உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூரில் கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூரில் விஜய் பிரசாரம் செய்த இடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் ஆய்வு செய்தார். அவர் அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.கரூரில் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று (செப் 29) கரூரில் விஜய் பிரசாரத்தின் போது நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=35u5qqh6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் விவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Vijay D Ratnam
செப் 29, 2025 16:13

இதெல்லாம் சொம்மா சம்ப்ரதாயம். வருவாய்ங்க, விசாரிப்பாய்ங்க, கண்ணீர் உடுவாய்ங்க, மத்திய அரசுக்கு அறிக்கை கொடுப்பாய்ங்க அம்புட்டுதேன். அறிக்கை யாருகிட்ட போகும் கனிமொழியின் நன்பரும் திமுகவின் அண்டர்க்ரவுண்ட் பிஸ்னஸ் பார்ட்னரிடம் போகும். அவரு தூக்கி ஓரமா வச்சிடுவார், சோலி முடிஞ்சி. விஜய் பேசியது பெரிய தவறு. திமுகவை போட்டு வறுத்துக்கொண்டு இரு, நோ ப்ராப்ளம். திமுக பாஜக இடையே கள்ளக்கூட்டணி இருக்கிறது, அண்டர் கிரவுண்ட் டீலிங்ஸ் இருக்குது என்று எப்படி உண்மையை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கலாம். அதெல்லாம் தப்பு ஜி, ரொம்ப தப்பு ஜி. இப்படியே விஜயை விட்டால் அடுத்த மீட்டிங்கில் திமுக பாஜக இடையே இருக்கும் கமிஷன்ஸ், ஷேர்ஸ், கான்டராக்ட்ஸ், செட்டில்மெண்ட்ஸ் குறித்தெல்லாம் பேச ஆரம்பித்துவிடுவார். இதையே காரணமாக வைத்து எடப்பாடி அத்து உட்டுப்போட்டார்னா பொறவு நோட்டவோடதான் போய் கபடி ஆடணும்.


Sundar R
செப் 29, 2025 15:37

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் என்றவுடன் 65 பேர்களுக்கு தடாலடியாக இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக மக்களின் பணத்தை கொள்ளையடித்து பத்து லட்சம் ரூபாய் வீதம் சுடலை கொடுத்து விட்டான். கரூரில் நாற்பத்தோரு பேர் இறந்த நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இதுவரை ஒன்றும் செய்யாமல் தன்னுடைய குலத்தொழிலை செய்து கொண்டிருக்கிறான்.


mampop
செப் 29, 2025 15:05

தனி மனித தவறுகளுக்கு தற்கொலை மரணங்களுக்கு , சாராய மரணங்களுக்கு இழப்பீடு கொடுப்பதை நிறுத்தி சமுதாயத்தை திருத்துங்கள்.....அரசாங்கம் உருப்பட மக்கள் வசதி மேம்பட இலவசங்களை நிறுத்துங்கள்..மக்களின்‌சாவுகளை தவிருங்கள்


PATTALI
செப் 29, 2025 14:06

இறந்தவர்களின் உறவுகளுக்கு என்னக்கொடுத்தாலும் ஈடுசெய்யமுடியாது என்றாலும், முடிந்தவரை நல்ல இழப்பீட்டையாவது கொடுங்கள்.


theruvasagan
செப் 29, 2025 15:59

இழப்பீடு கொடுக்கட்டும். ஆனால் அரசாங்க நிதியிலிருந்து அல்ல. தவறுக்கு காரணமானவர்களிடம் இருந்து வசூல் செய்து கொடுக்ப்பட வேண்டும்


Field Marshal
செப் 29, 2025 17:06

எவ்வளவு கொடுக்கணும் ? இழப்பீட்டுக்கு வருமான வரி விதிக்கப்படுமா ?


Natchimuthu Chithiraisamy
செப் 29, 2025 17:28

100 கோடியா


PATTALI
செப் 29, 2025 13:58

தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் நேர்மையாக அரசியல் செய்ய தயாராகயில்லை. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே. அதனால் கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு முழுமையான அரசியல் மாற்றம் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதனை மக்கள் ஒட்டு மூலமாக மட்டும்தான் கொண்டுவரமுடியும். இதனை மக்கள் புரிந்துகொண்டால் மட்டுமே அடையமுடியும். .


Senthoora
செப் 29, 2025 13:47

தேர்தல் வருது இல்லையா?


ponssasi
செப் 29, 2025 12:56

அரசியல்வாதிகள் அனைவருக்கும் ஒரே ரத்தவகைதான் இருக்கும். ஆளும் கட்சி எதிர்க்கட்சி லெட்டர் பேட் கட்சி என அனைவரும் தேர்தல் மனதில் வைத்தே வருகிறார்கள். இதற்கு முன் ஏற்பட்ட எதற்கும் யாரும் செல்லவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை