வாசகர்கள் கருத்துகள் ( 55 )
வளைகுடா நாடுகளில் எல்லாம் மன்னர்கள் கலாச்சாரப்படி தான் உடை அணிகிறார்கள் எவ்வளவோ பணம் கொட்டி கிடந்தும்.
பொது இடங்களையும், நமது மனதையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். பொது இடங்களை. தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் ..சரி...மனதை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சாமியார் மாதிரி அறிவுறுத்துகிறார். தூய்மை மனதுடையார் பேசுகிறார். எல்லோரும் கேட்டுக்கோங்க அமைச்சர் பதவி என்பது வேலையா? சேவையா? நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது சேவை எண்ணத்தில் நடப்பது மாதிரி தெரியவில்லை.
அவர்களை அமைச்சர்களாக அமைச்சர்களாக ஆக்கலாம் அதை விட்டுவிட்டு சும்மா பாராட்டி கொண்டே இருந்தால் என்ன பயன்?
அவிங்க சம்பளம் கேட்டாங்க.அதுக்கு போராட்டம் நடத்தினாங்க. நம்ம அப்பாங்குற முகஸ் என்ன பண்ணினாரு? கோர்ட்டை மிரட்டி அவிங்கள அரெஸ்ட் பண்ணி அப்புறப்படுத்தினாரு. இப்போ சாப்பாடுன்னு ஒரு ஓரங்க நாடகம். சாப்பாடு போட்டோம் ன்னு பொய் கணக்கு எழுதி கொள்ளை அடிக்க இன்னோர் நூதன வழி. இன்னும் ஒரு 5 மாசமிருக்கே.அதுவரை அடிக்கலாமே..
இந்த தூய்மை பணியாளர்கள் யாருக்கும் அடிமையல்ல .அரசியல் வாதிகளுக்கும் அடிமையல்ல .இது இப்படி இருக்க -அவர்கள் செய்யும் வேலைக்கு ஒழுங்காக சரியான ஊதியம் கொடுத்தால் போதும் .இது போன்ற அரசியல்வாதிகளால்தான் அவர்களின் பணியை சேவை என்று சொல்லிய சுய நலம் பாராட்டும் அரசியல்வாதிகள்தான் சுயநலவாதிகள் .மக்களின் உழைப்பை உறிஞ்சும் ஒட்டுண்ணி அரசியல் வாதிகளின் கருத்துக்கள் தேவையா ?
அப்ப அவர்களை ஏன் நிரந்தரம் செய்ய மறுக்கிறீர் . சோறு மட்டும் போட்டு விட்டால் போதுமா . சம்பளம் உயர்வு மருத்துவ காப்பீடு கொடுக்கவில்லை. நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் பீஹார் போல...
அப்படிப்பட்ட சேவை அரசு மூலமாக செய்தால் நன்றாக இருக்கும் .தனியார் ஒப்பந்தக்காரர்கள் மூலமாகத்தான் சேவை செய்ய வேண்டுமா .அவர்கள் பிள்ளைகள் நன்றாக படித்து இதைவிட பெரிய சேவை செய்யக்கூடிய வேலைக்கு செல்லட்டும். ஒப்பந்தத்தில் இருந்தால் அவர்கள் பிள்ளைகளும் இந்த சேவை செய்யக்கூடிய வேலைகளில் இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்
ஒரு மணி நேரம் கூட அவர்கள் செய்யும் வேலையை... அட செய்ய கூட வேண்டாம். அவர்கள் அருகில் கூட நாம் நிற்க மாட்டோம். நாள் முழுவதும் துர்நாற்றம் உள்ள சூழல். எளிதில் நோய் பற்றி கொள்ளும் ஆபத்து. எனவே அவர்கள் செய்வது சேவை கூட அல்ல. தியாகம். மிக மிக கண்ணியமாக நடத்தப்பட வேண்டியவர்கள்.
உண்மையான கருத்து .....நாட்டின் குப்பையை அகற்றும் அவர்கள் போற்றப்பட வேண்டும் .
அறிவாளி கண்டுபிடித்துவிட்டார் அடுத்த வருடம் நோபல் பரிசு இவருக்குத்தான்
வேளச்சேரி ஏரியை ஒரு தடவை சுத்தி பார்க்கணும்
மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சி
31-Oct-2025