உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரி வீட்டில் பெண் போலீசுக்கு பணி ஒதுக்கீடு கூடாது; சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., கண்டிப்பு

அதிகாரி வீட்டில் பெண் போலீசுக்கு பணி ஒதுக்கீடு கூடாது; சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., கண்டிப்பு

சென்னை: பாலியல் துன்புறுத்தல் புகார் எதிரொலியாக, போலீஸ் உயர் அதிகாரிகளின் இல்லங்களில் (முகாம் அலுவலகம்) பெண் போலீசாருக்கு பணி ஒதுக்கக்கூடாது என உயர் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.போலீஸ் உயர் அதிகாரிகளின் இல்லங்களில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டெலிபோன் ஆபரேட்டர் போன்ற வேலைகளில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண் போலீசார் இருவர், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாக, டி.ஜி.பி.,யிடம் சமீபத்தில் புகார் அளித்தனர்.இத்தகைய புகார்களை தவிர்க்கும் நோக்கில் தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சார்பில் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது: * போலீஸ் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் டெலிபோன் ஆபரேட்டர் பணிகளில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.* பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில், பெண் போலீசார், ஸ்டேஷனில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.* பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை போன்ற வழக்குகளை விசாரிக்க பெண் போலீசார் அவசியம்.* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் தொடர்புடைய பாதிக்கப்பட்டோரிடம் குறைகளை கேட்டு புகார்களை பெறுவதற்கு பெண் போலீசார் ஸ்டேஷனில் இருக்க வேண்டியது அவசியம்.* இத்தகைய சூழ்நிலையில், முகாம் அலுவலகங்களில் நிர்வாகப்பணிகளில் பெண் போலீசாரை தேவையின்றி வைத்திருத்தல் கூடாது. அதற்கு பதிலாக, அவர்களை போலீஸ் ஸ்டேஷன், சிறப்பு பிரிவுகள் மற்றும் களப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதன் மூலம் அவர்களது திறமை, போலீஸ் துறையில் முழுமையாக பயன்படுத்தப்படும்.* அனைத்து மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களும் இந்த உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் அனுப்பிய அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

thonipuramVijay
பிப் 14, 2025 23:56

அதிகாரிகளுக்கு கை கால் இருக்கா இல்லையா ?? என்னத்துக்கு வீட்டில் வேலைசெய்ய இன்னொரு அரசு ஊழியர் தேவை ??


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 14, 2025 23:39

ஏணுங்க நம்ம தனபாலுக்கு டவூட்டு வந்திடுச்சாம், ஆண் அதிகாரிங்களா இருந்தா வீட்டுக்கு பெண் போலீஸ்காரிங்களை அனுப்பக்கூடாதுங்கறது சரி. அதுவே பெண் அதிகாரிங்களா இருந்தா? ஆண் போலீஸ்காரர்களை அனுப்பக்கூடாதுன்னு உத்தரவு போடலியே ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற சமூக நீதிப்படி எங்கியோ இடிக்குது போல இருக்கேன்னு தனபாலு அண்ணாச்சி டவுட்டை கெளப்புதாக


தாமரை மலர்கிறது
பிப் 14, 2025 22:27

ஒருவர் பாலியியல் துன்புறுத்தப்பட்டார் என்பதற்காக ஒட்டுமொத்த போலீஸ் அதிகாரிகளை சந்தேகப்படக்கூடாது.


Barakat Ali
பிப் 14, 2025 21:21

ஆண்டாண்டு காலமாக போலீஸ் மேலதிகாரிகளின் பாலியல் உணர்வுகளுக்கு பெண் போலீசார் வடிகாலாக அமைந்துவிடுவதை சிறுவயதில் இருந்தே பத்திரிகைகளில் படித்து வருகிறோம் .... திடீரென்று சட்டம் ஒழுங்கு ஏ டி ஜி பி பூச்சாண்டி காட்டுகிறார் ....


அசோகன்
பிப் 14, 2025 17:37

சமூக நீதி ஆட்சியே பெண்களை குழந்தைகளை சீரழித்து போதைபொருள்களை உண்ணவைக்கதான்..... அந்த ஆட்சியின் கீழ் இயங்கும் போலீஸ் எப்படி இருக்கும்


சிவா. தொதநாடு.
பிப் 14, 2025 17:26

ஆண் போலீசோ பெண் போலீஸோ யாராக இருந்தாலும் அவர்களும் அரசு ஊழியர்கள் தானே . ஒரு அரசு ஊழியர் இன்னொரு அதிகாரி வீட்டில் வேலைக்காரராக இருப்பது என்ன ஒரு கேவலம் அவர்கள் மனம் என்ன பாடு பட்டு அந்த வேலையை செய்யும் போது.


தமிழ் மைந்தன்
பிப் 14, 2025 15:45

கடந்த நான்கு ஆண்களாக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில், பெண் போலீசார், ஸ்டேஷனில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. சபாஷ் இதைத்தான் அண்ணாமலை தினமும் சொல்லி வருகிறார். தமிழக மக்கள் புரிந்துகொண்டால் சரி.


naranam
பிப் 14, 2025 15:20

இவர்கள் மீது சட்டப்படி மற்றும் துறை ரீதியான என்ன நடவடிக்கை?


dumilan
பிப் 14, 2025 14:30

அட பாவிகளா வீட்டு வேலைக்கு பெண் போலீஸ்...பெயருக்கு டெலிபோன் ஒப்பரேட்டர் , கம்ப்யூட்டர் ஒப்பரேட்டர் ...இப்படி பாலியல் தொந்தரவு...விளங்கிடும் தமிழ்நாடு போலீஸ்!!!...


VinothB
பிப் 14, 2025 14:30

மிக மிக தாமதமான முடிவு. இப்பவாச்சும் புத்தி வந்ததே என்று சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.


முக்கிய வீடியோ