உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தற்காலிக பயிற்சி மையத்திற்கு வாடகை தர வழியில்லை

தற்காலிக பயிற்சி மையத்திற்கு வாடகை தர வழியில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தற்காலிக பயிற்சி மையத்திற்கான வாடகை மற்றும் பயிற்றுநர்களுக்கு தருவதற்கான நிதியை, அரசு தராமல் காலம் தாழ்த்துவதாக, தீயணைப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:

சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, தீயணைப்பு துறைக்கு, 674 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்தாண்டு, டிச., 27ல், பணி ஆணைகள் வழங்கப்பட்டன. அவர்களுடன், காவல், சிறை துறைக்கு தேர்வானவர்களுக்கு அடிப்படை பயிற்சி முன்கூட்டியே துவக்கப்பட்டது.ஆனால், நிதி ஒதுக்கீடு மற்றும் உள் கட்டமைப்பு வசதி இல்லாததால், தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஏப்., 2ல் இருந்து தான் பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளன. சென்னை தாம்பரத்தில் உள்ள தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில், 100 பேரை மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்க முடியும். அதனால், பள்ளி, கல்லுாரிகள் என, ஆறு இடங்களில் தற்காலிக பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதற்கான வாடகை தொகை, பயிற்றுநர் படி எவ்வளவு என்பது குறித்து, தீயணைப்பு துறை டி.ஜி.பி.,யாக இருந்த ஆபாஷ்குமார், கடந்தாண்டு டிச., 26ல் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். அதில், 'மூன்று மாதங்களுக்கும், ஆறு பயிற்சி மையத்திற்கான வாடகை, பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு அடிப்படை ஊதியத்தில், 7.5 சதவீதம் தர வேண்டும். இதற்கு, 59.90 லட்சம் ரூபாய் தேவை' என்று, கூறியிருந்தார். ஆனால், எந்த நிதியும் இதுவரை வரவில்லை. அதனால், வாடகை தரக்கூட வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

selvelraj
ஏப் 24, 2025 08:38

இப்படியே தொடர்ந்து மறக்காமல் திராவிட மாடல் ஆட்சிக்கே ஓட்டு போடுங்கள், தமிழகம் எல்லா துறைகளிலும் விளங்கிடும். கள்ளச்சாராய சாவுக்கு தலைக்கு 10 லட்சம் கோடி கணக்குல செலவு செய்து மொண்டேகார்லோ இணையாக மவுண்ட் ரோடில் கார் ரேஸ் நடத்த காசு இருந்துச்சு ஆனால் யாருக்கு அதனால் பயன்? தீ விபத்து வந்தால் காப்பாற்ற நாதியின்றி சாவதுதான் விதியோ?


raja
ஏப் 24, 2025 06:11

மேலே உள்ள செய்தியில் விளையாட்டு வீரர்களுக்கு நிதியில்லை... இங்கே வாடகை கொடுக்க வழியில்லை ஒட்டு மொத்தமா புறங்கை நக்கிடானுவோ இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்டம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை