உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பயணி தவறவிட்ட 50 பவுன் நகை: பத்திரமாக ஒப்படைத்தார் போலீஸ் மணிகண்டன்!

ரயில் பயணி தவறவிட்ட 50 பவுன் நகை: பத்திரமாக ஒப்படைத்தார் போலீஸ் மணிகண்டன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்த ரவிக்குமார் குடும்பத்தினர், ரயிலில் தவறவிட்ட 50 பவுன் நகை கொண்ட கைப்பையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டன், அதை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மணிகண்டனின் பணியை, உயர் அதிகாரிகள், ரயில் பயணிகள் அனைவரும் பாராட்டினர்.சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு ரவிக்குமார், 53, என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ரயிலில் வந்தார். கோவையில் வந்து இறங்கிய அவர், பைகள் அனைத்தையும் எடுத்து கொண்டு வீடு திரும்புவதில் கவனம் செலுத்தினர். அப்போது அவர் 50 பவுன் நகை, ரூ.11 ஆயிரம் பணம் ஆகியவற்றை பை உடன் தவறவிட்டு சென்றுவிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c2olfhja&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு ஒவ்வொரு பெட்டியாக சென்று ரயில்வே பாதுகாப்பு படையினர் பார்வையிடுவது வழக்கம். அவ்வாறு சென்ற ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டன், கைப்பையை கவனித்து எடுத்தார். அதில் 50 பவுன் நகை, பணம் ஆகியவை இருப்பதைக் கண்டு போலீசில் ஒப்படைத்தார். வீட்டுக்குச் சென்றதும், கைப்பையை தவற விட்டதை உணர்ந்த ரவிக்குமார் குடும்பத்தினர், அவசரம் அவசரமாக ரயில் நிலையத்துக்கு ஓடோடி வந்தனர். கைப்பையை தவறவிட்டோம் என்று கூறிய அவர்களிடம், உரிய விசாரணைக்கு பிறகு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், நகை, பணம் இருந்த பையை ஒப்படைத்தனர்.ரூ. 38 லட்சம் மதிப்புடைய நகை திரும்ப கிடைத்ததால், போலீஸ் மணிகண்டனுக்கு, ரவிக்குமார் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். நேர்மையாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டனை, உயர் அதிகாரிகள், சக போலீசார், ரயில் பயணிகள் அனைவரும் பாராட்டினர்.போலீஸ் மணிகண்டனை பாராட்டி உங்களது வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் கமென்ட் செய்யுங்க மக்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

ANNADURAI MANI
செப் 05, 2025 09:53

congratulations Manigandan. God Bless you. வாழ்க valamudan


உண்மை
செப் 01, 2025 07:42

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்


R.RAMACHANDRAN
செப் 01, 2025 07:17

காவல் துறையில் அரிதினும் அரிதாக உள்ள இவரை போன்றவர்களை கல்வித் தகுதி பாராமல் காவல் துறை தலைமை இயக்குனராக பணியில் அமர்த்தினால் காவல் துறை என்ற பெயரில் செய்யும் குற்றங்கள் குறையும்.


Krishnan G
ஆக 31, 2025 21:32

மனமார்ந்த பாராட்டுக்கள் சார்... மனிதருள் மாணிக்கம் நீங்கள்... இதுபோன்ற செய்திகளை படிக்கும்போது உலகம் இன்னும் மொத்தமாக கெட்டுப்போகவில்லை என்ற மகிழ்ச்சி மனதை ஆறுதல் செய்கிறது


Anantharaman Srinivasan
ஆக 31, 2025 17:06

இவ்வளவு மதிப்புள்ள நகைகளை, தனியாக பையில் வைத்தா கொண்டு போவாங்க.. குடும்பத்தில் ஒருவருக்கு கூடவா ஞாபகம் இருக்காது.??


Amar Akbar Antony
ஆக 31, 2025 16:19

Hats off to Mr. Manikandan. Prevailing market rate its costs around 50 lacs. For that family its a treasure retained. Well done Mr Manikandan. God Bless you.


V Venkatachalam
ஆக 31, 2025 15:38

மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.ரயில்வே போலீஸுக்கு நீங்களே ஒரு பரிசு.. வாழ்க வாழ்க.


ponssasi
ஆக 31, 2025 15:12

நேர்மையாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டன். படிக்கும்போதே மனது நெருடுகிறது போலீஸ் என்றாலே நேர்மைதான், கடமைதான், கம்பீரம் தான் அது ஒரு காலம். ஆனால் இன்று ஒரு காவலர் நேர்மையாக இருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த போக்கு மாறவேண்டும். காவலர்களில் குற்றவாளிகள் இருந்தால்தான் அது செய்தியாக வரவேண்டும்.


K.V.K.SRIRAM
ஆக 31, 2025 14:46

Exemplary Act of Honesty and helpfulness by Mr. Manikandan, enhancing the image of RPF. Im sure he would be rewarded by his Superiors for his good deed.


மணியன்
ஆக 31, 2025 14:30

இவருக்கு டபுள் ப்ரமோஷன் கொடுத்து முக்கியமான பொறுப்பு வழங்க வேண்டும்.


புதிய வீடியோ