வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தவறை ஒப்புக்கொண்டதன் முக்கிய காரணம். 5 வருட சிறைத்தண்டனை கிடைக்கும். தங்க இடம், சாப்பாடு, உடை எல்லாம் இலவசம். அப்போ இந்த டிரைவர் செய்தது எளிதான வேலை, அவ்வளவு தான்.
உண்மையான குற்றவாளியை மறைக்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம். கொலை வழக்கில் கைது செய்து, தீவிர விசாரணை செய்து இறந்தவர் குடும்பத்துக்கு கொலையாளியிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கொடுக்கவேண்டும்.
வருத்தமான சம்பவம். குற்றம் செய்த கார் ஓட்டுனர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். வாகன தணிக்கை செய்யும்போது இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். மறைந்த காவலர் மேகநாதன் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகள் அரசு செய்து தரவேண்டும்.
காவலரின் அகால மரணம் மனவருத்தமளிக்கிறது. விபத்தை ஏற்படுத்திய ட்ரைவர் தவறை ஒப்புக்கொண்டாலும், அவர் செய்த குற்றத்திற்காக சட்டத்தின்மூலம் தண்டனை அனுபவிக்கவேண்டும். தவறை அவரே ஒப்புக்கொண்டிருப்பதால், நீதிமன்றம் மேலும் சாட்சியங்கள் கோராமல், தண்டனையை உடனே நிறைவேற்றவேண்டும். மேலும் தமிழக அரசு பணியில் உயிரிழந்த அந்த காலவளர் குடும்பத்துக்கு நிதிஉதவியும், மற்றும் அவர் குடும்பத்தின் ஒருவருக்கு அரசு பணியும் கொடுத்து உதவவேண்டும்.