உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகள் படிப்பு செலவை அரசே ஏற்கும்!: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகள் படிப்பு செலவை அரசே ஏற்கும்!: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர்: ''பட்டாசு விபத்துகளில் இறக்கும், தொழிலாளர் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்,'' என, விருதுநகரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.விருதுநகரில், 77.12 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்; கலெக்டர் ஜெயசீலனை இருக்கையில் அமர வைத்து புகைப்படம் எடுத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f7idyer1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின், பட்டம்புதுாரில் நடந்த அரசு விழாவில், 417 கோடியே 21 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை, 57,556 பயனாளிகளுக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:விருதுநகர் மாவட்டத்தில், 1,256 ஊரக குடியிருப்புகளுக்கு, தாமிரபரணி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயத்த ஆடை பூங்கா

இருக்கன்குடி மாரிஅம்மன் கோவில் திருப்பணிகள், ஒருங்கிணைந்த ஆயத்த ஆடைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில், 95 சதவீதம் பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன், கல்லுாரி கனவு திட்டத்தால் அதிகளவு மாணவர்கள் உயர்கல்விக்கு சேர்ந்துள்ளனர். இதற்காக விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனுக்கு நல் ஆளுமை விருது வழங்கி உள்ளேன்.பட்டாசு விபத்துகளில் இறக்கும் தொழிலாளர் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும். மாவட்ட அளவிலேயே முடிவு செய்து கலெக்டர் வழங்கக்கூடிய வகையில், இதற்கான தனி நிதியம் உருவாக்கப்படும். அதற்காக, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

போராடுவேன்

நாளிதழ் ஒன்றின், 'டாப் 10' சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், என் பெயர் இடம் பெற்றது. இது, மக்களாகிய உங்களால் தான். தமிழகத்தை உயர்த்த, எல்லா புள்ளி விபரங்களிலும் வளர்ச்சி எதிரொலித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை உயர்த்த, என் சக்தியை மீறியும் உழைப்பேன்; போராடுவேன். நம்மை முந்தி வெற்றி பெற வேண்டும் என, பலர் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே, இன்னும் வேகமாக ஓட நினைக்கிறேன்.மக்களுக்கு பயனில்லாத திட்டங்களை கொண்டு வந்தேன் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உளறுகிறார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எதை பயனில்லாத திட்டம் என்கிறீர்கள். பழனிசாமி புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார். கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் நுாற்றாண்டு நுாலகம், 1.70 கோடி பேர் பெறும் மகளிர் உரிமை தொகை போன்றவற்றை பயனில்லாத திட்டங்கள் என்று கூறுகிறீர்களா? திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்காமல், பதவிக்காக கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்கள் பெயரையா வைக்க முடியும்.

புறக்கணிப்பர்

வாய்த்துடுக்கு, ஆணவத்தில் பேசி, பேசித்தான் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஆணவ பேச்சால், மக்கள் உங்களை தொடர்ந்து புறக்கணிப்பர். கருணாநிதி பெயரால் தமிழகத்தை வாழ வைக்கக் கூடிய திட்டங்களை செயல்படுத்தியதில் நான் பெருமைப்படுகிறேன். அத்திட்டங்களின் வெளிச்சத்தால் எதிர்க்கட்சி தலைவருக்கு கண் கூசுகிறது. என் பணிகள் தொடரும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கணேசன், எம்.பி.,க்கள் நவாஸ்கனி, மாணிக்கம் தாகூர், தலைமை செயலர் முருகானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகுராமன். மேலும், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் துறை முதன்மை செயலர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

sundaran manogaran
நவ 11, 2024 22:52

விபத்து ஏற்படும் அளவுக்குத்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும்.. லஞ்சம் ஊழல் துணையால்... பாவம் அப்பாவி தொழிலாளர்கள்


Ramesh Sargam
நவ 11, 2024 21:50

ஆக மொத்தம் நீங்க விபத்து ஏற்படாமல் இருக்க ஒரு தற்காப்பு நடவடிக்கையும் எடுக்கமாட்டீங்க…???


sankar
நவ 11, 2024 16:16

விபத்துகள் இல்லாத அளவுக்கு தொழில் நடத்தப்படும் என்று சொல்வதை விட்டுவிட்டு இது என்ன பிதற்றல் - மகன் அரசு செலவில் படிக்க தந்தை சாகணுமா - கள்ளச்சாராய மரணத்திற்கு பத்துலட்சம் என்ற அறிவிப்பு போல இதுவும் வெகுவாக கண்டிக்கத்தக்கது


M S RAGHUNATHAN
நவ 11, 2024 14:29

A very absurd precedent. The aim of the Government should be to stop illegal manufacture of crackers which is going like tiny industries. The government should take efforts to stop such clandestine activity. Secondly, the government should direct the big players in this crackers industry to modernise their production process by giving incentives. The government should set tough Conditions for operation of such industries and if there is a failure in Safety tem, the owners of the factories, the top management, the District Collector, the Director of concerned Fire Services, Inspector of Factories should be dismissed, arrested and trial should be conducted and stringent punishment should be awarded. Only tough Measures will ensure the loss of lives of ordinary workers.


Kumar
நவ 11, 2024 14:21

ஆமா கள்ள சாராயம் குடிச்சு செத்தா மட்டும் தான் 10 லட்சம்


R.PERUMALRAJA
நவ 11, 2024 12:49

அமரன் என்னும் படத்தில் தமிழர்களை " பண்டுகள் " என்று கூறி மலையாளி இழிவுபடுத்துகிறார்கள் , படத்தை தயாரித்தது " red giant movies " ,, அதாவது இவரது மகன் , பட்டாசு விபத்திற்கு இழப்பீடு கொடுப்பது சரியே , அனால் பல கோடி தமிழின இதயத்தை கூறு போட்ட இந்த வார்த்தைக்கு எதிராக இதுவரை ஒருவர் கூட போராட்டமோ ஆட்சபனையோ தெரிவிக்கவில்லை . எதற்கெடுத்தாலும் பொங்கும் தி மு க இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறது .


ஆரூர் ரங்
நவ 11, 2024 13:52

அந்தக் காலத்திலேயே தமிழர்களை சேரர்கள் பாண்டி என்று குறிப்பிடுவது வழக்கம். பாண்டிய நாட்டை ஒட்டியுள்ள பகுதி என்பதால் அப்படி. ஆனால் நாளடைவில் அது வசைச்சொல்லாக ஆகிவிட்டது.( ஆமாம் . வடக்கன், பீடாவாயன் ன்னு திட்டியது யார்?)


Anand
நவ 11, 2024 12:39

ஆல் ரெடி "TOLDED"


Radhakrishnan Seetharaman
நவ 11, 2024 12:00

எந்த பாதுகாப்பும் இல்லாமல் குடிசைத் தொழில் போல் நடந்து வரும் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளை வரையறுத்து முறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்து முடக்க வேண்டும். கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டுமே தவிர அதை வைத்து அரசியல் செய்ய நினைக்கக் கூடாது.


மொட்டை தாசன்...
நவ 11, 2024 10:38

விபத்து ஏற்படாமல் தடுப்பதே சரியான தீர்வு.


Jay Devan
நவ 11, 2024 10:06

Why not you take action before anyone die? This is the only government in the world encourage people to die and reward them whether it is alcohol or firecrackers or anything. You do have power to stop these fire accidents, what are you doing about it? Shameless politician, this is what happens if you come to power under the shadow of your dad


புதிய வீடியோ