உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது: இபிஎஸ்.,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது: இபிஎஸ்.,

நாமக்கல்: ''தமிழகம் முழுதும் கருணாநிதி பெயரை வைப்பதற்காக புதிய அரசாணை வெளியிடப்பட்டு >உள்ளது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.சட்டசபை தேர்தலுக்காக, தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று இரவு, நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையில், நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் குடிக்கும் நீரில் மலம் கலக்கின்றனர். வேங்கைவயல் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிப்பதற்குள், மதுரை மாவட்டம் அமைச்சியாபுரத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்துள்ளனர்.

பாதுகாப்பு

இதை கண்டுபிடித்து தீர்க்க முதல்வர் ஸ்டாலினுக்கு திறமையில்லை. நெல்லை மாவட்ட காங்., தலைவர் ஜெயகுமார் கொலையில் இன்னும் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியவில்லை. சென்னையில், ஆம்ஸ்ட்ராங்கை ரவுடிகள் வெட்டிக்கொன்றனர். குற்றவாளிகள் சுதந்திரமாக மக்களை வெட்டிச்சாய்க்கும் நிலை நீடிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் முதல் குற்றவாளி, இறந்து விட்டதாக செய்தி வருகிறது. ஏற்கனவே சரணடைந்த ஒருவரை என்கவுன்டர் செய்து விட்டனர். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது.கரூரில் உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால், 41 உயிர்களை இழந்திருக்க மாட்டோம். அ.தி.மு.க., ஆட்சியில், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.,வுக்கு எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தோம். எங்காவது இதுபோன்ற நிகழ்வு நடந்ததா? இப்போது, பொதுக்கூட்டங்களை கூட, நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று நடத்த வேண்டி இருக்கிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இருமல் மருந்து தயாரிக்கும் கம்பெனியின் மருந்தை சாப்பிட்டு, ம.பி., மாநிலத்தில் 20 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.ஆனால், தி.மு.க., அரசின் சுகாதாரத்துறைக்கு இப்படி ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனி இருப்பதே தெரியவில்லை. அங்குள்ள காவல்துறை, இங்கு வந்து மருந்து கம்பெனியினரை கைது செய்த பின் தான் இந்த அரசுக்கு தெரிகிறது. தமிழகத்தில் தெருக்களின் பெயர்களை மாற்ற அறிவிப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே, இந்த பிரச்னைக்காகத்தான் அரசு போக்குவரத்து கழக பெயர் எல்லாம் எடுக்கப்பட்டது. மாவட்டத்துக்கு சூட்டப்பட்ட பெயர் எல்லாம் நீக்கப்பட்டது. மீண்டும் பிரச்னையை ஸ்டாலின் உருவாக்குகிறார்.

அரசாணை

ஜாதி பெயரில் தெருக்கள் இருக்கக் கூடாது என்பது நல்லது தான். ஆனால், கருணாநிதி பெயரை வைக்க முயற்சி செய்கிறீர்கள். இதுதான் தவறு. தன் அப்பா பெயரை வைக்கத்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறார். மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும் இந்த அரசாணை ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மீண்டும் த.வெ.க., கொடிகள்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று முன்தினம் குமாரபாளையம் கூட்டத்தில் பேசியபோது நடிகர் விஜயின் த.வெ.க., கட்சி கொடிகள் பறந்தன. அதைப் பார்த்ததும், 'கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது' என பழனிசாமி பேசினார். இந்நிலையில், நேற்று மாலை நாமக்கல், ஏ.எஸ்.பேட்டையில் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அந்த கூட்டத்திலும், பழனிசாமியின் பிரசார வாகனத்தை சுற்றிலும், அ.தி.மு.க., கொடிகளுடன், த.வெ.க., கொடிகளும் அதிகமாக காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rajah
அக் 10, 2025 13:35

நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி இவரைப்பற்றி இன்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றார். கட்சிகள் என்றால் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது இயல்புதானே. வரும் தேர்தலில் மக்கள் தீர்ப்பை வழங்குவார்கள்.


திகழ்ஓவியன்
அக் 10, 2025 11:20

சிரிப்பு தான் வெட்டுண்டு இறந்தவன் கட்ட பஞ்சாயத்து ரவுடி , வெட்டியவன் அதே கட்ட பஞ்சாயத்து ரவுடி என்னவோ யோக்கியன் வெட்டப்பட்டது போல , இப்படி எடப்பாடி க்கு ரவுடி சாவகசம் தேவை படுகிறது போல


Madras Madra
அக் 10, 2025 10:58

அவர் தலித் மக்களிடையே பிரபலமானது யாருக்கோ பிடிக்கவில்லை போல


Farmer
அக் 10, 2025 10:57

அதோட 000 வோட்டு thaan......


அப்பாவி
அக் 10, 2025 09:59

கொடநாடு மர்மமே துலங்கலே.


baala
அக் 10, 2025 09:25

நீங்கதான் பெரிய திறமைசாலி ஆச்சே கண்டுபிடிங்க.


Kjp
அக் 10, 2025 09:19

திமுக முட்டுக்கள் கருத்து போடும் போது யோசித்துப் போடுங்கள். கடந்த ஆட்சியில் அவர் செய்த தப்புக்களுக்கு எல்லாம் மக்கள் அவரை இறக்கி விட்டார்கள். அதே தப்பை நீங்களும் செய்தால் உங்களையும் இறக்கி விடமாட்டார்களா? எல்லோரும் அரசியல்தான் செய்வார்கள்.அவியல் செய்ய மாட்டார்கள்.


duruvasar
அக் 10, 2025 08:39

ஏ 1 யை என்கவுண்டரில் போட்டு தள்ளிய போதே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றாகிவிட்டது.


Vasan
அக் 10, 2025 07:26

There is a possibility for strong alliance comprising of ADMK Edapadi + ADMK Paneerselvam + ADMK Sengottian + ADMK Thinakaran + PMK Ramadoss + PMK Anbumoney + BJP Nagendran + BJP Annamalai + TVK Vijay.


pmsamy
அக் 10, 2025 07:12

தூத்துக்குடியில வேதாந்தா நிறுவனத்தை மூட சொல்லி மக்கள் போராடும்போது போலீஸ் துப்பாக்கில சுட்டது ஆட்சியில் தான். சாத்தான்குளம் வழக்கும் நீங்க இருக்கும் போது நடந்தது அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க


raja
அக் 10, 2025 08:06

அது லாயக்கு இல்லன்னு தான் இத கொண்டுவந்தோம்பே......


Ranganathan
அக் 10, 2025 08:10

தமிழகத்தின் சாபக்கேடு. அவர்கள் சரியில்லை என்று தானே விடியல் ஆட்சி என உறுதியாக சொன்ன வரை தேர்ந்தெடுத்தோம். இப்ப ஏன் தரவில்லை என கேட்டால், உறுதி தந்தவர் பதில் அளிக்க கடமைபட்டுள்ளார். அதை நீர்த்து போவது போல இப்படி ஒரு பதிலை பொது மக்களில் ஒருவரே தந்து, தீமைகளுக்கு முட்டு கொடுத்தால், ஆட்சியாளர்கள் எப்போதும் தங்கள் கடமையை செய்யவே மாட்டார்கள்.


சமீபத்திய செய்தி