உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் புதிய வந்தே பாரத் ரயில்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன

தமிழகத்தில் புதிய வந்தே பாரத் ரயில்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த சனியன்று (ஆக.,31) தமிழகத்தில் இரு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி மூலம் துவக்கி வைத்தார். அந்த இரு வந்தே பாரத் ரயில்களும் இன்று (செப்.,02) திங்கள் அதிகாலை முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தனசென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வரை ஒரு வந்தே பாரத் ரயிலும், மதுரையிலிருந்து பெங்களூரு வரையிலான வந்தே பாரத் ரயில் ஒன்றும் பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்டன. எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்* சென்னை - நாகர்கோவில் (20627) வந்தே பாரத் ரயில் அதிகாலை 5:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு 5:23 க்கு தாம்பரம், 6:52க்கு விழுப்புரம், 8:55க்கு திருச்சி, 9:53க்கு திண்டுக்கல், 10:38க்கு மதுரை வந்து சேரும். இங்கிருந்து 10:40க்கு புறப்பட்டு 11:35க்கு கோவில்பட்டி, மதியம் 12:30க்கு திருநெல்வேலி, 1:50க்கு நாகர்கோவில் சென்றடையும்.* மறுமார்க்கத்தில் மதியம் 2:20க்கு புறப்பட்டு மாலை 3:18க்கு திருநெல்வேலி, 3:58க்கு கோவில்பட்டி, 5:03க்கு மதுரைக்கு, 5:48க்கு திண்டுக்கல், 6:45க்கு திருச்சி, 8:53க்கு விழுப்புரம், 10:28க்கு தாம்பரம், 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் புதன் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்.மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில்* மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (20671) அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 5:59க்கு திண்டுக்கல் சென்றடையும். அங்கிருந்து காலை 6:01க்கு புறப்பட்டு 6:50க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து 6:55க்கு புறப்பட்டு 8:08க்கு கரூர், 8:32க்கு, நாமக்கல், 9:15க்கு, சேலம், மதியம் 12:50 மணிக்கு பெங்களூரு கிருஷ்ணராஜபுரம், 1:00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 45 நிமிடம்.* மறுமார்க்கத்தில் மதியம் 1:30க்கு பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்திற்கு 1:55, மாலை 4:50 க்கு சேலம், 5:38 க்கு நாமக்கல், 5:58 க்கு கரூர், இரவு 7:20 மணிக்கு திருச்சி, 9:08க்கு திண்டுக்கல், 9:45 மணிக்கு மதுரை வந்து சேரும். மொத்த பயண நேரம் 8 மணி 15 நிமிடம். 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் செவ்வாய் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Malmarugan
செப் 03, 2024 07:59

திருச்செந்தூர் பகுதி மக்களுக்கு நேரடி ரயில் இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான ஆம்னி பஸ் ஏங்கி வருகிறது இதில் முறைகேடு நடப்பதாக அறிகிறோம் எனவே நெல்லை வரை செல்லும் வந்தே பாரத்தை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும்


Malmarugan
செப் 03, 2024 07:57

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரயில் விடாத நிலையில் திருநெல்வேலி வந்தே பாரத்தை திருச்செந்தூர் வரை நீடித்து அப்பகுதி மக்களுக்கு பயனடைய செய்ய வேண்டும்


Malmarugan
செப் 03, 2024 07:52

திருச்செந்தூர் பகுதி மக்களும் சுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தர்களும் உள்ள சென்னையிலிருந்து 650 கிம் தொலைவில் தொலைவில் உன்ன திருச்செந்தூருக்கு சென்னையிலிருந்து செல்லும் பக்தர்களும் பயணிகளும் கடலூர் வழியாக 775 கிமி பயணித்து வருகிறார்கள் பல வருடங்களாக எனவே திருச்செந்தூருக்கு ரயில் விடாத அரசு அரசியல்வாதிகளையும் வன்மையாக கண்டிக்கிறோம் திருச்செந்தூர் ரயில் பயணிகள் சங்கம்


Saai Sundharamurthy AVK
செப் 02, 2024 20:02

பொதுவாக, அதிலும் வெயில் காலங்களில் சாதாரண ரயில்களில் போகும் போது எதிராக வீசும் காற்றில் அனல் பறக்கும். இதனால் , முகம் கறுத்து போகும், தலை முடி காய்ந்து சிக்கு பிடிக்கும், உடம்பு சூடு பிடிக்கும். உடம்பு சூட்டின் விளைவாக கண்கள் எரிச்சலடையும். அதனால் மலச்சிக்கல் உண்டாகும். உடம்பு சோம்பலடையும். வந்தேபாரத் ரயில் என்பது ஒரு பகல்நேர ரயில். பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப வடிவமைப்பை நவீனமயமாக்கி விடப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு குளுகுளு வசதி, சற்று அகலமான இருக்கை வசதி மற்றும் சாயும் வசதி, நெரிசல் இல்லா பயணம், காலை உணவு, மதிய உணவு, செய்தித்தாள் வசதி கிடைக்கிறது. மேலும் நாம் செய்து கொள்ளும் மேக்கப் கலையாமல் போய் இறங்க முடியும். விரைவான பயணம், குறைந்த இடை நிறுத்தங்கள் போன்றவை சிறப்பம்சங்கள். அதனால் கட்டணம் அதிகரிக்கிறது. அதனால் வசதி படைத்தவர்கள் தான் பயணம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒரு அவசர தேவைக்கும், அலுவல் ரீதியாகவும், வியாபார, தொழில் நிமித்தமாகவும், தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காகவும் சாதாரண மக்களும் பயணம் செய்யலாம். அதே நேரத்தில் ஒரு ஆயிரம் பேர் இந்த ரயிலில் பயணம் செய்து விடுவதால் , குறைந்த கட்டணம் உள்ள ரயில்களில் அந்த ஓராயிரம் இடங்கள் காலியாகி விடுகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வோருக்கு ரிசர்வேஷன் செய்வோருக்கு எளிதில் இடம் கிடைத்து விடுகிறது. இப்போது, தேஜஸ், மற்றும் இரண்டு வந்தேபாரத் ரயில்களால் மற்ற ரயில்களில் கிட்டத்தட்ட 2500 இருக்கைகள் காலியாகி விடுகிறது. அது மாதிரி ரிட்டர்ன் வரும் போதும் 2500 இருக்கைகள் காலியாகி விடுகிறது. அதனால் , வேறு ஒரு ரயில் புதிதாக விட வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. மிக மிக நல்ல விஷயம் தானே !! ஆகவே, வந்தேபாரத்தை வரவேற்போம். இந்தியா நவீனமாவதை வரவேற்போம்.


xyzabc
செப் 02, 2024 18:34

திராவிடர்களுக்கு மகிழ்ச்சியான தருனம் .


Ms Mahadevan Mahadevan
செப் 02, 2024 15:22

முதல்லளிகள் அதிகாரிகள் பயணம் செய்வார்கள். சாமானிய, ஜவுளி காடை, பலசரக்கு கடை, கட்டிட பணி செய்வோர், சிறு தொழில் செய்வோர், தாம்பரம் சுற்று பகுதில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர் இந்தோர் பயணிக்க முன்பதிவில்லா வண்டிகள் இயக்க வேண்டும். செய்வார்களா அதிகாரிகளும் அரசியல் சுக வாடிகளும்?


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 02, 2024 09:42

எப்படியோ சாதாரண ரயில்களை கேட்டால் மக்களை கொள்ளை அடிப்பதற்கு வந்தே பாரத் என்று ரயில்களை இயக்குகிறார்கள். தமிழகத்தின் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏழைகளின் பாடு இன்றைக்கும் திண்டாட்டம்தான். எல்லாமே சும்மா பேருக்கு செய்கிறார்கள்.


ஜெகதீஸ்வரன் தண்டபானி
செப் 02, 2024 10:28

10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் என் சாதாரண ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமோ நிதியோ ஒதுக்க வில்லை? நடுத்தரவர்க்கம் இதை வரவேற்கும். நீங்கள் வேண்டுமானால் நடந்தோ அல்லது திராவிட ஆம்னி பஸ்சில் வந்தே பாரத் ரயிலை விட அதிக காசு கொடுத்து பயணம் செய்யலாம் சும்மா புலம்ப வேண்டாம்?


Almighty
செப் 02, 2024 10:46

ஆம்னி பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி எத்தனை சதவீதம் ரயில் நேரத்திற்கு வருகிறது என்று பாருங்க. பிறகு ரயில் நிலைய சுத்தம், பெட்டிகளின் பராமரிப்பு சுத்தம் பாருங்க. அப்படியே வந்தே பாரத் ரயிலின் காலி இட சதவீதம் பாருங்க. முக்கியமாக வந்தே பாரத் ரயிலுக்காக பிற ரயில் நிறுத்தப்பட்டதா அல்லது பெட்டிகள் குறைக்கப்பட்டதா என்பதையும் பாருங்க. பிறகு 2014 க்கு முன் இதெல்லாம் எந்த நிலையில் இருந்தது என்று உங்கள் குருட்டு கண்ணை கேளுங்க. அப்போது தான் உண்மையும் குற்றமும் தெரியும்.


panneer selvam
செப் 02, 2024 15:24

If you are poor , you can choose other trains, more over , you can go without ticket also.


Sathishkumar.N
செப் 02, 2024 08:32

இந்த ரயில் மட்டுமில்ல பச்ச கொடி காட்டுற ஸ்டேசன் மாஸ்டரும் காஸ்ட்லி. சாமானியன் பக்கத்துலயே வரமுடியாது


Hari
செப் 02, 2024 08:55

You can go by share auto.....


panneer selvam
செப் 02, 2024 15:28

Why common man has to travel to Bangalore that too only in Vande Bharat train , just to have masal dosa in Maveli Tiffin Room .


Prasanna Krishnan R
செப் 02, 2024 08:09

Jai shree ram.


Malmarugan
செப் 03, 2024 08:03

திருநெல்வேலிக்கு 7 மணி நேரத்தில் செல்லக்கூடிய மக்கள் இந்தியனாகவும் திருச்செந்தூருக்கு 14 இந்தியாவில் ஆதிகாலத்தில் இருப்பவர்கள் ஆகவும் கருதலாமா நேரத்தில் செல்லக்கூடிய மக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை