உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!

ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!

சென்னை: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு 'Z பிளஸ் ' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் வரும் ஜூலை 7ம் தேதி கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=svaynupg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (ஜூலை 05) இ.பி.எஸ்.,க்கு 'Z பிளஸ் ' பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சேலம் மற்றும் சென்னை உள்ள இ.பி.எஸ்., வீட்டிற்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் புரளி என்பது தெரியவந்தது.இந்த சூழலில், தற்போது இ.பி.எஸ்.,க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய 55 வீரர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் இ.பி.எஸ்.,க்கு பாதுகாப்பு வழங்குவர்.அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆய்வு நடத்தும்.மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் புதிதாக யாருக்கேனும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமா என்பது பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுப்பயணம்

இதற்கிடையே, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்; 234 தொகுதிகளுக்கும் செல்கிறேன். எனது சுற்றுப்பயணம் தமிழக மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும்; நான் எப்போதும் மக்களுடனே பயணிக்கிறேன்.

பரிதாப நிலை

மக்கள் ஆதரவுடன் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க., வரலாறு படைக்கும். தேர்தலில் அ.தி.மு.க., வென்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு ஸ்டாலின் எங்கள் வீட்டிற்கு வந்தால் வரவேற்போம். வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி உறுப்பினர்களைச் சேர்க்கும் அளவுக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., பரிதாப நிலைக்குச் சென்றுவிட்டது.

விமர்சனம்

ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வது வழக்கமானதுதான், அதன்படியே விஜய்யும் விமர்சித்துள்ளார். தி.மு.க., ஆட்சியை அகற்றும் நோக்கத்தோடு உள்ள கட்சிகள் எங்களோடு இணையலாம். தி.மு.க., ஆட்சியை அகற்ற அனைவரும் இணையவேண்டும் என்பதே எனது விருப்பம். கூட்டணி நிலைப்பாடு குறித்து அமித்ஷா ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டார்.

முதல்வர் வேட்பாளர்

பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை வகிக்கும். அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்., எல்லா ஊடகத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிட்டு உள்ளார்கள். அதையே ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்டு, விறுவிறுப்பான செய்தி வேணும் என்பதற்காக, திருப்பி திருப்பி அதற்கு ஏதாவது ஒரு வடிவத்தை கொடுத்து வெளியிடுவது சரியா? இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kadaparai Mani
ஜூலை 05, 2025 16:48

Centre has taken the appropriate decision. Edappadi palanisamy is our next CM and he should be protected from evil elements and anti socials.


Pmnr Pmnr
ஜூலை 05, 2025 15:34

எடப்பாடி பழனிசாமிக்கு இது சிறந்தது.


RAMESH
ஜூலை 05, 2025 14:01

இந்த தேர்தலில் திமுக ஆட்சி முடிவாக இருக்கும்....சீமானை போல் விஜய் நிலைக்க வேண்டும்... பாஜக ஓன்றும் மத வாத கட்சி அல்ல....சில ஜாதி கட்சிகள்..... மதிமுக.... திக்கற்ற காங்கிரஸ்... இவர்களுடன் திமுக..இதுவே மத வாத கூட்டணி......ஓட்டுக்காக அரசியல் செய்யும் கூட்டணி எதுவென்று மக்களுக்கு தெரிந்து விட்டது.....அதல பாதாளத்தில் ஆளுங்கட்சி


Rengaraj
ஜூலை 05, 2025 12:58

ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வராக எடப்பாடிக்கு நான்கு வருட அனுபவம் உள்ளது. ஜெ ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்திருக்கிறார். கட்சியை நடத்தும் வல்லமை உள்ளது. திமுக போன்று குடும்ப ஆட்சி இல்லாமல் நல்லாட்சி செய்வார் என்று மக்கள் மத்தியில் இவருக்கு என்று ஒரு பெயர் இன்னமும் இருக்கிறது. இதையெல்லாம் மனதில் கொண்டுதான் இவரை முதல்வர் வேட்பாளர் என்று பாஜக போன்ற ஒரு தேசிய கட்சி கூட்டணிக்காக சொல்கிறது. இப்போது பாருங்கள் ,மத்திய அரசே பாதுகாப்பு தருகிறது. மத்தியில் அவர்கள் இருப்பதால் தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்களை கொண்டு வரலாம், நிறைய சாதிக்கலாம். மீண்டும் நல்ல பெயரை சம்பாதிக்கலாம். அதையெல்லாம் இவர் மனதில் கொள்ளாமல் குறைந்த பட்சம் ஒரு வார்டு கவுன்சிலர் அனுபவம் கூட இல்லாத விஜய் கிட்ட போய் நிற்பதும், அவருக்காக கூட்டணி கதவை திறந்தே வைப்பதும், கூட்டணிக்காக அவர்கள் போடும் நிபந்தனைகளை கேட்பதும் , சீ, சீ . திமுகவின் கண்ணசைவில் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதும், வேண்டும் என்றே பாஜகவை மட்டும் விமர்சித்து அண்ணா திமுகவை விமர்சிக்காமல் , எப்படியாவது பாஜகவை அதனுடன் சேரவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற திமுகவின் கட்டளையை விஜய் திறம்பட செய்துகொண்டிருக்கிறார் என்பதை இத்தனை வருட அனுபவம் கொண்ட எடப்பாடி ஏன் அறியாமல் இருக்கிறார். ??? ஒருவேளை விஜயுடன் சேர்ந்து அதிமுக ஜெயித்து விடுகிறது , எடப்பாடி முதல்வர் ஆகிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம் பாஜக அண்ணாதிமுகவை எந்தவிததிலும் பழிவாங்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் ? மத்தியில் அவர்கள் இருப்பதால் திட்டங்களை கொண்டுவர முடியவில்லை என்று இப்போது திமுக ஒப்பாரி வைப்பதை போன்று அண்ணா திமுகவும் ஒப்பாரி வைக்குமா ? அப்படியே முதல்வர் ஆகிவிட்டாலும் மத்திய அரசை பகைத்துக்கொண்டு தமிழகத்துக்கு வேண்டியதை எல்லாம் செய்து நல்ல பெயரை எடப்பாடி மீண்டும் சம்பாதித்துவிடுவாரா ?? தொலைநோக்கு பார்வையுடன் எடப்பாடி செயல்படவேண்டிய நேரம் இது மோடி சொல்வதை போன்று டபுள் என்ஜின் சர்க்கார் நம் தமிழகத்துக்கு தேவை.


venugopal s
ஜூலை 05, 2025 12:45

நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள், அவர்களுக்காக இது கூட செய்ய மாட்டோமா என்ன?


Sakthi,sivagangai
ஜூலை 05, 2025 16:04

உன்னைப் போன்ற கோபாலபுரத்து கொத்தடிமைகளை விடவா?


chandrakumar
ஜூலை 05, 2025 12:10

சரியான முடிவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை