உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வர் Vs துணை முதல்வர்; உதயநிதிக்கு பவன் கல்யாண் பொளேர்

துணை முதல்வர் Vs துணை முதல்வர்; உதயநிதிக்கு பவன் கல்யாண் பொளேர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: ''சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் அழிந்து போவார்கள்,'' என தமிழக துணை முதல்வர் உதயநிதியை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். கடந்த ஆண்டு செப்., மாதம் சென்னையில் நடந்த மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி( அப்போது அமைச்சராக மட்டும் இருந்தார்) பேசும்போது, ' மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் ' என்றார். இது பலத்த சர்ச்சையை உண்டாக்கியது. பா.ஜ.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், திருப்பதியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதாவது: சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது. ஆனால், நீங்கள் அழிந்து போவீர்கள். சனாதன தர்மத்தை தாக்கி பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதசார்பின்மை ஆகாது.அண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் தலைவர் ஒருவர், வைரஸ் போன்ற சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்றார். சனாதனத்தை தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் தான் அழிந்து போவார்கள். இவ்வாறு உதயநிதியை, பவன் கல்யாண் மறைமுகமாக தாக்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Constitutional Goons
அக் 04, 2024 13:56

சனாதானம் எண்ட்ரன்ஸ் ஒன்று எங்கும் இருந்ததில்லை . சனாதானம் எண்ற பெயரில் இவர்கள் போடும் எலும்பு துண்டுக்கு அலையும் பிச்சைக்காரர்களும் இல்லை இந்தியர்கள்.


Constitutional Goons
அக் 04, 2024 13:54

சனாதானத்தை எதிர்த்தவர் துணை முதல்வராகிவிட்டார். வீரவசனம் கதை எழுதி பவன் கல்யாண் நடிக்க போகலாம்.


அப்பாவி
அக் 04, 2024 08:12

50, 60 வருஷமா வளர்த்தியாத்தான் இருக்காங்க.


முருகன்
அக் 04, 2024 00:26

நேரடியாக பேச தைரியம் இல்லாத துணை முதல்வர் பதவி வந்ததும் கடவுள் மீது பாசம்


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 04, 2024 08:14

முருகன் பெயரில் ஒளிந்து இருக்கும் இருநூறு உடன் பிறப்பே.. ஆந்திராவில் ஹிந்துக்களுக்கு என்றுமே மதிப்பு உண்டு. இங்க தான் திராவிட கொடுங்கோல் ஆட்சியில் சர்வாதிகார ஆட்சியில் ஹிந்துக்களின் உரிமை தட்டி பறித்து உள்ளது. பெயரில் முருகன் மனதளவில் அந்நியன்.. அவனே திராவிடன். வெட்கித்தலைகுனியனும்


Mohammad ali
அக் 03, 2024 23:47

வேங்கைவயலில் கலந்தவனை கண்டுபிடிக்க துப்பில்லை.இதுல சனாதானத்தை பேசுறாங்க .


Easwar Kamal
அக் 03, 2024 23:31

ஹலோ பவன் எங்களுக்கும் தெரியும் உன்னுடைய சனாதனம். உன்னுடைய மூன்றாவது ரஷ்யா மனைவியை மணம் முடிக்க தலையை தொங்க விட்டு சர்ச்சுக்குள் இருந்தியே உன்னை எல்லாம் இப்போ திருப்பதி கோவில் ullava விட்டுருக்கானுங்க. உங்களுடைய அரசியல் விளையாட்டுக்கு கடவுளை எந்த அளவுக்கும் எடுத்துட்டு போவீங்க .படம் பிடிச்சி ரெண்டு பேரும் kattenengalae, மக்கள் மறக்க மாட்டார்கள்.


krishna
அக் 04, 2024 04:17

EERA VENGAAYAM AVARADHU PERSONAL LIFE PATHI EEN PESARA.


aloprecha
அக் 04, 2024 08:21

ஆரம்பித்த நாளில் இருந்து இந்து என்றால் மட்டுமே வாந்தி எடுக்கும் மென்டல்கள் திராவிடம்


venkat venkatesh
அக் 03, 2024 23:07

MR. Pawan is great


தமிழ்நாட்டுபற்றாளன்
அக் 03, 2024 22:51

லட்டுல மாட்டு கொழுப்ப கலந்தவனை கண்டு பிடிக்க துப்பில்லை , சனாதனம் பற்றி பேசுகிறான்


Sathyanarayanan Sathyasekaren
அக் 03, 2024 23:58

தமிழ்நாட்டு பற்றாளன், சொந்த பெயரில் கருத்து எழுத வக்கில்லையா?? இல்லை உண்மை பெயர் வெளியே சொல்ல முடியாத அளவு கேவலமானதா? கத்திக்கு பயந்து மதம் மாறிய நீ உன் வேலையை பார். மாட்டு கொழுப்பு கலந்த கம்பெனி மீது சட்டபூர்வமான நடவடிக்கை இருக்கு . நீ முதலில் பிரியாணியில் ஒழுங்காக விற்பனை செய்.


krishna
அக் 04, 2024 04:21

MIRUGA JENMAMAA NEE IVVALAVU KODURAMAA EEN ALAYARA 200 ROOVAA GOPALAPURAM KOTHADIMAI. 2 VARUSHAM AACHU VENGAIVAYAL WATER TANK.UNNAI PONDRA AATKAL ADHAI KUDITHAAL BUDHI VARUM.2 VARUDAMAA THUNDU SEATTU EEN KANDU PIDIKJA VILLAI ENA MUDHALIL KELU.


T.sthivinayagam
அக் 03, 2024 21:56

பெருமாளுக்கு சனிக்கிழமை விஷேச நாள் என்று வணங்குபவன் பக்தன் உலகாண்ட பெருமாளுக்கு எல்லாநாளும் விஷேசம் என்று வணங்குபவன் பகுத்தறிவு உள்ள பக்தன்.யாருக்கு பொளேர்


aloprecha
அக் 04, 2024 08:24

நல்ல உளறல். மற்ற நாளில் அல்லாவை கும்பிடுவான்?


Kalyanaraman
அக் 03, 2024 21:45

சபாஷ் பாராட்டுக்கள். பிஜேபியைவிட நல்லா வேலை பார்க்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை