உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்

தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: தூத்துக்குடி மேலநம்பிபுரத்தில் தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் என்ற நபரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரத்தில் தாய் சீதாலட்சுமி, 75, மகள் ராமஜெயந்தி, 45, ஆகியோர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இவர்களது வீட்டில் 15 பவுன் நகைகளை காணவில்லை. டி.ஜ.ஜி., சந்தோஷ் ஹதிமணி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gu6ih228&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில் முனீஸ்வரன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவரை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ., முத்துராஜை அரிவாளால் வெட்டி விட்டு முனீஸ்வரன் தப்ப முயன்றார். அப்போது போலீசார் தற்காப்புக்காக சுட்டு பிடித்தனர்.போலீசார் சுட்டதில் வலது காலில் காயம் ஏற்பட்ட முனிஸ்வரன் மற்றும் எஸ்.ஐ., முத்துராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kanns
மார் 06, 2025 10:16

Another PreTrial FakeEncounter With Illegal Blessings of 90% NotBotheredBiased Judges. Its Not Impossible for PoliceTeam to Catch Even Armed Accused atleast 50% Cases False Cookedup by CaseHungry Criminals. ONLY Neutral& FastTrack TRIAL Can PROVE If he is REALCRIMINAL or CookedupAccused Grave Real-Repeat Criminals MUST be Punished/Encountered ONLY by Courts. To Uphold Law& Justice, COURTS MUST Order EQUAL ENCOUNTER OF ALL CONCERNED POLICE at Same Spot in PublicNo Mercy Required


அப்பாவி
மார் 06, 2025 09:36

எதுக்கு காலில் சுட்டு பிடிக்குறீங்க? நீதி நியாயம் தண்டனையெல்லாம் கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை. போட்டுத் தள்ளியிருக்கலாம்.


ram
மார் 06, 2025 11:45

அவன்தான் இதை செய்தான் என்று நிரூபிக்காமல் எதோ சந்தேகத்தில் அவனை தேடி போயிருப்பார்கள் அவன் இவர்களை பார்த்து பயந்து ஓடிஇருப்பான் உடனே இவர்கள் அவனை சுட்டு இருப்பார்கள் அவ்வளவுதான். முதலில் உன்னைப்போல அப்பாவி போட்டு தள்ளனும்.


ravi subramanian
மார் 06, 2025 09:31

Instead of shooting at the leg, It would be very nice if the culprit had been shot dead.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை