உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை சார்ஐ விட இது பயங்கரமான சார் இல்லை: நயினார் நாகேந்திரன்

அண்ணா பல்கலை சார்ஐ விட இது பயங்கரமான சார் இல்லை: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: அண்ணா பல்கலை சார்-ஐ விட இது பயங்கரமான SIR இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.விருதுநகரில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த திட்டத்தை தமிழக அரசு வேண்டாம் என்று சொல்கிறது. இவர்கள் கூட்டணியில் உள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளார். மக்கள் மீது பினராயி விஜயனுக்கு இருக்கும் அக்கறை முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7zxhnybp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எல்கேஜி படிக்கும் குழந்தைகள் கூட மொபைல் போன்களை கையில் வைத்துள்ளனர். அப்டேட் ஆக வேண்டும். விருதுநகரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். எஸ்ஐஆர் ஒரு பெரிய விஷயமாக கேட்டு கொண்டு இருக்கிறீர்கள். இதுல என்ன இருக்கு? இறந்தவர்கள் ஓட்டுக்களை நீக்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். இது தான் எஸ்ஐஆர். அண்ணா பல்கலை சார்-ஐ விட இது பயங்கரமான SIR இல்லை. அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த சாரை விட மோசமான சாரா இது? அந்த சார் இப்ப உள்ள இருக்காரு, இன்னொரு சார் வெளிய இருக்காரு. தேர்தல் முடிஞ்சா அந்த சாரும் உள்ள போயிருவாரு. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

T.sthivinayagam
நவ 15, 2025 18:13

பீகார் பெண்களுக்கு கொடுத்த பத்து ஆயிரம் ரூபாய் போல தமிழக பெண் சக்திகளுக்கும் தர வேண்டும் பெண் கேட்கிறார்கள்.தமிழக பாஜாக தலைவர் அதற்குகான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.


என்னத்த சொல்ல
நவ 15, 2025 17:39

திமுகாவிற்கு SIR மேல் சந்தேகம், விமர்சனம் இருந்தால், தேர்தல் ஆணையம் பதில் சொல்லட்டும். நைனார் ஏன், தேர்தல் ஆணையத்திருக்கு முட்டு கொடுக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது, பிஜேபி க்கும், தே. ஆ. எதோ உள்குத்து இருக்குதுனு..


Vasan
நவ 15, 2025 17:37

Yes Sir, Rs 3.99 Crores Sir.


Perumal Pillai
நவ 15, 2025 16:06

At last a gem from from Nainar. This is the language that dmk understands.


தியாகு
நவ 15, 2025 14:55

இவர் தமிழக பாஜக தலைவர் என்பது இதுபோன்ற ஒரு சில சிரிப்பு வெடிகள் செய்திகள் மூலம்தான் தெரிகிறது. உபயோகமாக ஒரு செயலும் இவரிடம் இல்லை. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம்.


திகழ்ஓவியன்
நவ 15, 2025 19:08

வீட்டு செலவுக்கே நண்பர்களை நம்பி இருந்தவர் இன்று தொழில் அதிபர் ஆனது மோடிஜி ஆட்சியில் சாதனை தான் இது தான் உங்கள் அண்ணாமலை அவர் எதிர்காலம் சூப்பர் ஆக்கி கொண்டார்


Sundar R
நவ 15, 2025 14:40

சார் -ஐப் பற்றி சாதாரண ஏழை எளிய மக்களுக்கும், படிப்பறிவே இல்லாத கைநாட்டு போடுபவர்களுக்கும் மிகவும் நன்றாக தெரிந்ததிருக்கிறது. அவர்கள் அனைவரும் படிவங்களோடு ரெடியாக இருக்கிறார்கள். அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உதவுகிறார்கள். டி.என். சேஷன் அவர்களின் காலத்திலிருந்து, மத்திய தேர்தல் கமிஷன் அலுவலர்கள் எதையுமே நேர்த்தியாகவும், பாமர மக்களுக்குக் கூட புரியும் வகையில் புரோபஷனல் ஆகவும் செய்வார்கள் என்பது நம் நாட்டுமக்கள் அனைவருக்கும் தெரியும்.


Indian
நவ 15, 2025 14:25

எல்லோரும் ஒருக்கா சிரிச்சிடுங்க ..ஹி ஹி ..காமெடி


vivek
நவ 15, 2025 16:43

நீ மட்டும் தனியா சிரிசிக்கோ கைலாசம்...பாவம் யாரு பெத்த பிள்ளையோ


A.Gomathinayagam
நவ 15, 2025 14:07

இந்த சார் பாமரன் முதல் படித்தவர்கள் வரை குழப்பும் சார்


பேசும் தமிழன்
நவ 15, 2025 14:01

Sir என்றாலே திமுக கட்சிக்கு ஆகாது போல் தெரிகிறது.... அதனால் தான் SIR என்றாலே அலறுகிறார்கள்.


சமீபத்திய செய்தி