வாசகர்கள் கருத்துகள் ( 35 )
நடிகன் என்றமுறையில் விஜயை பிடித்திருந்தால் சினிமாவை பார்க்கலாம். நம்பி ஓட்டு போட அவர் தேர்ந்த அரசியல்வாதி அல்ல.
"தங்கள் கட்சியால் விமர்சிக்கப்படும் முக்கிய கட்சியின் வலியுறுத்தலின் அடிப்படையிலேயே, எந்தக் கட்சியுடனும் சேர விடாமல், தன் கட்சியை மடைமாற்ற காய் நகர்த்தப்படுகிறதோ?" சந்தேகமில்லாமல் இது உறுதி விஜய் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்கிறார். கூரையேறி கோழி பிடிக்க இயலாதவரா வானமேறி வைகுந்தம் போவார்? தனது கட்சியையே தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியாதவரை தேர்தல் ஆலோசகராக வைக்க யார் சொன்னார்கள்? வாக்குக்கு பணம் கொடுப்பது தவறென்றாலும், ஆலோசனைக்கு கொடுக்கும் கோடிகளில் ஒரு பகுதியை மக்களுக்கு கொடுத்தாலே வாக்கு விழுமென்றுதானே இதுவரை கழகங்கள் காட்டியுள்ளன
தேர்தல் வியூகம் என்பது மொள்ளமாரித்தனம். யாருக்கு எப்ப பணம் குடுக்கணும் என்பதுதான் இவர்கள் செய்யும் வேலை.
இது திமுகவின் ராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டு. முதலில் பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி, இப்போதும் பிரசாந்த் கிஷோர் அவர்களுக்காக வேறுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு திமுகவிற்கு வெற்றி தேடித்தர பணிக்கப்பட்டுள்ளார் என்றே தோன்றுகிறது. எப்படியோ கிஷோர் காட்டில் பணமழைதான்
கட்சியில் இஷ்டத்துக்கு கூட்டணி பற்றி பேசுகிறார்கள் ஆரம்பித்து ஒரு வருஷம் கூட ஆகல தங்கள் கட்சியையே இவர் கட்டுக்குள் வைத்துக்கொள்ள தெரியாத அறிவாளி தலைவர் இவரை நம்பி ஒரு கூட்டம் ? இவரும் பாசிசம், பாயசம் என்று மட்டுமே பேசுகிறார். தைரியமாக எந்த கட்சி என்று சொல்ல தைரியம் அற்றவர் . கோழை வீதிக்கு வந்தாச்சு என்ன பயம் முதலில் இந்திய விடுதலை போராட்டத்தில் இருந்து இவர் இந்திய வரலாறையும் தமிழக வரலாறையும் நன்கு ஆழமாக படிக்கவேண்டும். சினிமா பார்த்து தனக்கும் எல்லாம் தெரியும் என்று பேசக்கூடாது எந்த பிரச்சினையையும் ஆரம்பம் முதல் தெரிந்து அதன்பிறகு சபையில் பேசவேண்டும். மூன்றுமணிநேரம் ஓடும் சினிமாவில் வரும் நாயகன் அல்ல இவர் இவர் கட்சியின் தலைவர் சிறு சொதப்பல் கூட இவரை ஜோக்கராகிவிடும் கமல் எப்படி ஆனாரோ அவரைப்போல இவரும் ஆகிவிடுவார் என்பதற்கு இவரோட பேச்சுக்கள் சாட்சி ஏதாவது ஒரு ஊடகத்துக்கு இவர் பேட்டி அளித்துள்ளாரா ? இவரை பற்றி பேசினால் பதில் அளிக்கத்தெரியுமா ? இவரை பற்றி அறிவாலய வேட்டை நாய்கள் அதாங்க ஜால்றா ஊடகங்கள் சும்மா எல்லோரும் பில்ட்டப் பன்றாங்க திமுக இவரை கையாள்வதற்கு தனது வேட்டை நாய்களை வைத்துள்ளது என்று கூட தெரியாமல் இருக்கிறார். மொத்தத்தில் திமுகவின் சதி வலைக்குள் நன்றாக விழுந்துவிட்டார்.
தோழமை என்ற பெயரில் பாஜக உள்ளே வந்துவிடக்கூடாது என்று 2019 நாடாளுமன்றத்தேர்தல் சமயத்திலேயே எடப்பாடிக்கும் திமுக தலைமைக்கும் திரைமறைவு கூட்டணி தொடங்கியிருக்கவேண்டும் . அது 2021ல் ஆழமாக வலுப்பெற்றிருக்கவேண்டும் எந்தவிதத்திலும் தேசியக்கட்சி தமிழகத்தில் வளர்ந்துவிடக்கூடாது என்று காங்கிரெஸ்ஸை முதலில் காலடியில் போட்டு அழுத்தி வைத்துக்கொண்டார்கள் திமுக எதிர்ப்பு வாக்குகளால் பாஜக ஆதாயம் பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அண்ணாதிமுகவை ஒன்று சேரவிடாமல் பிரித்து, வழக்குகள் எதையும் அண்ணாதிமுக அமைச்சர்கள் மேல் போடாமல் எடப்பாடியையே தனது வழிக்கு கொண்டுவந்தார்கள் முதலில் விஜயகாந்தை எழுந்திரிக்கவிடாமல் செய்தனர் கமலஹாசனை ஒருவழியாக்கிவிட்டனர் எடப்பாடி மூலம் அண்ணாதிமுகவை தனித்தனியாக்கிவிட்டனர் காங்கிரெஸ்ஸை தங்கள் அடிமையாக்கிவிட்டனர் விசிக தலைதூக்கக்கூடாது என்பதற்காக விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜுனாவை பிரித்தனர் அப்படியும் தங்களது எதிர் வாக்குகள் ஒன்றுசேரக்கூடாது என்பதற்காக இப்போது விஜய் மூலம் தங்கள் காரியத்தை சாதிக்கின்றனர் எல்லாம் எதற்க்காக தமிழகத்தில் யாரும் இந்தியா , பாரதம் என்று பேசிவிடக்கூடாது , தேசியக்கட்சி எதுவும் வரக்கூடாது என்பதற்காக திமுகவுக்கு மக்கள் நலன் என்று துளியும் மக்கள் மீது அக்கறை கிடையாது கடைசி வரை தமிழகத்தை தங்கள் குடும்பம் மட்டுமே சுரண்டிக்கொண்டே இருக்கவேண்டும். கடந்த நாலுஆண்டுகளில் திமுக கையில் எடுத்த விஷயங்களை ஆழமாக பார்த்தாலே யாருக்கும் இது புரிந்து விடும். தங்களுக்கு பிரச்சினை பண்ணுபர்களை அவர்கள் கையாளும் விதமே தனிரகம் . பணம் கொடுத்து அமுக்கப்பார்ப்பார்கள் மீறினால் ஊடகங்கள் மூலம் பொய்ச்சேதி, வழக்கு , கைது ,
அப்ப கட்சி விஜய் கையில் இல்லையா?
முதலில் தான் ஒரு சூப்பர் நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து - இதுவே பொய் அவர் தன்னை தானே நெனச்சிட்டு இருக்கார் அதுவேய முதல் தவறு இல்ல அவரை அப்படி நெனைக்க வச்சுட்டாங்க, அவர் ஒன்னும் அறிவாளி இல்லேன்னு அவருடைய சமீபத்திய கொழ கொழ பேச்சுக்கள் இருக்கு ஆரம்பமே இப்பன்னா போக போக விஜய் உங்கள நாங்க குத்தம் சொல்லல உண்மையாவெய் நீ தமிழக மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நெனச்ச கூட வச்சிருக்கிற சகதிங்களை ஒதுக்கு உன்ன நீ நம்பி வா
"வாக்குகளை விலைக்கு வாங்காதே.. நேர்மையாகச் செயல்படு... மக்களுக்காக உழை.. வெற்றி தேடிவரும்" என்று உள்ளது உள்ளபடியே, நேர்மையாக எந்த வியூக வகுப்பாளரும் சொல்வதில்லை.. அப்படிச் சொன்னால் எந்த வியூக வகுப்பாளரும் பிசினஸ் செய்ய முடியாது.. குற்றவாளியை தனது வாதத்திறமையினால் காப்பாற்றத்தான் வக்கீல்.. அதே போல மக்களை ஏமாற்றிய அல்லது மக்களுக்காக உழைக்காத அல்லது மக்கள் விரோத கட்சிகளைக் கரையேற்றத்தான் வியூக வகுப்பாளர்கள் ..... இது எந்தக்கட்சிக்கும் பொருந்தும் ......
துட்டு கொடுத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் துண்டை காணோம் நிலைமை பிறகு துணியை காணோம் சிண்டை காணோம் என்று தலையை பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான்! அரசியல் ஆலோசகர் அவர் மாநிலத்தில் டெபாசிட் இழந்தவர்! சென்ற தேர்தலில் திமுக உத்தியான துட்டு க்கு ஓட்டினால் கலலா கட்டினார்!