உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதீத கற்பனையில் விஜய்: சொல்கிறார் திருமாவளவன்

அதீத கற்பனையில் விஜய்: சொல்கிறார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்ற வகையில் த.வெ.க., கட்சி தலைவரும், நடிகருமான விஜய்யின் கற்பனை அதீதமாக உள்ளது,'' என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

நீங்கள் என்ன பாயாசமா?

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில், அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் ''நம்பி வருவோரை அரவணைப்பது தான் எங்களின் பழக்கம். எங்களை நம்பி, 2026 சட்டசபை தேர்தலில் களம் காண வருவோருக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து, அதிகார பகிர்வு வழங்குவோம்,'' எனக் குறிப்பிட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lorwpx2z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும்,யார் அரசியலுக்கு வந்தாலும், குறிப்பிட்ட கலரை பூசிவிட்டு, பூச்சாண்டி காட்டி மக்களை ஏமாற்றுகிறது. இவர்கள், 'அண்டர் கிரவுண்ட்' அரசியல் செய்து கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டு, 'பாசிசம்' என்கின்றனர். சிறுபான்மை, பெரும்பான்மை என முழு நேரம் சீன் போடுவது, இவர்களுக்கு வேலையாக போய்விட்டது. அவர்கள், 'பாசிசம்' என்றால், நீங்கள் என்ன பாயாசமா? மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி எனக்கூறி மக்களை ஏமாற்றுகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.

பழையது

இது தொடர்பாக நிருபர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி: விஜய் எப்படி செயலாற்ற போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். அரசியல் இயல்பான களம் அல்ல. எல்லா தொழில்களிலும் போட்டி உண்டு. அரசியலிலும் உண்டு. எல்லா தொழில்களிலும் சூழ்ச்சி உள்ளது. அரசியலிலும் சூழ்ச்சி உள்ளது. ஆனால், முன்கூட்டியே ஒன்றை தீர்மானிக்க முடியாத களம். கடைசி நேரத்தில் எதுவும் நிகழலாம் என்ற ஒரு களம் அரசியல் களம். விஜய் வழங்கிய முன்மொழிவுகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு கட்சிகளால் முன்மொழியப்பட்டவை. புதிதாக அவர் எதையும் சொல்லவில்லை.

கேள்விக்குறி

புதிதாக கூட்டணி ஆட்சிக்கான அச்சாரம் ஒன்றை போட்டு உள்ளார். உண்மையிலேயே அவர் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையில், அந்த சூழலில் இந்த நிலைப்பாட்டை அவர் எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான். புதிய சூழலில் அவர் இதை அரசியல் உத்தியாக கையாண்டு இருக்கிறார். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். எங்களுக்காக சொல்லப்பட்டது என கற்பனை செய்ய முடியாது.

கூட்டணி தொடரும்

தி.மு.க.,வை முதல் எதிரி என்று அறிவித்து இருப்பதும், தி.மு.க., கூட்டணியை குறி வைத்து இருப்பதும் தான் விஜய் உரையின் சாராம்சம். தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முடியுமா என ஒரு தூண்டில் போட்டு உள்ளார் என பலரும் அலசி, ஆராய்ந்து, ஆருடம் சொல்கின்றனர். தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. வலுவாக இருக்கிறது. வலுவாக தொடரும்.

முரண்பாடு

பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை பாசிசம் என்பது பா.ஜ.,வை அடையாளபடுத்தும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. பாசிச எதிர்ப்பு என்றால் பா.ஜ., எதிர்ப்பு தான். பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்கிறார் என்றால், பா.ஜ., எதிர்ப்பை நையாண்டி செய்கிறாரா? கிண்டல் செய்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. அது அவருடைய கருத்துக்கு முரண்பாடாக அமைந்து இருக்கிறது.

நையாண்டி

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என சொல்லும் அதேவேளையில், மதத்தின் பெயரால் நடக்கும் பிளவுவாதத்தை எதிர்ப்போம்' என சொல்கின்ற அதே உரையில் பாசிசத்தை எதிர்ப்பவர்கள் நையாண்டிக்கு உரியவர்கள், கேலிக்குரியவர்கள் என்ற வகையில் பேசி உள்ளார். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா என கேட்டுள்ளார். இந்த இரண்டுக்கும் என்ன பொருத்தம் என தெரியவில்லை. அது நக்கல், நையாண்டி தொனியோடு வெளிப்பட்டு உள்ளது.

நெருடல்

பாசிசம் என்றால் என்வென்று அவர் உணர்ந்திருக்கிறாரா என தெரியவில்லை. தமிழகம், இந்தியாவை பொறுத்தவரை பா.ஜ., கோட்பாடு தான் பாசிச கோட்பாடு. பா.ஜ., எதிர்ப்புதான் பாசிச எதிர்ப்பு. பாசிசத்தை பா.ஜ.,வை எதிர்க்கக்கூடிய அனைவரையும் நையாண்டி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அவருடைய நிலைப்பாட்டில் தடுமாற்றம் இருக்கிறது. பா.ஜ., எதிர்ப்பில் அவருக்கு முரண்பாடு, நெருடல் உள்ளதாக உணர முடிகிறது.

சாத்தியமில்லாதது

ஜனநாயக களத்தில் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க முடியாது. எதிர்க்க முடியாது. தவிர்க்க முடியாது. வருபவர்களை வரவேற்பதுதான் ஜனநாயக பண்பு. ஆனால், திரையுலகில் கிடைத்துள்ள புகழ், செல்வாக்கு அப்படியே அரசியல் களத்திற்கு வரும் என சொல்ல முடியாது. அதுவும் இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்ற வகையில் அவருடைய கற்பனை அதீதமாக உள்ளது.வாமன அவதாரத்தில் பூவுலகை 3 அடியில் அளந்தார் இறைவன் என்று சொல்வார்கள்.அதுபோல கட்சி தொடங்கி மாநாடு என்ற ஒரு அடியை எடுத்து வைத்து அடுத்த அடியை கோட்டையில் வைப்போம் என்று சொல்வது அரசியலுக்கு ஒவ்வாதது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. அரசியலில் படிப்படியாக தான் உயர முடியும். வேகமாக உயரலாம். வேகமாக இலக்கை அடையலாம். எவ்வளவு வேகமாக இலக்கை சென்று அடைய முடியும் என்றாலும்கூட படிப்படியாக தான் சென்று அடைய முடியும். ஆனால் ஒரு அடி மாநாடு அடுத்த அடி ஆட்சி பீடம் என்ற நிலையில் விஜய்யை வழிநடத்தியிருக்கிறார்கள். அது சாத்தியமில்லாதது.

தமிழர் வர வேண்டும்

ஜனநாயக சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்க வேண்டும். மொழி, இனம் என்பது முக்கியமானது. அந்த உரிமைகள் முககியமானது உணர்வுகளும் முக்கியமானது.தீவிரமான மதவெறியும் சாதி வெறியும் கொண்ட ஒருவர் தமிழர் ஆக இருப்பதால் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும். அவர் ஜனநாயக தமிழராக இருக்கவேணடும் சாதியற்றவராக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

R K Raman
அக் 31, 2024 11:07

இந்த ஆளை இன்னும் ஏன் வெளியே விட்டிருக்காங்க. ஜெயிட்லி தயவுல தப்பிக்க முயற்சி செய்து பார்த்தார். ஆனால் கடவுள் திட்டம் வேற. சீக்கிரம் தூக்கி உள்ளே போடுங்க


AMLA ASOKAN
அக் 29, 2024 10:58

திருமாவளவன் கருத்தை காட்டிலும், நேற்று வரை கறுப்பு பண முதலையாக, உல்லாச வாழ்கை வாழ்ந்து விட்டு, விலை உயர்ந்த பல வகையான கார்களில் பவனி வந்து விட்டு, எந்த ஒரு விழாவிலும், சோகத்திலும் மக்களுடன் தொடபில்லாமல் இருந்து விட்டு, இன்றுவரை 10 அடி தொலைவில் நின்று கை அசைத்துக் கொண்டு, ஒரு ரசிகர் கூட்டத்தை நம்பி அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்துவிடுவேன் என்று அதீத நம்பிக்கை கொண்டு விஜய்யால் தனது ஆவேச பேச்சால் சர்ச்சையை தான் உண்டாக்க முடியுமே தவிர மக்கள் இவரை ஒரு நடிகனாக தான் என்றைக்கும் பார்ப்பார்கள். இவரின் கனவு பலிக்கப்போவதில்லை. இவரும் அறிவாளி இல்லை. இவருடன் எந்த ஒரு அறிவாளியும் இல்லை. மாறாக கட்சி மாறிகள் இவருடன் ஒன்றிய பதவிகளுக்காக, காசுக்காக இணையலாம். தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை .


karupanasamy
அக் 29, 2024 10:36

கருணாநிதி போட்ட சோத்த தின்ன உணக்கே இவ்வளவு அதப்புன்னா அவனுக்கு எவ்வளவு இருக்கும்.


SIVA
அக் 29, 2024 09:32

திமுக ஆட்சியில் இருக்கும் வரை இந்த தன்மான கூட்டணி உடையாது, இந்த கூட்டணி உடையும் பின்னர் அவர்களை தங்களுடன் கூட்டணி சேர்த்து நாம் ஆட்சியை பிடிக்கலாம் என்று வீணாக கனவு காண்பதில் அர்த்தம் இல்லை, சுயநலம் பாராமல் விட்டு கொடுத்து ஒரு வலுவான கூட்டணி அமைத்தால் இந்த ஆட்சியை எளிதில் வீழ்த்தலாம், ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டால் இந்த கூட்டணி காலி பெருங்காய டப்பா தான் ...


sankaranarayanan
அக் 29, 2024 08:46

வாமன அவதாரத்தில் பூவுலகை 3 அடியில் அளந்தார் இறைவன் என்று சொல்வார்கள் என்று கூறிய குருமாவிற்கு இதிகாச புராணங்களின் மீது எவ்வளவு பற்று ஆசை இருந்தால்தான் இப்படி பேசுவார் பேசமுடியும் வாழ்த்துக்கள் இனி இவரை சனாதன தர்மத்திற்கு ஆதரவாளர் என்றே கூற வேண்டும் இன்னும் பேசுங்கள் தர்மன் தழைத்தோங்க இவரைப்போன்ற எதிர் கட்சித்தலைவர்கள் புராண கதைகளைப்பற்றி பேசுவது நாட்டிற்கே நல்லது சனாதன தர்மம் தழைத்தோங்கும்


Rpalnivelu
அக் 29, 2024 08:10

//தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும்// அப்போ தெலகு பரம்பரையை கொண்ட நீங்களோ, திருட்டு பரம்பரையின் ஸ்டாலின் உதயநிதி பதவி விலக வேண்டுமா?


RAAJ68
அக் 29, 2024 08:05

கடவுள் மறுப்பு துவேஷம் கொண்டவர் வாமன அவதாரம் பற்றி பேசலாமா.


பேசும் தமிழன்
அக் 29, 2024 08:01

திமுக எதிர்கட்சியாக இருந்த போது.... கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசியவர்கள் .... இன்று ஆட்சிக்கு வந்த பின்னர்... இருமினால் குற்றம்... தும்மினால் குற்றம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்களே....... அல்லக்கை இவன் வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா.


நிக்கோல்தாம்சன்
அக் 29, 2024 06:33

facism அதாவது பாசிசம் என்பதின் பொருள் அறிவீர்களா திருமா ? அமெரிக்க போன்ற வெளிநாட்டு மதவாதிகள் செய்வது பாசிசம், அவர்கள் கூறுவதை அடிபணிந்து செய்யும் தமிழக அரசியல்வாதிகளும் பாசிஸ்டுகள் தானே, அப்போ உங்களுக்கு என்று தனிமனித புத்தி கிடையாதா? விஜய் யாரோ எழுதி கொடுத்ததை அப்படியே ஒப்பித்து சென்றுள்ளார் அதனை கற்பனை என்று கொள்வீர்களா, இல்லை மனனம் செய்து ஒப்பிக்கும் மாணவன் என்று கொள்வீர்களா? இன்னமும் யாரோ சொல்லி அதன்படி நடக்கும் உங்களை எந்த வகையில் சேர்ப்பது


PV, முத்தூர்
அக் 29, 2024 06:02

ஏற்கனவே இருப்பவைதான், இருந்தாலும் உங்களாள் ஒரு .... முடியவில்லையோ. உனக்குத்தேவை முன்று சீட்டு நாலு நோட்டு, யார் கொடுத்தாலும் தாவும் முதல்ஆள். உங்க தலைவர் ஆட்சியில் பங்குதர தயாரா?


அன்பு
அக் 29, 2024 20:13

குருமா திமுகவின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியில் பங்கு பேச்சு எல்லாம் நடிப்பு.


முக்கிய வீடியோ