உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் பேரணி; 5 ஆயிரம் பேர் மீது பாய்ந்தது வழக்கு

மதுரையில் பேரணி; 5 ஆயிரம் பேர் மீது பாய்ந்தது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை; டங்ஸ்ட்ன் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டவர்களில் 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும்,மேலூர் முல்லை பெரியாறு ஒருபோக பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வலியுறுத்தியும் பொதுமக்கள், விவசாயிகள் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மேலூர் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள், கிராம மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் நேற்று (ஜன.7) பேரணி சென்றனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியானது,மேலூரில் இருந்து மதுரை தமுக்கம் தபால் நிலையம் வரை நடைபெற்றது.பேரணியின் போது, சுங்கச்சாவடி அருகே போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் முன்னே செல்ல, அவர்கள் அணிவகுப்பை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர்.பேரணியின் எதிரொலியாக, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. இந் நிலையில், கட்டுப்பாடுகளை மீறி பேரணி சென்றதாக போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கிட்டத்தட்ட 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். பேரணியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் காணும் பணியிலும் போலீசார் இறங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Thiru
ஜன 08, 2025 17:45

பிஜேபிக்கும் திமுகவுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. திமுக அதிகார திமிரில் ஆடினால் 2026 முடிவு கட்டப்படும்.


Thirumal Kumaresan
ஜன 08, 2025 16:48

கண்துடைப்பு நாடகம் என்பது எல்லோருக்கும் தெரியுமே


M Ramachandran
ஜன 08, 2025 15:36

குவாட்டர் பிரியாணி அண்டாக்கள் சேர்ந்த கூட்டம். ஆம்னி பஸ் முதலாளிகள் எதற்கும் ஜாக்ககிரதை. பஸ்கள் எலும்பும் தோலுமாய் தெரிவில் நிற்க போகிறது.


Svs Yaadum oore
ஜன 08, 2025 12:17

5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனராம் .....இதெல்லாம் அக்கிரமம் அநியாயம் ....அரிட்டாபட்டி மலை மற்றும் அதில் உள்ள நீர் நிலைகள் வைத்துதான் அதே ஊரே வாழுது ....இந்த மலையில் க்ரானைட் எடுப்பதற்காக இந்த மலையில் எப்போதுமே திராவிடனுங்க ஒரு கண் வைத்துள்ளார்கள் .....பல ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட்Granite எடுப்பதற்காக தமிழக அரசு அளித்த உத்தரவால் தங்கள் கிராமத்தில் இருக்கும் மலையில் இரவு நேரத்தில் ஆய்வு செய்து வருபவர்களை தடுக்கும் பொருட்டு அரிட்டாபட்டி கிராம மக்கள் போராட்டம் .....அரிட்டாபட்டியின் மலையின் குகைத் தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது ...இதை அழிப்பதற்குத்தான் விடியல் திராவிடனுங்க முயற்சி ...


V வைகுண்டேஸ்வரன்
ஜன 08, 2025 17:01

கனிம வளம் மற்றும் சுரங்க துறை இருப்பது ஒன்றிய அரசின் பாஜக விடம் தான். டங்ஸ்டன் சுரங்கம் இங்கே பிளான் பண்ணியது பாஜக. வெரி குட். வந்து தோண்டுங்கள் என்று சொன்னது அதிமுக. எதை அழிக்க திராவிடர் முயற்சி? எதுக்காக?


Shankar
ஜன 08, 2025 11:16

இவர்கள் ஆளுநரை எதிர்த்து போராடி இருந்தால் காவல்துறை முழு பாதுகாப்பளித்திருக்கும். பாவம் இவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடினார்கள் அல்லவா அதனால் தான் கைது நடவடிக்கை.


Keshavan.J
ஜன 08, 2025 11:08

these same 5000 people will vote for DMK if election announced. They need only money and liquor to vote. majority tamilians are brain washed by DMK and Dk.


Sankare Eswar
ஜன 08, 2025 11:05

அறிவிக்கப்படாத அவசரநிலை தமிழ்நாட்டில்? பதவி வெற்றிக்காகவும் ஆடம்பர வாழ்வுக்காகவும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து கும்மாளமிடும் கோயபல்ஸ் சைக்கோ சர்வாதிகாரிகளின் கையில் தமிழகம் சிக்கி பாடாய் படுகிறது. உட்சபட்சமான கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் சுதந்திரம் இழந்து அன்றாட உரிமைகள் மறுக்கப்பட்டு நடைபிணமாய் வாழ்கின்றனர்..


kantharvan
ஜன 08, 2025 11:27

இத தஞ்சாவூரூ கல்வெட்டுல எழுதி பக்கத்துலேயே உக்காந்துக்கோ? வருங்கால தலைமுறை படிச்சு பயன் பெறட்டும் மக்கள் எல்லோரும் வளமாகவும் நலமாகவும் இருக்கிறர்கள் புத்தாண்டு முடித்து பொங்கல் கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் வயிறு எரிபவர்கள் ஜெலுசில் குடிக்கவும்.


Kundalakesi
ஜன 08, 2025 14:57

குடிக்காம இரண்டு நாள் இரு சகோ. போதை தெளிஞ்ச தான் விலைவாசி கண்ணனு தெரியும்


Rajasekar Jayaraman
ஜன 08, 2025 10:35

மாற்று கட்சி கூட்டம் கூடவே விடாமல் கைது இவனுங்க ஆதரவு என்றால் முழுபாதுகாப்பு சட்டம் சந்தி சிரிக்கிறது வினைக்கு எதிர்வினை கண்டிப்பாக உண்டு.


புதிய வீடியோ