உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், பயணியிடம் அவதுாறாகவும், மத ரீதியாகவும் பேசியதை கண்டித்து வள்ளியூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதையடுத்து, இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தபுரம் பணிமனையை சேர்ந்த டிஎன்.74 என்.2120 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ், தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே நாலுமாவடி கிறிஸ்துவ சபையில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு இன்று(நவ.,09) அதிகாலை, 4:50 மணிக்கு திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தது. பின்னர் அதிகாலை, 5:00 மணியளவில் நாகர்கோவில் புறப்பட்டது. அந்த பஸ்சில் வள்ளியூரை சேர்ந்த கோவில் பூஜாரி சுப்பிரமணியன், தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பயணித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0tqltqpe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் மேல் சட்டை அணியவில்லை. ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். 'பஸ் வள்ளியூருக்குள் செல்லாது; பைபாஸில் மட்டுமே நிற்கும்' என, கண்டக்டர் அந்தோணி அடிமை தெரிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன், 'இந்த பஸ் வழக்கமாக வள்ளியூருக்குள் செல்லும். ஏன் இன்று பைபாசில் இறங்க சொல்கிறீர்கள்?' என, கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கண்டக்டர், 'பஸ்சில் நாலுமாவடி கிறிஸ்துவர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். உன் ஒருத்தனுக்காக மட்டும் வள்ளியூருக்குள் வர முடியாது' என, அவதுாறாக பேசினார்.சுப்பிரமணியன் இறங்க மறுத்ததால், பஸ் வள்ளியூருக்குள் சென்றது. அங்கு அவர் குடும்பத்தினர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வள்ளியூர் பொதுமக்களும் பஸ் முன் கூடி போராட்டத்தில் இணைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சுப்பிரமணியனிடம் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், பஸ் நாகர்கோவில் புறப்பட்டு சென்றது.சுப்பிரமணியன் கூறுகையில், ''பஸ்சில் இருந்த பெரும்பாலான பயணியர் கண்டக்டருக்கு ஆதரவாக மத ரீதியாக நடந்து கொண்டனர். இந்த பஸ் நாலுமாவடியில் இருந்து அவர்களுக்காக மட்டும் ஒப்பந்தம் பேசி இயக்கப்படவில்லை. அனைவரும் டிக்கெட் எடுத்து தான் பயணித்தோம். கண்டக்டரும் அவதுாறாக பேசினார். இதை வீடியோவாக பதிவுசெய்துள்ளேன்,'' என்றார்.வள்ளியூர், ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குள் வருகிறது. இது சபாநாயகர் அப்பாவு தொகுதி என்றாலும், அரசு பஸ்கள் வள்ளியூருக்குள் செல்வதை பெரும்பாலும் தவிர்க்கின்றன என்பதே பொதுமக்கள் குற்றச்சாட்டு. திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே கண்டக்டர் இல்லாமல் இயங்கும், 'ஒன் டூ ஒன்' பஸ்கள் தவிர, மற்ற அனைத்து அரசு பஸ்களும் வள்ளியூருக்குள் செல்வது கட்டாயம். அதை பின்பற்றாமல் சிலர் பயணியரிடம் கடுமையாக நடந்து கொள்வது தொடர்கிறது.மத ரீதியாகவும், அவதுாறாகவும் நடந்து கொண்ட கண்டக்டர் அந்தோணி அடிமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வள்ளியூர் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நாகர்கோவில் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடவடிக்கை

பயணியிடம் அவதூறாக பேசிய நாகர்கோவில் அரசு பஸ் கண்டக்டர் அந்தோணி அடிமையை சஸ்பெண்ட் செய்து, போக்குவரத்து பொது மேலாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 160 )

E Balaguru
நவ 10, 2025 17:25

நடத்துனர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டுள்ளார். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.


R. SUKUMAR CHEZHIAN
நவ 10, 2025 17:18

மதமாறிய கிருஸ்தவர்கள் தாங்கள் இந்துவாக இருந்த போது அனுபவித்த சலுகைகளை மதமாறிய பின்பும் அனுபவிக்கிறார்கள் சட்டத்தில் இதற்கு அனுமதி இல்லை இதனால் ஏழை இந்துகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிபோகிறது ஆதலால் மதமாறியவர் சலுகைகளை திரும்ப பெறவேண்டும் மதம் மாறிய பிறகு அவர்களுக்கு ஈனமாணம் இல்லாமல் போய்விடுவதால் அவர்கள் அனுபவித்த சலுகைகளை திரும்பி தரமாட்டார்கள் ஆதலால் அரசு தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு சம்பந்தம் பட்ட ஜாதி சங்கங்கள் அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.


M S RAGHUNATHAN
நவ 10, 2025 17:14

அம்பேத்கர் அவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகள் பட்டியல் இனத்தை சேர்ந்த இந்துக்களுக்கு மட்டும் தான் கொடுக்கப் படவேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். அதுவும் 10 வருடங்கள் தான் என்றார். ஆனால் நடப்பது என்ன ? மதம் மாறும் மக்களுக்கு எதற்கு சலுகை ? சலுகைகள் கொடுக்கப் பட்டதன் காரணம் ஹிந்து மதத்தில் அவர்கள் ஜாதி என்ற சமூக கட்டுப் பாட்டால் கல்வியில், அரசாங்கம் வேளைகளில் முன்னேற முடியவில்லை, பிரதிநிதித்துவம் இல்லை என்ற காரணத்தால். மதம் மாறியபின் அவர்களுக்கு எந்த சமூக கட்டுப்பாடும் சாதிக் கொடுமைகளும் நிகழ்வதில்லையே ? ஏன் சலுகைகள் ? பட்டியல் இனத்தை சேர்ந்த ஹிந்துக்கள், இதர பிற்படுத்தப் பட்ட ஹிந்து சமூகத்தினரின் கல்வி, வேலை வாய்ப்பு பறி போகிறது. இது அந்த சமூகத்தினருக்கு புரியவில்லை. அவர்களுக்கு வரவேண்டிய சலுகைகளை மதம் மாறிகள் எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இதுதான் உண்மையில் நடக்கிறது. இதில் மதம் மாறிய crypto கிருத்துவ அதிகாரிகள் பங்கு மிக அதிகம். Infact some senior IAS officers who claim that they are honest and have integrity are indulging in silently encourage the converted Christians with govermental benefits. If a social audit is conducted in THADCO, a lot of information will emerge. As a retired bank official, I know such things first hand.


M S RAGHUNATHAN
நவ 10, 2025 17:01

ஒவ்வொரு மதராசாவிலும் , மசூதியிலும், கிருத்துவ திருச் சபைகளிலும் அவர்கள் மக்களிடம் இந்துக்கள் கடைகளை புறக்கணிக்கச் சொல்கிறார்கள். இனி அதுபோல் இந்துக்களும் ஹிந்துக்கள் கடைகளில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும்.


Madras Madra
நவ 10, 2025 16:57

ஜோசப் விஜயும் சைமனும் இதை பற்றி பேச வேண்டும் RSS மதம் மாறிய கிறிஸ்துவர்களை திரும்பவும் ஹிந்துக்களாக மதம் மாற்ற வேண்டும் சிறுபான்மை சட்டங்கள் நீக்க பட வேண்டும் இந்தியர்கள் அனைவரும் பெரும்பான்மையினராக வாழ வேண்டும்


Uthamarseeli Kattanthadi
நவ 10, 2025 16:57

Article 356, ஏன் பயன்படுத்தக்கூடாது?. அரசை உடனே கலைக்கவேண்டும். ஆள்பவர்களின் சட்டமும் சரியில்லை ஆளும் சரியில்லை.


Priyan Vadanad
நவ 10, 2025 16:57

வீட்டு சண்டையை தெருச்சண்டையாக்குவதும் தெருச்சண்டையை ஊர்ச்சண்டையாக்குவதும் எவருக்கும் அழகல்ல.


Priyan Vadanad
நவ 10, 2025 16:52

இந்தமாதிரியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சமூக ஒற்றுமைக்கு கெடுதல் என்று உணர்தல் வேண்டும்.


Priyan Vadanad
நவ 10, 2025 16:47

வெறுப்பை வளர்க்கும் இந்த செய்தியை இந்த அளவுக்கு ஓட்டணுமா? மாற்றுங்கள். ஒரு செய்தியை சமூக ஒருமைப்பாட்டு உணர்வு உருவாகுமாறு வெளியிடுங்கள்.


Indian
நவ 10, 2025 17:55

Go அண்ட் tell church


KRISHNAN R
நவ 10, 2025 15:35

தெரிந்து கொள்ள வேண்டும் மக்கள்


சமீபத்திய செய்தி