உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல: முதல்வருக்கு அண்ணாமலை பதில்

போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல: முதல்வருக்கு அண்ணாமலை பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'' தி.மு.க.,வின் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தமிழக பா.ஜ., நடத்தி வருகிறது. இக்கையெழுத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மக்களிடம் ஆதரவு காணப்படுவதாக அக்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க.,வின் அறுபதாண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர். ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கண்களைத் திறந்து பாருங்கள் முதல்வரே. உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல. அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

pmsamy
மார் 12, 2025 07:25

ஹா ஹா பாஜக போலி நாடகம் பாக்குற கூட்டமா


மதிவதனன்
மார் 12, 2025 02:07

MISSED கால் கொடுத்து ஒரு கேடி பேர் மெம்பெர் சேர்ப்பு, பிஸ்கட் பாக்கெட் கொடுத்து கையெழுத்து வெட்கமா இல்லை நீ எல்லாம் பேசலாமா


V வைகுண்டேஸ்வரன்,Chennai
மார் 12, 2025 08:22

அடிமையின் அடிமை அவர்களே


ES
மார் 12, 2025 01:41

When will this loser stop talking


guna
மார் 12, 2025 06:20

ES you need diagnose to check if you have brain...useless ES..


Mediagoons
மார் 11, 2025 23:28

மோடியின் 2020 நாடகங்களை உலகத்தடம் வாய்ந்த நாடகங்களை அனைவரும் நம்பி விட்டார்களா ?


Sakthi,sivagangai
மார் 12, 2025 04:03

அடிமையே முதலில் தமிழை ஒழுங்காக கற்றுக் கொண்டு பிற்கு கருத்தை போடு எங்கயிருந்து கெளம்பி வர்றீங்க


Pandianpillai Pandi
மார் 11, 2025 22:12

தி மு க என்ற ஒரு கட்சியின் சமுதாய புரட்சியில் விளைந்த பயிர் தான் நீங்கள். விளைந்த பயிர் யாருக்குவேண்டுமானாலும் பயன்படலாம் . அதை விளைவித்தவனுக்கு எதை பற்றியும் கவலையில்லை. எங்களுக்கு தோற்றுவித்து பாதுகாக்க தெரியும். இனி போலி நாடகம் செய்து தி மு க வின் சாதனைகளை மழுங்கடிக்க முடியாது. மக்களை படிப்பறிவு பெறசெய்திருக்கிறோம். தமிழ்மொழியை செம்மொழியாக்கி உலகில் உலாவ செய்திருக்கிறோம். உலகத்தில் தமிழ் மணம் வீசுகிறது. தமிழர்களுக்கென்று தனி மரியாதை இருக்கிறது. உங்கள் சீர்கெட்ட அரசியல் சிந்தனையால் தமிழர்களின் மானம் போகிறது. உங்களை மக்கள் கேலியாகத்தான் பார்க்கிறார்கள் . உங்களை நீங்களே தம்பட்டம் அடித்துக்கொள்ளாதீர்கள் . உங்களுக்கு திராணி இருந்தால் வரும் சட்ட மன்ற தேர்தலில் தி மு க பெயரை உச்சரிக்காமல் தேர்தல் களத்தை சந்திக்க முடியுமா ? தி மு க வின் நிழலில் பயணிப்பதை எப்போது நிறுத்த போகிறீர்கள்.


Appa V
மார் 11, 2025 22:31

டெக்சாஸ் டல்லாஸ் ஹூஸ்டன் பகுதிகளில் தெலுங்கு தெரிந்தாலே போதும்... தமிழ் முதல் அரபி வரை ஆங்கிலத்தில் டைப் செய்தாலே போதும் அந்தந்த பாஷயில் படிக்கலாம்...எந்த பாஷை வாசகங்களையும் ஸ்கேன் செய்து அவரவர்கள் பாஷயில் படிக்கலாம் ..கூகிள் ஆற்றிய தமிழ் சேவையை விட திமுக ஒன்றும் பெருசா சாதிக்கவில்லை ..அன்றாடம் மது வகையறாக்களை மதுக்கடைகளுக்கு கொண்டு சேர்ப்பது தான் அரசின் பிரதான காரியம்


C.SRIRAM
மார் 11, 2025 22:32

ஏன் உங்க தி மு க லஞ்சம் / இலவசம் / போலி வாக்குறுதிகள் கொடுக்காமல் தனியாக நின்று வெற்றி பெற திராணி உண்டா ?. திராவிடரில்லாத உண்மை தமிழர்கள் தான் உலகெங்கும் . திராவிடர் என்கிற பெயரில் தெலுங்கை தாய் மொழியாக கொண்டு தமிழ் தமிழ் என்று போலியாக ஊரை ஏமாற்றுபவர்கள் அல்ல . தி மு க வால் வேதனைகள் தான் .


Bala
மார் 12, 2025 01:26

திமுக ஒரு விஷ செடி எனவும் தீய சக்தி எனவும் பக்தவத்சலம், எம்ஜியார் போன்ற தலைவர்கள் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளனர். ஏன் பெரியாரே திமுகவை ஒரு பத்தாண்டுகள் மிகக்கேவலமாக விமர்சித்துள்ளார். ஊழலுக்காக இந்தியாவில் ஒரு ஆட்சி கலைக்கப்பட்டதென்றால் அது திமுகதான். ஊழல் செய்ததை தட்டிக்கேட்டதாலேயே எம்ஜியார் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். குடி, கஞ்சா, ஊழல், திருமணம் கடந்த உறவு, கல்வியை மிகப்பெரிய வியாபாரம் ஆக்கியது இதுதான் இவர்கள் செய்த சமுதாய புரட்சி


சாமிநாதன்,மன்னார்குடி
மார் 12, 2025 04:05

ஊருக்கு ஒரு பிள்ளை மகன் இருந்தா போதும் அந்த ஊர் வெளங்கிரும் ஏலே போய் புள்ள குட்டிகளை படிக்க வை


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 12, 2025 11:14

அதே கேள்வி மத்திய அரசு பாஜக பெயரை உச்சரிக்க ஆனால் தேர்தல் களத்தை திமுக சந்திக்க முடியுமா. பாஜக ஹிந்தி திணிப்பு இந்து எதிர்ப்பு நிழலில் பயணிப்பதை எப்போது நிறுத்த போகிறீர்கள்.


kr
மார் 11, 2025 21:45

Sabash. Makkal Sakthi is with you now. Go ahead and play an aggressive game. Keep exposing the drama company every day. People of Delhi taught AK47 a fitting lesson recently. Model government will also learn its lesson from TN people in 2026 elections


kulandai kannan
மார் 11, 2025 21:42

மும்மொழிக் கொள்கையையும் நவோதயா பள்ளிகளையும் வைத்தே பாஜக தேர்தலை சந்தித்து திராவிட கட்சிகளின் கபடவேடத்தை தோலுரிக்க வேண்டும்.


K.n. Dhasarathan
மார் 11, 2025 21:14

என்ன அண்ணாமலை மும்மொழி கொள்கை என்று தினமும் கதறும் உங்களுக்கு, தமிழகத்தில் எத்தனை மொழி பேசப்படுகிறது என்று தெரியுமா ? 18 மொழிகள் தமிழகத்தில் பேசப்படுகிறது, யாரும் எண்கள் மொழி என்று எந்த மொழியையும் திணிக்கவில்லை ஏன் தலை நகர் சென்னையில், தெலுன்க்கு 40 % பேசப்படுகிறது, தமிழ் 35% தான், ஆனாலும் இங்கு மக்கள் ஒன்றாக கலந்து வாழ்கிறார்கள், இங்கு இந்தியை யாரும் எதிர்க்கவில்லை, ஆனால் திணித்தாள் விரட்டி அடிக்கப்படும், நீங்கள் அடித்த லூட்டியில் கர்நாடகாவில் கன்னடம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது, ஆந்திர, மற்றும் தெலுங்கானாவில் தெலுங்கு மிகவும் குறைவாக பேச படுகிறது, இந்தி திணிப்பின் விபரீதம்தான் இது, பொய் ஜே பி யினர் தங்கள் மாற மண்டையில் ஏற்றி கொள்ளவேண்டும், அதனால் உங்கள் போலி நாடகம் என்றும் எங்கும் செல்லாது.


சகாதேவன்,தர்மபுரி
மார் 11, 2025 21:54

ஆக மொத்தம் நீ ஒரு கொல்ட்டி என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 12, 2025 11:45

35 சதவீதம் தமிழும் இண்ணும ஐந்து வருடங்கள் கடந்தால் 20 என்று ஆகி விடும். ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்திலேயே படிக்க ஊக்கப்படுத்தி கொண்டு இருந்தால் தமிழ் படு வேகமாக சுருங்கி போகும். மும்மொழி கொள்கை என்பது தேசிய கல்வி கொள்கையில் ஒரு பாகம் தான். மும்மொழி மட்டும் தேசிய கல்வி கொள்கை அல்ல. எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியில் தான் மொழி பாடங்கள் தவிர மற்ற அனைத்து பாடங்களும் தமிழில் படிக்க வேண்டும். அதாவது தாய்மொழி வழிக் கல்வியில் தான் பயில வேண்டும். மும்மொழியில் கட்டாயம் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்பது இல்லை. தமிழக அரசு நினைத்தால் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஏன் உருது கூட படிக்க வைக்கலாம். ஹிந்தியை உள்ளே நுழைக்காமல். இது மாநில அரசு எடுக்கும் முடிவு தான். இது எதற்காக என்றால் நம் அண்டை மாநில மக்களுடன் கலந்து பழக சுலபமாக இருக்கும் நட்புறவு மேம்படும் என்பதற்காக.


ManiK
மார் 11, 2025 20:51

ரூ200 ரொம்ப வேலை செய்யுது போல?!! ஸ்டாலின், உவாநிதி, கனி சொல்வதை எண்ணி மனதுக்குள் சிரித்தாலும் வெளியில் சொல்ல முடியாத நிலைமை. இப்படி ஒரு உபி வாழ்க்கை தேவையா?!!


Mario
மார் 11, 2025 20:40

முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க


சந்திரசேகரன்,துறையூர்
மார் 11, 2025 21:27

ஏலே நீயெல்லாம் எப்படி லண்டன்ல குப்பை கொட்றியோ தெரியல அண்ணாமலை சொன்னதை மீண்டும் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக படித்துவிட்டு கருத்தை போடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை