உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மை பணியாளர்கள் செய்வது வேலையல்ல, சேவை: முதல்வர் ஸ்டாலின்

தூய்மை பணியாளர்கள் செய்வது வேலையல்ல, சேவை: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை அல்ல, சேவை. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை கலைவாணர் அரங்கில், மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவுத்திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆரோக்கியமாக வாழ அடிப்படை தூய்மை தான். வெயில், மழை, வெள்ளம் என எந்த பேரிடர் வந்தாலும் தூய்மைப் பணியாளர்கள் பங்கு முக்கியமானது. உங்களால் தான் சென்னை நீர்நிலைகள் தூய்மையாக உள்ளது. தூய்மை பணியாளரகள் செய்வது வேலையல்ல, சேவை. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. விடியும் போது சென்னை நகரம் தூய்மையாக இருக்க தூய்மை பணியாளர்களே காரணம்.சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் ஓய்வு அறை அமைக்கப்படும். 300 சதுர அடியில் ஓய்வு அறை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6ம் தேதி முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தமிழகம் தான் கிளீன் சிட்டி என்று சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும். தூய்மைப்பணியாளர்கள் வாரிசுகள் உயர்கல்வி பெற்று, அரசு பதவிகளை பெற வேண்டும். மக்கள் அனைவரும் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குப்பைகளை 100 சதவீதம் தரம் பிரித்து கொடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிச்சயம் செய்து தரும். தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை மேம்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தன்னலம் கருதாமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களின் சேவையை போற்றுவோம். அரசு தனது கடமையை செய்யும். மக்களும் பொறுப்பாக இருந்து பொது இடங்களையும், நமது மனதையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Matt P
நவ 16, 2025 14:33

வளைகுடா நாடுகளில் எல்லாம் மன்னர்கள் கலாச்சாரப்படி தான் உடை அணிகிறார்கள் எவ்வளவோ பணம் கொட்டி கிடந்தும்.


Matt P
நவ 16, 2025 14:25

பொது இடங்களையும், நமது மனதையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். பொது இடங்களை. தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் ..சரி...மனதை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சாமியார் மாதிரி அறிவுறுத்துகிறார். தூய்மை மனதுடையார் பேசுகிறார். எல்லோரும் கேட்டுக்கோங்க அமைச்சர் பதவி என்பது வேலையா? சேவையா? நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது சேவை எண்ணத்தில் நடப்பது மாதிரி தெரியவில்லை.


சிந்தனை
நவ 15, 2025 22:06

அவர்களை அமைச்சர்களாக அமைச்சர்களாக ஆக்கலாம் அதை விட்டுவிட்டு சும்மா பாராட்டி கொண்டே இருந்தால் என்ன பயன்?


V Venkatachalam, Chennai-87
நவ 15, 2025 20:08

அவிங்க சம்பளம் கேட்டாங்க.அதுக்கு போராட்டம் நடத்தினாங்க. நம்ம அப்பாங்குற முகஸ் என்ன பண்ணினாரு? கோர்ட்டை மிரட்டி அவிங்கள அரெஸ்ட் பண்ணி அப்புறப்படுத்தினாரு. இப்போ சாப்பாடுன்னு ஒரு ஓரங்க நாடகம். சாப்பாடு போட்டோம் ன்னு பொய் கணக்கு எழுதி கொள்ளை அடிக்க இன்னோர் நூதன வழி. இன்னும் ஒரு 5 மாசமிருக்கே.அதுவரை அடிக்கலாமே..


joe
நவ 15, 2025 19:16

இந்த தூய்மை பணியாளர்கள் யாருக்கும் அடிமையல்ல .அரசியல் வாதிகளுக்கும் அடிமையல்ல .இது இப்படி இருக்க -அவர்கள் செய்யும் வேலைக்கு ஒழுங்காக சரியான ஊதியம் கொடுத்தால் போதும் .இது போன்ற அரசியல்வாதிகளால்தான் அவர்களின் பணியை சேவை என்று சொல்லிய சுய நலம் பாராட்டும் அரசியல்வாதிகள்தான் சுயநலவாதிகள் .மக்களின் உழைப்பை உறிஞ்சும் ஒட்டுண்ணி அரசியல் வாதிகளின் கருத்துக்கள் தேவையா ?


Sundaran
நவ 15, 2025 17:48

அப்ப அவர்களை ஏன் நிரந்தரம் செய்ய மறுக்கிறீர் . சோறு மட்டும் போட்டு விட்டால் போதுமா . சம்பளம் உயர்வு மருத்துவ காப்பீடு கொடுக்கவில்லை. நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் பீஹார் போல...


manjagrup
நவ 15, 2025 17:29

அப்படிப்பட்ட சேவை அரசு மூலமாக செய்தால் நன்றாக இருக்கும் .தனியார் ஒப்பந்தக்காரர்கள் மூலமாகத்தான் சேவை செய்ய வேண்டுமா .அவர்கள் பிள்ளைகள் நன்றாக படித்து இதைவிட பெரிய சேவை செய்யக்கூடிய வேலைக்கு செல்லட்டும். ஒப்பந்தத்தில் இருந்தால் அவர்கள் பிள்ளைகளும் இந்த சேவை செய்யக்கூடிய வேலைகளில் இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்


சிவம்
நவ 15, 2025 16:45

ஒரு மணி நேரம் கூட அவர்கள் செய்யும் வேலையை... அட செய்ய கூட வேண்டாம். அவர்கள் அருகில் கூட நாம் நிற்க மாட்டோம். நாள் முழுவதும் துர்நாற்றம் உள்ள சூழல். எளிதில் நோய் பற்றி கொள்ளும் ஆபத்து. எனவே அவர்கள் செய்வது சேவை கூட அல்ல. தியாகம். மிக மிக கண்ணியமாக நடத்தப்பட வேண்டியவர்கள்.


பேசும் தமிழன்
நவ 15, 2025 23:41

உண்மையான கருத்து .....நாட்டின் குப்பையை அகற்றும் அவர்கள் போற்றப்பட வேண்டும் .


Mohanakrishnan
நவ 15, 2025 15:56

அறிவாளி கண்டுபிடித்துவிட்டார் அடுத்த வருடம் நோபல் பரிசு இவருக்குத்தான்


Field Marshal
நவ 15, 2025 14:54

வேளச்சேரி ஏரியை ஒரு தடவை சுத்தி பார்க்கணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை