெறவில்லை : சொல்கிறார் வடக்கு மண்டல ஐஜி

வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடைபெறவில்லை : சொல்கிறார் வடக்கு மண்டல ஐஜி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' திருத்தணியில் வட மாநிலத்தவர் என்பதால் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்,'' என வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மஹாராஷ்டிரா இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: டிச., 27 ல் திருத்தணியில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. ரயிலில் வட மாநிலத்தவர் தாக்கப்பட்டார் எனக் கூறப்படுவது தவறு. முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி இல்லை அவர், 2 மாதங்களாக பல இடங்களுக்கு சென்றுள்ளார்.சென்னையில் இருந்து திருத்தணிக்கு இளைஞர் சென்ற நேரத்தில் 4 சிறுவர்கள் உடன் இருந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் நேற்று முன்தினம்( டிச.,28) கைது செய்யப்பட்டனர்.தாக்குதலுக்கு உள்ளானவர் நலமுடன் உள்ளார். சொந்த ஊருக்கு செல்லும் போது தாக்குதல் நடந்துள்ளது. சிறுவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்தி, மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வலுக்கட்டாயமாக ரயிலில் இருந்து இறக்கிவிட்டு, பட்டாக்கத்தியால் தாக்கி அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளானவர் நலமுடன் உள்ளார். அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளனர்.தாக்குதல் சம்பவத்தில் சிறுவர்கள் மீது அதிகபட்ச தண்டனை கிடைக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் 109 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயிலில் இருந்த 4 சிறுவர்களில் 3 பேர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவரை நீதிபதியின் அறிவுரைப்படி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில் சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை.அவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினாரா என விசாரணை நடந்து வருகிறது. ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ கஞ்சா கடந்த 6 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்டது. 10 மாத்திரை பிடிபட்டாலும் மெயின் சப்ளையரை தேடி செல்வோம்.போதைப்பொருள் பயன்படுத்துவதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.சமூக ஊடகங்களில் வரும் ரீல்ஸ்களை கண்காணித்து வருகிறோம். இந்த நிகழ்வு தான் வெளியே தெரிய வருகிறது. ரீல்ஸ் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது தொடர்பாக ஏராளமான எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி அவர்களை அனுப்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

SUBBU,MADURAI
டிச 30, 2025 19:44

இதே போல்தான் 2022 வருடம் கோவையில் சிலிண்டர் வெடித்தபோது அது வெடிகுண்டு இல்லை என பேட்டி அளித்தார் அப்போது தமிழக காவல்துறையின் DGP யாக இருந்த சைலேந்திரபாபு. ஆனால் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை காரில் இருந்தது வெடிகுண்டுதான் என்று உறுதியாக கூறிய பின் அந்த வழக்கு பின்னர் NIA மாறி அவர்கள் விசாரணை நடத்திய போது அது தீவிரவாதிகள் நடத்திய சிலிண்டர் வெடிகுண்டு தாக்குதல்தான் என உறுதி செய்யப்பட்டது.


Raja
டிச 30, 2025 19:36

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கூழை கும்பிடு போட்டு விட்டு மக்களிடம் மட்டும் தான் அதிகாரத்தை காட்ட முடியும், காட்டி கொண்டிருக்கின்றனர். எல்லாம் ஏகாதிபத்திய கிருந்தவ வெள்ளைக்காரன் விட்டு சென்ற அரசு எந்திரம் .


D Natarajan
டிச 30, 2025 19:11

திராவிட மாடெல் ஒழிய வேண்டும் , தமிழன் தலை நிமிர வேண்டும்.


Modisha
டிச 30, 2025 19:07

பாவம் , நல்ல அதிகாரி தான். ஆனால் திமுக அரசுக்கு முட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை இன்னும் 5 மாசம்.


ஆரூர் ரங்
டிச 30, 2025 19:01

வடமாநிலத்தவர் என்பது தவறு தான். மேற்கு மாநிலமான மஹாராஷ்டிரா என்பதே சரி. ஆனாலும் அஸ்ரா அசராம ஆளும் தீயவர்களுக்கு இப்படி முட்டுக்கொடுக்க வேண்டாமே.


raja
டிச 30, 2025 18:44

சட்டமடா.. ஒழுங்குடா..திருட்டுடா .. திராவிடம் டா... மாடல் டா...விடியல்டா... ஆட்சிடா... காரி உமிழ்டா...


SUBBU,MADURAI
டிச 30, 2025 18:39

பதவி உயர்வுக்கோ அல்லது சம்பள உயர்வுக்கோ விடுமுறை நாட்களில் இந்த திராவிடமாடல் திமுக அரசை எதிர்த்து அறவழியில் போராடும் தமிழக ஆசிரியர்ளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் போலீஸை வைத்து அராஜகம் பண்ணி அவர்களை தர தரவென்று இழுத்து அவர்களின் ஆடைகளை கிழித்து நாயை வண்டியில் துக்கிப் போடுவதை போல காவல் துறை வண்டிக்குள் தூக்கிப் போடுவதை பார்க்கும் மாணவனுக்கு எப்படி அந்த ஆசிரியர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வரும்? எனவேதான் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் இது போன்ற வன்முறையில் ஈடுபடக் காரணம்.


Sun
டிச 30, 2025 18:36

ஒரு வட மாநில அதிகாரியை வைத்தே என்ன ஒரு சப்பைக்கட்டு!


Govi
டிச 30, 2025 18:28

பிறகு நீ வேறுன்ன சொல்லுவ


chandrasekar
டிச 30, 2025 18:17

அடேங்கப்பா.... என்ன ஒரு விளக்கம். புலம்பெயர் தொழிலாளி அல்லாத, சுற்றிப்பார்க்க வந்தவரை தாக்கினால் தவறு இல்லையா... அது சரி தாக்கியவனுக்கு அடிபட்டவர் புலம்பெயர் தொழிலாளி அல்ல என்பது தெரிந்தே தாக்கினாரா...தெரிந்து தாக்கினால் அது சுற்றுலா பயணி மீதான தாக்குதலாகி விடும். தெரியாமல் தாக்கினார் என்றால் அது புலம்பெயர் தொழிலாளர் மீது திராவிடத்தால் கட்டமைக்கப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு எனலாம்.... பாவம் அஸ்ரா கர்க்... நல்ல அதிகாரி என பெயர் எடுத்தவர். அவர் நிலை இப்படி விளக்கம் சொல்ல வேண்டி வந்து விட்டது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி