வாசகர்கள் கருத்துகள் ( 27 )
பெரிய பதவியில் உள்ளவர்கள் வலையில் சிக்காமல் தப்பித்து விடுகின்றனர். VAO மாதிரி ஆட்கள் மாட்டிக் கொள்கின்றனர். மொத்தத்தில் யார் கையூட்டு வாங்கினாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே
பட்டா வீடு தேடி வந்துவிடும் புகார் கொடுத்த நபர் எந்த அலுவலகம் சென்றாலும் பணம் இல்லாமல் உடனே வேலையாகும். அனுபவத்தில் சொல்கிறேன்.
சூப்பர்
லஞ்சம் வாங்க யாரும் கூசுவது கிடையாது. இவர்களுக்கு ஒரு கடமையைச் செய்யக்கூட பணம் கொடுக்க வேண்டுமா? பெரிய லஞ்ச ஊழல் பேர்வழிகளை இந்து ல. ஒழிப்புத்துறை ஏன் வலையில் சிக்க வைப்பது இல்லை. பாவம் வ VAO மாதிரி ஆட்கள் தானே மாட்டிக் கொள்கிறார்கள்.
நீங்கள் எந்த காலத்தில் உள்ளீர்கள். வீடு தேடி பட்டா வருகிறது என்றால் ஆச்சரியம் தான்.
அரசு நினைத்தால் ஒரே வருடத்தில் ஒரு தனி நபரின் அனைத்து விவரங்களையும் ஆதார் கார்டு என்கின்ற ஒரு அடையாள அட்டையின் கீழ் கொண்டு வந்து விடலாம் அது எஜுகேஷன் ஆக இருக்கட்டும் லைசன்ஸ் ஆக இருக்கட்டும் பாஸ்போர்ட் ஆக இருக்கட்டும் அக்கவுண்ட் பேங்க் டீடைல்ஸ் ஆக இருக்கட்டும் அனைத்து விஷயங்களையும் ஒரே அடையாள அட்டையில் கொண்டு வருவது மிக எளிது அப்படி கொண்டுவரும் பட்சத்தில் ஒரு தனி நபரை பற்றி ஆராய்வது மிகவும் ஈசியாக போய்விடும் இதை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் நடைமுறைப்படுத்தினால் அடுத்த 10 ஆண்டுகளில் அடுத்த கட்டத்தை எட்டி விடலாம்
கஷ்டப்பட்டு படித்து போட்டி தேர்வு எழுதி வைராக்கியமாக லஞ்சம் வாங்க கூடாது என பணிக்கு சேர்ந்தவர்களின் நிலை இதை விட மோசமாக உள்ளது... பழம் தின்று கொட்டை போட்டவர்கள் எல்லாம் தப்பித்து விட பணத் தேவை அதனால் பதட்டம் விளைவு காரியம் சிதறிவிட்டது.... இனி இவருக்கு பட்டா மாறுதல் போன் போட்டு அழைத்து தரப்படும் சட்டப்படி கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் தர வேண்டும் ம்ம்ம் அது முடியாது பிறகு என்ன இடைத்தரகர் மூலம் இதைவிட பெரிய பணத்தை கொடுத்து காரியம் முடியும்..... துண்டு சீட்டு பட்டா தான் நீதிமன்றத்தில் பேசும் இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய பத்திரம் ஊமையாகிவிடும்.
பட்டா பெயர்மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கு VAO கைது செய்யப்படுகிறார். இதன் பிறகு பட்டா பெயர்மாற்ற விண்ணப்பம் என்னவாகும்? வருவாய்த்துறை யில் பணியாற்றிய VAO வை ஜெயிலுக்கு அனுப்பிய புகார் தாரருக்கு உரிய நிவாரணம் கிடைக்குமா? அதாவது லஞ்ச ஒழிப்பு துறையே முன்னிற்று பட்டா பெயர் மாற்றதை செய்துகொடுக்குமா? ஏனென்றால் வருவாய்த்துறை யில் பணியாற்றிய VAO வை ஜெயிலுக்கு அனுப்பிய புகார் தாரருக்கு VAO கைதுக்கு பின் வருவாய்த்துறை அல்லது அடுத்ததாக வரும் VAO அவ்வளவு சுலபமாக பட்டா பெயர்மாற்றம் செய்து கொடுப்பார்களா? விவரம் அறிந்தவர்கள் VAO கைதுக்கு பின் நடக்கும் புகார்தாரரின் நிலை மற்றும் பட்டா பெயர் மாற்ற விண்ணப்ப நிலை பற்றி கூறுங்கள்.
பட்டா தேவை இல்லாத ஆணி. வருவாய் துறை VAO க்கு லஞ்ச வருமானத்தை கொடுப்பதற்க்காக பட்டா முறையை வைத்துள்ளார். பதிவு செய்த sale டீட் டை இப்போதுள்ள மாடர்ன் சர்வே layout டன் இணைத்து பட்ட முறை ஒழித்து VAO க்கள் லஞ்ச முறையை ஒழிக்க வேண்டும் இதில் வேறு online ல் பட்டா என்று பொய்யா சொல்லிக்கிட்டு திரியற மாநில முதல்வர் ஸ்டாலின். online அப்ளை செய்துவிட்டு ஏரியா க்கு தகுந்தாற்போல் பத்திரங்கள் அனைத்தும் சரியாக சமர்ப்பித்தாளும் VAO க்கு அவரது மனைவிக்கு பூ, புடவை, நகை, தினசரி சாப்பாடு வாங்க VAO க்கு 5000 முதல் 30000 வரை லஞ்சம் கொடுத்தால்தான் பட்ட பெயர்மாற்றம் நடக்கிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு பிறர் வயிற்று எரிச்சலில் வாங்கும் பணத்தில் பொண்டாட்டிகளுக்கு பூ மற்றும் அல்வா வாங்கி கொடுப்பதில் அப்படி என்ன மகிஷ்ச்சியோ தெரியவில்லை. பதிவுத்துறையின் மற்றும் வருவாய்துறையின் அமைப்பை கூட்டாக restructure செய்து தற்போது நில அளவை சர்வே GPS தொழில்நுற்பதில் எல்லைகள் வரையறுக்கப்படுவதாலும், அந்த சர்வே விவரங்களை வைத்து பட்டா என்ற முறையை ஒழித்து பதிவு செய்யும்போதே தரப்படும் sale டீட் போதுமானதாக சட்டத்தை இயற்றி பதிவு பாத்திரமே பட்டா என சிறிது சட்ட மாற்றம் செய்து பட்டா முறையை ஒழித்து VAO க்கள் அடிக்கும் லஞ்ச லூட்டியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். திராவிட பிரிவினை வாத தூண்டும் ஆட்சியில் இதெல்லாம் நடக்குமா?
உங்களுடன் ஸ்டாலின் பட்டா மாறுதலுக்கு மனு கொடுத்தேன் ஒரு வாரத்தில்₹1 லஞ்சம் இல்லாமல் பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டது அனுபவத்தில் சொல்கிறேன்.
மதிப்புக்குரிய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட் கோவில்பட்டி தாலுகா தாசில்தாராக உள்ளவர் லஞ்சத்தில் திளைக்கிறார். கண்டு கொள்ள மாடீர்களா
புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது மேலிடத்தில் உத்தரவு வர வேண்டும் அவர்களாக எதுவும் செய்ய மாட்டார்கள்.
கையும் களவுமாக பிடிபட்டவுடன் , உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அரசு நினைத்தால் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளுவர் இந்த மாவட்டத்தில் பணி செய்த அனைத்து ரெவென்யு டிபார்ட்மெண்டையும் ஜெயிலுக்கு அனுப்பலாம் ஆனால் ரெவென்யு டிபார்ட்மெண்ட் தப்பு செய்ய கட்டாயப்படுத்துபவர்கள் அரசுதான் அரசு என்றால் அரசியல்வாதிகள் சில நல்ல மனிதர்களை வேண்டும் என்று பல தவறான விஷயங்களை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள் எந்த ஒரு அதிகாரியும் தவறு செய்ய வேண்டும் என்று தான் உட்காரும் சேரில் இருந்து எண்ணுவது கிடையாது அவர்கள் குடும்பத்தை நினைத்து குடும்பம் ட்ரான்ஸ்பர் ஆகினால் கஷ்டப்படும் தன்னுடைய குழந்தைகளின் படிப்பு கஷ்டப்படும் என்று நினைத்து அரசியல்வாதிகள் கூறுகின்ற தவறான நிலைப்பாட்டையும் செய்கின்றார்கள் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் இதற்கு ஒரே தீர்வு மிக ஆழமாக அனைவருக்கும் சமமான ஒரு தீர்வு என்றால் அதில் ஒன்று பணத்தை ஆன்லைன் பண்ணிவர்த்தனையாக மாற்ற வேண்டும் ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் நிப்பாட்ட வேண்டும் ரூபாய் நோட்டு இருந்தால் பத்து ரூபாய் மட்டும் தான் இருக்க வேண்டும் அப்படி சில கட்டுப்பாடுகளை அரசு பொதுநிலையில் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வரலாம் நாட்கள் ஆகும்
தமிழ் நாட்டில் எந்த துறையிலும் லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் நடைபெறாது. இது நாடே அறிந்த உண்மை. அதுவும் கருணாநிதி குடும்பம் ஆட்சி செய்கிறதென்றால் லஞ்சம் கோடுக்காமல் எதுவும் நடைபெறாது. அத்தனை மந்திரிகளும் ஊழலில் திளைத்தவர்கள். கீழ் நிலையில் இருக்கும் அதிகாரி ஊழியர் வானுக்கும் லஞ்சம் மேல் அதிகாரிவராக்கி பகிந்து அளிக்கப்படுகிறது. V A O லஞ்சம் வாங்கினால் அது தாசில்தார் மற்றும் கலெக்டர் வரை பகிரப்படுகிறது. இல்லைஎன்றால் இவ்வளவு பேர்கள் பிடிபட்டும் லஞ்சம் வாங்குவது நிற்கவில்லை. என் நண்பர் ஒருவர் ராணி பேட்டை மாகாணம், அரக்கோணம் தாலுக்கா, நெமிலி கிராமத்தி 2014 வருடம் கிரயம் பெற்ற நிலத்திற்கு பட்டா மிகவும் தாமதமாக வழங்க பட்டது. அதில் கிறையத்தாரின் பெயரிலும் உறவு முறைகளிலும் எழுத்து பிழைகளும் கண்டறிந்து 2022 DECEMBER முதல் SEPTAEMBER 2025 வரை பலமுறை நெமிலி கிராம தாசில்தாருக்கும் ராணி பெட் ஆட்சியருக்கு EMAIL மூலம் புகார்கள் அனுப்பியதில் எந்த முன்னேற்றமும் இல்லை. எந்த புகாருக்கும் ஒப்புதலும் வருவதில்லை. தாசில்தார் அலுவலகத்தில் நடை பெற்ற தவறை சுட்டிக்காண்பித்து ஆட்சியருக்கு தகவல் அனுப்பியும் எந்த முன்னேற்றமும் இல்லை. சமீபத்தில் அரசு அலுவலகங்களில் பெறப்பபட்ட மனுக்களின் பேரில் முப்பது நாட்களுக்குள் தீர்வு எட்டப்பட வில்லை என்று புகார் தாக்கப்பட்டால் ஆட்சியருக்கு ருபாய் 25000/ அபராதம் விதிக்கப்படும் என்று HIGH COURT JUDGE தீர்ப்பு அறிவித்துள்ளார். மற்றும் தமிழ் நாடு முதன்மை செயலர் CHIEF SECRETARY ஒரு சுற்றிக்கையில் POSTAL MAIL OR ஈமெயில் மூலமாக பெறப்பட்ட மனுக்களுக்கு உடன் ஒப்புதல் அனுப்பவேண்டும் என்றும் முப்பது நாட்களுக்குள் தீர்வு எட்டப்பவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சம்பத்தை பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்ளது. 2022 DECEMBER ரிலிருந்து 2025 SEPTEMBER வரை அனுப்பிய நினைவூட்டு கடிதங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், சம்பந்த பட்ட நபர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் லஞ்சம் பெற வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறார்கள் என்று தான் புரிந்து கொள்ளவேண்டும்.ஆட்சியருக்கு அனுப்பிய புகார்களுக்கு அப்புறமும் நடவடிக்கை இல்லை என்றால் பெறப்படும் லஞ்சத்தில் அவர்களுக்கும் பங்கு உள்ளது என்பது தன யதார்த்தம். எனவே இந்த ஆட்சி போய் BJP ஆட்சி வந்து அண்ணாமலை முதல்வராக பதவி ஏற்றால் தான் தமிழ் நாட்டிற்கு விடிவு காலம்
ஒரு பட்டா மாறுதலுக்கு 20 ஆயிரம் என்றால் இதுவரை எத்தனை மாறுதல் செய்திருக்கின்றார் என்று பார்த்து அதனை இருபாயிரம் லஞ்சமாக வாங்கியிருப்பார் .அவருடைய வீட்டை சோதனைக்குட்படுத்தி பணம் பொருள்களை பறிமுதல் செய்தால் லஞ்சம் வாங்குபவர்களுக்கு பயம் வரும் .அதுபோன்று ஏதும் செய்ததாக செய்திகள் வந்துபார்த்ததில்லை .லஞ்சம் வாங்கி பிடிபடுபவர்கள் சிறைக்கு சென்ற செய்தியையும் அவர்கள் வேளையில் இருந்து நீக்கப்படாதையும் பார்த்ததில்லை .அதனால் இது ஒரு தொடர்கதைதான் .