உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரட்டியடிப்பதற்குப் பெயர் தான் விடியல் அரசா: சீமான்

விரட்டியடிப்பதற்குப் பெயர் தான் விடியல் அரசா: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மண்ணின் மக்களை அவர்களது நிலத்தை விட்டே தி.மு.க., அரசு விரட்டியடிப்பதற்குப் பெயர் தான் விடியல் அரசா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்க தமிழக அரசு அறிவிக்கை அனுப்பியிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். மதுரை முல்லை நகர் பகுதியில் இரண்டு தலைமுறைகளாக மக்கள் வாழும் இடம் கண்மாய் இருந்த பகுதி என்றால், மக்கள் அங்குக் குடியேறி வாழத் தொடங்கியவுடனேயே அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இருக்கலாமே? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yyph90wb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கூரை வீடுகள்

குடியிருப்புகள் அமைக்க அவர்களுக்குத் தடைவிதித்திருக்கலாமே? மாறாக தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்ட 160 மனைகளை வழங்கியது எப்படி? ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்றத்துடிக்கும் அதே இடத்திற்கு, இன்றைய ஆட்சியாளர்கள் ஓட்டு கேட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று ஏறி இறங்கும்போதெல்லாம் தெரியவில்லையா அது ஆக்கிரமிப்பு நிலமென்று? ஆக்கிரமிப்பென்றால், ஏழைகளின் குடிசை வீடுகளும், எளிய மக்களின் கூரை வீடுகளும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நினைவுக்கு வருவதேன்? ஏன் அவைகள் மட்டும் கண்ணை உறுத்துகிறது? காலங்காலமாக வாழ்ந்த மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து ஆக்கிரமிப்பென்று கூறி, அடித்துத் துரத்துவார்களென்றால் தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ள பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், பொழுதுபோக்குக் கூடங்கள் என எதுவொன்றிலாவது அரசு கை வைத்திருக்கிறதா? வைக்க முடியுமா? மண்ணின் மக்களை அவர்களது நிலத்தைவிட்டே தி.மு.க., அரசு விரட்டியடிப்பதற்குப் பெயர் தான் விடியல் அரசா?

திராவிட மாடல்

அடித்தட்டு உழைக்கும் மக்கள் அரும்பாடுபட்டு உழைத்து, சிறுகச் சிறுக சேர்த்தப் பணத்தில் தங்கள் வாழ்நாள் கனவாக எண்ணிக் கட்டிய வீட்டை இடித்து, அவர்களைக் காவல்துறையைக் கொண்டு அப்புறப்படுத்துவது தான் திராவிட மாடல் ஆட்சியா? நெடுங்காலமாக நிலைத்து வாழ்ந்து வரும் எளிய மக்களின் வீடுகளை இடித்து, அவர்களின் வயிற்றிலடிக்கும் திமுக அரசின் செயல் துளியும் மனச்சான்றில்லாத கொடுங்கோன்மையாகும். தி.மு.க., அரசு நீதிமன்றத்தில் சரியான வாதங்களை முன்வைத்திருந்தால் வீடுகளை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது. ஆகவே, மதுரை முல்லைநகர் மக்களின் குடியிருப்புகளை இடித்து அவர்களை வாழ்விடத்தை விட்டே வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தமிழ்வேள்
நவ 15, 2024 20:36

அந்தாக்குல விசியலச்சுமி வருதாம்...நீர் இந்தாக்குல ஓடிப்போயிருலேய்....


சாண்டில்யன்
நவ 15, 2024 16:50

கருணாநிதியை பதிமூன்று ஆண்டு வனவாசத்துக்கு அனுப்பிவிட்டு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்கள் இப்போது நாற்பது ஆண்டுகளாய் என்றால் யார் பொறுப்பேற்பதாம் வாய்கிழிய பேசுபவர்கள் அப்போவெல்லாம் பொத்திகிட்டு இருந்தது என்ன காரணம் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் தருவதில்லை என்று அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்


Murthy
நவ 15, 2024 14:03

போராட மட்டும் சீமான் வேண்டும்.. 500 1000 என்று வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் இவர்களுக்கு இதைதான் திராவிட மாடல் பரிசாக தரும் .


சாண்டில்யன்
நவ 15, 2024 21:34

இவர்பாட்டுக்கு ரேட்டை ஏத்திட்டார் ரூ 200 ம் கோட்டரும்னுதானே ஓட்ட ரெக்கார்டு மாதிரி "கருத்து" போடுவானுங்க யார் யாருக்கு என்ன வேலை தரணும்னு தமிழக வாக்காளர்களுக்கு நல்லாவே தெரியுது தலை முதல் கால்வரை பகல் வேஷக்காரனா வந்து குச்சிப்புடி மாதிரி லவ்பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ் னு கைய கால ஆட்டினாலும் மயங்க மாட்டாங்களே


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 15, 2024 13:48

கடற்கரை ஆக்கிரமித்து சமாதி கட்டிக் கொண்டு உள்ளார்களே அதையும் கேப்பீங்கன்னு நினைச்சேன் ஆனா நீங்க கேக்கலேயே.


சாண்டில்யன்
நவ 15, 2024 15:26

பட்டினம் என்பதன் பொருள் என்ன


வைகுண்டேஸ்வரன்
நவ 15, 2024 11:39

20, 22 வருடங்களுக்கு முன்னால் யாரோ தன்னார்வ குழு போட்ட வழக்கு. 10 வருடம் அதிமுக வும் எதுவும் செய்யவில்லை. இது போன்ற பொய்யான தகவல்களை சீமான் தான் மூடி மறைத்து பேசறார்


வைகுண்டேஸ்வரன்
நவ 15, 2024 11:34

செய்தி முழுமையான தகவல்களுடன் இல்லை. அல்லது சீமான் வழக்கம் போல பொய் பேசறார். இது நீதிமன்ற உத்தரவு. கண்மாய் நிலத்தில் வசிப்பவர்களுக்கு எதிராக வழக்கு போட்டதும் திமுக அரசு அல்ல.


வைகுண்டேஸ்வரன்
நவ 15, 2024 11:30

காலையில் ஒண்ணு பேசுவார், மதியம் அதுக்கு எதிராகப் பேசுவார். விஜய் யை கழுவி கழுவி ஊத்துவார், அடுத்த நாளே, அவர் என் சகோதரர் என்று சொல்லுவார். நா த க உறுப்பினர்களும் அசிங்க அசிங்கமா திட்டுவானுங்க. விஜய் சூடு சொரணை இல்லாம, தொடச்சுட்டு சீமானை சகோதரர் னு சொல்லுவார். விஜய் ரசிகர்கள் வேற வழியில்லாம மூடிக்கிட்டு இருப்பாங்க. போங்கடாங்க, மானங்கெட்ட பசங்களா...


MADHAVAN
நவ 15, 2024 11:00

எதோ 3 நிமிடம் தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில இருந்துட்டு, இங்கேவந்து நீ புருடாவிடுவது இனமக்களுக்கு நல்ல தெரியும், வல்வெட்டி சிவா உன்னைப்பற்றி கூறியதை எல்லோரும் பார்க்கணும், அப்போ தெரியும் உன்னோட பித்தலாட்டம், ஏ கே 47 ஐ பக்கக்கூட உனக்கு யோக்கியதை இல்லை, இங்கேவந்து நீ உருட்டுடுற உருட்டு இருக்கே


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 15, 2024 10:58

இது தப்பான வாதம் சீமான். ஆக்கிரமிப்பு என்றைக்கும் ஆக்கிரமிப்புதான். இப்படி நீர் வழி பாதைகள் ஆக்கிரமிப்பால் இன்றைக்கு நாம் படும் துன்பங்கள் ஏராளம். இதனால் நமது வருங்கால சந்ததிகளின் வாழ்வும் கேள்விக்குறியாகி உள்ளது. அன்றைக்கு நீர்நிலை என்று தெரிந்தும் இவர்கள் எப்படி ஆக்கிரமித்தார்கள்? அது மிகவும் தப்பு. அப்புறம் இதற்க்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மேலும் கார்பொரேட் கைக்கூலிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களையும் மீட்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை விடுத்து சமூக அக்கறை கொண்ட நீங்களே ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசக்கூடாது சீமான்.


ஆரூர் ரங்
நவ 15, 2024 10:51

இது போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் சென்னை அடையாறு, கூவம் ஆறுகளை ஆக்கிரமித்து பல்லாயிரம் குடிசைகளைக் கட்டினர். அதன் காரணமாக வெள்ளநீர் வடிய வழியின்றி சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கி 300 பேர் இறந்தனர். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை யார் ஆதரித்தாலும் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்.


சாண்டில்யன்
நவ 15, 2024 16:43

வெள்ளத்தில் மூழ்கி 300 பேர் சாகலை அடையார் பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மடிந்தார்கள் என்பதே உண்மை வரலாறு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை