உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எனது மகனை அடித்து சித்ரவதை செய்கின்றனர்: வேலூர் இப்ராஹிம் கதறல்

எனது மகனை அடித்து சித்ரவதை செய்கின்றனர்: வேலூர் இப்ராஹிம் கதறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கஞ்சா வைத்திருந்ததாக எனது மகன் மீது பொய் வழக்கு போட்டு போலீசார் தாக்கியதில் வாயில் ரத்தம் வருகிறது. காலில் காயம் பட்டுள்ளது,'' என பாஜ நிர்வாகி வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழக பாஜ நிர்வாகி வேலூர் இப்ராஹிம். அவர் அக்கட்சியின் சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளராக பதவி வகித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fkfvrrkz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சென்னை திருமங்கலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக அவரது மகன் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 15 கிராம் கஞ்சா, கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த குற்றச்சாட்டை மறுத்து வேலூர் இப்ராஹிம் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: என்னை அடக்குவதற்கு அவர்கள் கையில் எடுத்திருப்பது என் குடும்பத்தின் மீதான தாக்குதல். என் மகன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சட்டக்கல்லூரியில் படிக்கப்போகிறார் என்ற தகவல் தெரிந்தும் போலீசார் கஞ்சா வழக்கு என பொய் வழக்கு போட்டனர். அது நீதிமன்றத்தில் செல்லாது ஜாமினில் வெளியே வந்துவிடுவார் என்ற உண்மை தெரிந்து உடனேயே காலையிலிருந்து ஒவ்வொரு விஷயமாக ஊடகத்திற்கு சொல்லி வந்தனர்.பிறகு ஊடகத்திற்கு சொல்லாமல், வழக்கறிஞருக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மேலே இருந்து ஒரு உத்தரவு வந்தது என்ற விஷயத்தை கையில் வைத்துக் கொண்டு போதைப் பொருள் வைத்திருந்தார் என்பது போன்று வழக்கு தொடுத்தனர் . எனது மகனை ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். போலீசார் தாக்குகின்றனர். போலீசார் தாக்கியதில் வாயில் இருந்து ரத்தம் வருகிறது.நாக்கில் அடிபடுகிறது. ஆனால் எந்தப் பரிதாபமும் இல்லாமல் சட்டக் கல்லூரி செல்லும் மாணவனைக் கையைப் பிடித்துக்கொண்டு காலில் ஏறி பூட்ஸ் காலால் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. பெரிய கொடுமை நிகழ்த்தப்படுகிறது.இவ்வளவு செய்தும் நான் செய்யவில்லை என்று எனது மகன் உறுதியாக நின்றதில் இரவோடு இரவாக நீதிமன்றத்தின் முன்னால் ஆஜர்படுத்தினர். சிறையில் இருந்து 40 முதல் 50 நாட்கள் வெளியே வர முடியாது; எங்களை எதிர்த்தால் இப்படித்தான் பதிலடி கொடுப்போம் என்ற திமுகவின் சதியில் எனது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். எனது மகன் கல்வி, எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.அவர் உண்மையில் கஞ்சா பயன்படுத்தியுள்ளார் என்றால் நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கட்டும். நான் வரவேற்கிறேன். ஆதாரம் இருக்கும் என்றால் எனது மகன் என்றாலும் சட்டத்தின் முன் தண்டனை அனுபவிக்கட்டும். யாராக இருந்தாலும் என்ன தவறு செய்தாலும் தண்டனை பெறவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. போலீசார் நீதிமன்றம் மூலம் ஆதாரம் வைத்து இருக்கலாம். அதை விடுத்து எனது மகனை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து காலை உடைத்து இத்தனை கொடுமை செய்கிறீர்கள். பிறகு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது டாக்டர்கள் அதனை பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்திலும் நீதிபதி பதிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சத்யநாராயணன்
அக் 09, 2025 15:06

பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் நைனார் நாகேந்திரன் என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர் இவருக்காக செய்ய உதவிகள் என்னென்ன அதுபோலவே அண்ணாமலை அவர்களும் இவருக்கு என்ன உதவிகள் செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் இவரும் முக்கியமாக மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று விருப்பம் உள்ளவர் அவருக்கு ஒரு நிர்பந்தம் வரும்பொழுது அவரை கண்டுகொள்ளாமல் இருப்பது இந்த முன்னாள் மற்றும் இப்போது உள்ள பொறுப்புள்ள தலைவர்களுக்கு அழகு அல்ல


Karunagaran
அக் 09, 2025 14:23

சினிமா நடிகர்கள் ஆளும் தமிழகம் அரசாள்வதால் இப்படி நடக்கிறது என்று தெரிகிறது நைனா பதவியில் சேருமுன் பத்து ரூபாய் இல்லை பதவியில் சேர்ந்த பின் மக்கள் வரிப்பணம் பொய் புள்ளி விவரங்கள் கணக்கு மூலம் தங்கள் மீது உள் நாட்டு வெளிநாட்டு முதலீடு செய்து பல டிரில்லியன் மில்லியன் கோடி ரூபாய் கப்பல்கள் விமானங்கள் கார் உலகம் முழுவதும் உள்ள சொத்து பணம் வருமானம் டிவி ஸ்டேஷன்கள் ஸ்டுடியோ டிரஸ்ட் அறக்கட்டளைகள் நிறுவனங்கள் அனைத்தும் மத்திய விஜிலென்ஸ் ஈடி துறைகள் இராணுவம் மூலம் பறிமுதல் செய்து குடும்ப அட்டை வீதம் ஒரு கோடி ரூபாய் இலவசமாக வழங்க வேண்டும் என்று தெரிகிறது மக்களை முட்டாளாக்கும் தொழிலாளி சினிமா நடிகர் டைரக்டர் ஓசி மூளை உழைப்பு வாங்கி சுய மூளை சிந்தனை அறிவாற்றல் திட்டமிடல் இல்லாத தெரியாத சினிமா நடிகர்கள் ஆளும் தமிழகம் மக்கள் வரிப்பணம் முழுவதும் அபேஸ் ராஜீவ் காந்தி மரணம் ஜெயலலிதா மரணம் காமராஜர் ஐயா அவர்கள் மரணம் எல்லாமே மர்மம் இதில் நீதிபதிக்கே உயிருக்கு ஆபத்தை உருவாக்கிய பெருமை சேர்த்த


Karunagaran
அக் 09, 2025 14:18

சினிமா நடிகர்கள் ஆளும் தமிழகம் அரசாள்வதால் இப்படி நடக்கிறது என்று தெரிகிறது சினிமா டைரக்டர் ஓசி மூளை உழைப்பு சுய மூளை சிந்தனை அறிவாற்றல் திட்டமிடல் இல்லாத தெரியாத மக்களை முட்டாளாக்கும் தொழிலாளி சினிமா நடிகர்கள் ஆளும் தமிழகம் அரசாள்வதால் மக்கள் வரிப்பணம் தங்கள் மீது உள் நாட்டு வெளிநாட்டு முதலீடு டிரஸ்ட் சொத்துக்கள் பணம் பல டிரில்லியன் மில்லியன் கோடி ரூபாய் கப்பல்கள் விமானங்கள் உலகம் முழுவதும் உள்ள சொத்து பணம் வருமானம் டிவி ஸ்டேஷன்கள் ஸ்டுடியோ மற்றும் நிலங்கள் கம்பெனிகள் அறக்கட்டளைகள் நிறுவனங்கள் அனைத்தும் மத்திய விஜிலென்ஸ் ஈடி துறைகள் இராணுவம் மூலம் பறிமுதல் செய்து குடும்ப அட்டை வீதம் ஒரு கோடி ரூபாய் இலவசமாக வழங்க வேண்டும் என்று தெரிகிறது ஏழைகள் பசி வறுமை கடன் ஏழ்மை தீரும்


ஜெகதீசன்
அக் 09, 2025 13:06

தங்களை எதிர்ப்பவர்களை இப்படி கஞ்சா வழக்கில் போலியாக சித்தரித்து சித்திரவதை செய்வது அவர்களது அரசியல் பாடத்தில் உள்ள ஒரு அம்சமே. பாஜக இவருக்கு களமிறங்கி ஆதரவு சர வேண்டும்.


எஸ் எஸ்
அக் 09, 2025 09:46

பிஜேபியும் அதிமுகவும் களத்தில் இறங்க வேண்டும். ஏன் எனில் இப்ராஹிம் அவர் சார்ந்த சமூகத்தின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் பிஜேபிக்கும் இந்து சமூகத்திற்கும் ஆதரவு அளித்து வருகிறார். வெறுமே அறிக்கைகளுடன் நின்று விடாமல் இறங்கி வேலை செய்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்


திகழ்ஓவியன்
அக் 09, 2025 13:08

கஞ்சா வெச்சிருந்தா கொஞ்சு வாங்கல


கூத்தாடி வாக்கியம்
அக் 09, 2025 09:38

ஜனாதி பதி ஆட்சி போட்ட பின்னர் தேர்தல் நடத்த வேண்டும்


naranam
அக் 09, 2025 09:37

இவர் மகன் குற்றமற்றவர் என்றால் தமிழக பாஜகவும் மத்திய அரசும் இவருக்கு துணை நிற்கின்றனவா?


பேசும் தமிழன்
அக் 09, 2025 08:21

விடியாத அரசின் ஆட்டம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தான்..... வரும் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்படும்.


திகழ் ஓவியன்
அக் 09, 2025 08:02

வருத்தப் படாதீர்கள் இப்ராஹீம், தர்மம் நிச்சயம் வெல்லும்...


Kalyanaraman
அக் 09, 2025 07:58

திமுக ஆளும் அரசு - திமுக போலீசு - எல்லாம் திமுக மயம். மாபெரும் அடக்குமுறை அராஜகம் ஜனநாயகத்திற்கு எதிராக நடக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை