UPDATED : டிச 04, 2024 08:00 AM | ADDED : டிச 04, 2024 07:58 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.,04) கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் கொடியேற்றினார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e1j61u22&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையொட்டி, தங்க கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளினர். கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் கொடியேற்றினார். வரும் டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தினத்தில் காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.