உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைக்க வேண்டும்: முதல்வருக்கு பா.ஜ., வலியுறுத்தல்

மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைக்க வேண்டும்: முதல்வருக்கு பா.ஜ., வலியுறுத்தல்

சென்னை; விளம்பரங்களை விடுத்து, உடனடியாக மரவள்ளிக் கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய வழிவகுக்க வேண்டும் என மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாது அரசு அலட்சியப்படுத்துவது கண்டனத்திற்குரியது.தேர்தல் சமயத்தில் 'மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என தி.மு.க., தேர்தல் எண் 35-ல் உறுதியளித்துவிட்டு அதனை நிறைவேற்றாது விலை வீழ்ச்சியால் விவசாயிகளை அவதியுறவிட்டதோடு, தற்போது கூட்டுறவு ஆலையும் அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடல் அரசின் உழவர் நலனா? விவசாயிகளுக்கு முறையான பாசன வசதி ஏற்படுத்தித் தருவதில்லை, விளைவித்த பயிருக்கு முறையான விலை கிடைக்க வழி வகுப்பதில்லை, உழவர் நலன் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதும் இல்லை, இந்த லட்சணத்தில் 'பச்சை துண்டு போடும் போலி விவசாயி நான் அல்ல' என்று ஆவேசமாக முழங்குவதால் மட்டும் என்ன பயன் என்பதை முதல்வர் உணர வேண்டும்.விளம்பரங்களை விடுத்து, உடனடியாக மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sudha
ஜூலை 22, 2025 20:44

இவரது சிட்டிங் போஸ் இருக்கும் வரை பிஜேபி எழுந்திருக்காது


Rajalakshmi
ஜூலை 22, 2025 14:30

மரவள்ளிக்கிழங்கில் ஒரு சத்தும் இல்லை save junk calories . ஜவ்வரிசி தயாரிப்பது மரவள்ளிக்கிழங்கிலிருந்துதான். பல வருடங்கள் முன் கேரளாவில் கடும் famine வந்தபோது உயிர் வாழ மரவள்ளிக்கிழங்குகளை உண்டனர் . இப்போது சிறுதானிய awareness வந்தபிறகு பிடி கரணை , கருணைக்கிழங்கு , சேனைக்கிழங்கு என பயிரிடுவதே சிறந்தது. பலருக்கும் கருணைக்கிழங்கின் மகத்துவம் தெரியவில்லை. Drivers வண்டி ஓட்டுனர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் போன்றோருக்கு மூலச்சூடு உண்டாகி piles எனும் வியாதி தோற்றுவிக்கும். பிடிக்கரணையை தினமும் சமைத்து உண்பதால் அதனை தவிர்க்கலாம். ஏனையோரும் சாப்பிடலாம். செரிமானம் சீராக இருக்கும். சேனைக்கிழங்கும் மிகவும் நல்லது. இரண்டும் ஒன்றல்ல. Menopause ஆன பெண்கள் அல்லது கர்ப்பப்பை நீக்கியவர்கள் அவசியம் சேனைக்கிழங்கு சாப்பிட வேண்டும். நமது நாட்டில் ஏன் உலகத்திலேயே obesity என்பது மிகவும் பரவியுள்ளது. ஆகையால் சத்து நிறைந்த உணவு வகைகளை மட்டுமே பயிரிட்டு உண்பது நல்லது.