உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி புக்கிங் ஏஜன்டுகளும் 18ம் தேதி முதல் ஸ்டிரைக்

லாரி புக்கிங் ஏஜன்டுகளும் 18ம் தேதி முதல் ஸ்டிரைக்

சேலம் : டீசல் விலை, சுங்க வரி போன்றவற்றை குறைக்கக்கோரி, லாரி புக்கிங் ஏஜன்டுகள் சம்மேளனத்தினர், வரும் 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். சேலத்தில், நேற்று நடந்த, தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜன்டுகள் சம்மேளனத்தின் கூட்டத்தில், சம்மேளனத் தலைவர் ராஜவடிவேல் கூறியதாவது: ஓராண்டில், பலமுறை தொடர்ந்து டீசல் விலையும், சுங்க வரி, இன்சூரன்ஸ் மற்றும் லாரி டயர்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இவற்றைக் குறைக்க வலியுறுத்தி, கடந்தாண்டு அகில இந்திய லாரிகள், வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு, நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்படிக்கை ஏற்பட்டது. ஆனால், இதுவரை அமல்படுத்தவில்லை.

இது தொடர்பாக சேலத்தில், கடந்த 29ம் தேதி, தென் மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் கூட்டத்தில், வரும் 18ம் தேதி முதல் லாரிகள் இயக்கப்படாமல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு, லாரி புக்கிங் ஏஜன்டுகள் சம்மேளனமும், ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், 6,700 லாரி புக்கிங் ஏஜன்டுகள் உள்ளனர். அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வட மாநிலங்களுக்கு, வரும் 14ம் தேதி முதல், லோடுகள் புக்கிங் செய்வது நிறுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை