உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைவேந்தர்கள் கூட்டம்: பன்னீர்செல்வம் கண்டனம்

துணைவேந்தர்கள் கூட்டம்: பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை : 'முதல்வர் தலைமையில் நடந்த பல்கலைகளின் துணைவேந்தர்கள் கூட்டம், பயனற்ற ஏமாற்றம் அளிக்கும் கூட்டம்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் தலைமையில் நடந்துள்ளது. உயர் கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் எனக் கூறிவிட்டு, உயர் கல்வி மேம்பாடு குறித்து வாய் திறக்காதது, கூட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விட்டது.சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை உட்பட பெரும்பாலான பல்கலைகள், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத அவலநிலை நீடிக்கிறது. கிட்டத்தட்ட 75 சதவீதம் ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.பல பல்கலைகளில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பல பதவிகள் காலியாக உள்ளன. இதற்கெல்லாம் தீர்வு கண்டால்தான், உயர் கல்வி உயரத்தில் இருக்கும். இதற்கு தீர்வு காணாமல், உலகத்தரம் வாய்ந்த கல்வி குறித்து பேசுவது, போகாத ஊருக்கு வழி தேடுவது.எனவே, பல்கலைகளின் தற்போதைய நிதி நிலைமை குறித்து முதல்வர் ஆராய்ந்து, தேவையான நிதியை பல்கலைகளுக்கு ஒதுக்க வேண்டும். துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட அனைத்து காலியிடங்களையும் நிரப்பி, நிர்வாகத்தை சீரமைக்க, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சூரியா
ஏப் 21, 2025 20:07

எள்ளு எண்ணைக்குக் காயுது: எலிப்புழுக்கை எதற்காகக் காய்கிறது?


Saravanaperumal Thiruvadi
ஏப் 21, 2025 19:30

இவ்வளவு நாள் வேந்தராக இருந்த ஆளுநரின் பல்கலைகழக அவலட்சனங்களை பன்னீர் செல்வம் பட்டியல் இட்டு இருக்கிறார் ஆளுனருக்கு ஒரு கண்டனமும் தெரிவித்து இருக்கலாம்


LEON GLADSTON X
ஏப் 21, 2025 12:24

அய்யா நீங்க ஜெயா அருளால், டீக்கடை இல் கணக்கு பார்த்து கொண்டிருந்த நீங்க, தமிழ் நாட்டுக்கே கணக்கு பார்த்தீங்க, எடப்பாடி ஆட்சியில்....


rajan
ஏப் 21, 2025 07:38

பன்னீர் செல்வம் aiadmk ஆட்சி காலத்தில் செய்யப்பட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை