உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: கணித்துச் சொன்னது வானிலை மையம்

இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: கணித்துச் சொன்னது வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,24) 19 மாவட்டங்களிலும், நாளை (அக்.,25) 20 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று(அக்.,24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பூர், நாகை, மயிலாடுதுறை, திரூவாரூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் நாளை(அக்.,25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் அக்டோபர் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
அக் 24, 2024 20:48

மழை சீசனில் மழை பெய்யத்தான் செய்யும். ஒரு நாள் அதிக மழை இருக்கும். ஒரு நாள் கொஞ்சமாக மழை பெய்யும். மக்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அரசையே நம்பி பிரச்சினையில் சிக்கிக்கொள்ளக்கூடாது.


Constitutional Goons
அக் 24, 2024 18:56

மழை காலத்தில் மழை பெய்துகொண்டுதான் இருக்கும் . பாஜ ஆட்சி நடக்கும் ஒடிசா வானிலை துல்லியமாக புயலை கனித்து மில்லியன் பேரை அப்புறப்படுத்துகிறது.


Jai Hind
அக் 24, 2024 18:13

மழை ?


pradesh pradesh
அக் 24, 2024 16:34

எங்கே Fake நியூஸ் சென்னை நாட் பொஸ்ஸிப்ளே ரெயின் கெடயாது வாங்க கடல் உருவு ஆகுமா அண்ணா எங்க மல்லை கெடயாது


P. VENKATESH RAJA
அக் 24, 2024 15:40

வானிலை கணித்து சொல்வது அப்படியே நடக்கிறது தென்காசியில் கனமழை குட்டி தீர்ப்பதால் கொத்தனார் வேலைக்கு போக முடியாமல் தவிக்கின்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை