உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை: அண்ணாமலை

சட்டசபை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை: அண்ணாமலை

மதுரை: ''சட்டசபையில் தீர்மானம் போட்டதால், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை,'' என்று வல்லாளப்பட்டியில் நடந்த பாராட்டு விழாவில், பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு வந்த அவருக்கும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கும் ஊர் மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியது. இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை நேரில் சந்தித்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுடன் பேசி சுரங்கத்திட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார். அதன்படி உள்ளூர் விவசாயிகள், கிராம மக்கள் பிரதிநிதிகள் டில்லி சென்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். அவரும் திட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார். அதன்படி திட்டம் ரத்து செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை வரவேற்று அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இதையடுத்து மதுரை அழகர்கோவில் வல்லாளப்பட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அண்ணாமலை ஆகியோருக்கு ஊர் மக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. விழாவில் பேசிய பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ''இந்த நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஊர் மக்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ''ஒரு பிரச்னை என்றால் எப்படி அணுக வேண்டும் என்று அனைவருக்கும் இந்த ஊர் மக்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு அனைவருக்கும் நன்றி. பிரதமர் மோடியின் துாதுவராக கிஷன் ரெட்டி இங்கு வந்திருக்கிறார். ஸ்டாலினுக்கு பதில் சொல்லாமல் போய் விட்டால் நான் தவறு செய்து விட்டதாக அர்த்தமாகி விடும். ''தமிழக சட்டசபையில் தீர்மானம் போட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை. சட்டசபையில் வாராவாரம் தீர்மானம் போடுகிறீர்கள். அது எல்லாம் நடக்கிறதா? மாநில அரசு மிரட்டலுக்கு எல்லாம் மோடி பயந்தவர் இல்லை. உக்ரைன்- ரஷ்யாவில் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் மோடி, மாநில அரசுக்கு பயப்படுகிறாரா? ''இந்த ஊர் மக்கள் அன்புக்கு மட்டும் தான் மோடி இதை செய்துள்ளார். 11 ஆயிரம் பேர் மீது வழக்கு போட்ட வேலையை தான் மாநில அரசு செய்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Saai Sundharamurthy AVK
ஜன 31, 2025 06:47

திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்து கையெழுத்து போட்டதே ஸ்டாலின் தலைமையிலான தமிழக ஊராட்சி தான். காரணம், 2ஜி ஊழல் செய்தது போல இந்த சுரங்க ஏலத்தை டெண்டர் போட்டு எடுத்து விட முயற்சி செய்தது திருட்டு திராவிடம். ஆனால் மத்தியில் மோடி ஆட்சி உள்ளதால் முயற்சி கை கூடவில்லை. அதனால், விரக்தியடைந்த ஸ்டாலினார் அதுவரை அமையாக இருந்த மக்களை ஒருபக்கம் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய தூண்டி விட்டு, மறுபக்கம் திட்டத்தை மத்திய அரசு தான் கை விட முடியும் என்று தெரிந்தும் கூட, சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்டு, திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்து நாடகம் ஆடினார்! ஸ்டாலினின் இந்த மொள்ளமாறி செயலை புரிந்து கொண்ட அண்ணாமலை சரியாக பயன்படுத்தி, போராட்டக்காரர்களை டெல்லிக்கே அழைத்துச் சென்று மத்திய அரசுடன் பேச வைத்து, திட்டத்தை கைவிட செய்து விட்டார். அதனால் தான் இன்று அந்த ஊர் மக்கள் அண்ணானலைக்கு நன்றி தெரிவித்து பாராட்டியிருக்கின்றனர். ஸ்டாலின் வந்த போது, லாரியில் கூட்டி வந்த கூட்டம் அல்ல இன்றைய கூட்டம்....!!! அண்ணாமலையை பாராட்டிய கூட்டம் சுத்தமான அக்மார்க் முத்திரை கொண்ட ஒரிஜினல் ஊர் மக்களே தான்.....!! திராவிட திருட்டுத்தனமே, தனக்கு ஆதாயம் இருந்தால் தான் திட்டங்களை ஏற்கும். இல்லையெனில், தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விடும். இது தான் ஸ்டாலினின் திராவிட மாடல்.....


Mediagoons
ஜன 30, 2025 22:57

கார்போரேட்டு கொள்ளைகள் மூலம் மக்களை கவரும் வட இந்திய திட்டங்கள் தமிழகத்தில் எடுபடாது என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டது மோடி அரசு


rasaa
ஜன 30, 2025 22:02

முதல்வரே, மக்கள் அனைவரும் முட்டாள்கள் இல்லை. நீங்கள் நடத்தும் நாடகம் என்றும் எடுபடாது.


தாமரை மலர்கிறது
ஜன 30, 2025 20:27

அண்ணாமலையும் ஸ்டாலினும் என்ன சொன்னாலும், டங்ஸ்டன் திட்டம் மீண்டும் மதுரைக்கு வரும். முழுமையாக கைவிடப்படவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும்.


திகழ்ஓவியன்
ஜன 30, 2025 20:01

டங்ஸ்டன் திட்டம் யார் அறிவித்தது , இதற்கான கேபினட் மீட்டிங்கில் முருகன் கலந்து கொண்டாரே அப்போ என் தடுக்கவில்லை


Raj S
ஜன 31, 2025 01:56

ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணும்... பிஜேபி இந்த திட்டம் வேண்டாம்னு சொல்லல... அந்த ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்கிறோம் அதனால் இந்த திட்டத்தை கைவிடுகிறோம்னு சொல்றாங்க... ஆனா திருடர்கள் முன்னேற்ற கழகமோ மற்ற தமிழகத்தின் ஏமாற்றும் கட்சிகளோ இந்த திட்டம் வேண்டாம்னு சொல்றாங்க எதுக்கு ஓட்டுக்காக... இத புரிஞ்சிக்க தெளிவு வேண்டும் அது உங்களுக்கு சீக்கிரம் வரும்னு நம்பறேன்...


அப்பாவி
ஜன 30, 2025 19:59

இவிங்க ரெண்டுபேர் சொல்றதும் தப்பு. நாந்தான் முதன் முதலில் ஒரு வருஷம் முன்னாடியே டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாதுன்னு பதிவு போட்டேன்.


Sakthi,sivagangai
ஜன 30, 2025 23:06

அப்படியே ஓயாமல் அந்த பாஞ்சி லட்சத்தை பிச்சை கேட்டு நீ பதிவிடுவதையும் சேர்த்து சொல் அப்புசாமி.


arumugam mathavan
ஜன 30, 2025 19:45

மக்களே! இவர்களே ஆட்சியில் இருந்தால் பல மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பார்கள்...டாஸ்மாக் உட்பட...


சசிக்குமார் திருப்பூர்
ஜன 30, 2025 19:34

இந்த கூட்டத்தில் கொடியும் இல்லை கரை வேட்டியும் இல்லை


தி. குமார், மதுரை
ஜன 30, 2025 19:06

ஸ்டாலினுக்கு 92 பஸ்ல கூட்டி வரப்பட்ட கூட்டம். இது மக்கள் கொடுத்த வரவேற்பு. மதுரை கடச்சனேந்தலில் கிராமத்து மக்கள் கூடை கூடையாக காய்கறிகளை கொண்டு வந்து வரவேற்றார்கள்!


varatha rajan
ஜன 30, 2025 18:56

சட்டசபை தீர்மானத்தால் டங்ஸ்டன் சுரங்கம் ரத்தாகவில்லை என்று நமது மலை சொல்கிறார் உண்மையிலேயே பொய் மலை யாழ் தான் இரத்தாகியுள்ளது என்பதை பொய்மழை நிரூபிப்பாரா நிரூபியுங்கள்


சமீபத்திய செய்தி